search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தென்காசியில் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம்
    X

    தென்காசியில் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம்

    • சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம் நாளை காலை 11 மணிக்கு நடைபெற உள்ளது.
    • கூட்டத்தில் பங்கு பெற மாற்றுதிறனாளி களுக்கான தேசிய அடையாள அட்டை , உள்ளிட்ட சான்றுகளின் நகல்களை கொண்டு வர வேண்டும்.

    தென்காசி:

    தென்காசி மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் அனைவரும் அரசின் திட்டங்கள் பயன் பெற வேண்டி மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட கலெக்டரின் தலைமையில் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நாளை காலை 11 மணிக்கு நடைபெற உள்ளது. மாற்றுத்தி றனாளிகளுக்கான சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் தென்காசி மாவட்டத்தை சேர்ந்த அனைத்து வகையான மாற்றுத்திறனாளிகள் அனைவரும் தங்களுக்கு உதவிகள் பெற மாற்றுதிறனாளி களுக்கான தேசிய அடையாள அட்டை , குடும்ப அட்டை, ஆதார் அட்டை, வாக்காளர் அட்டை ஆகியவையின் நகல்களை கொண்டு வந்து பயன்பெறலாம். இந்த தகவலை கலெக்டர் ரவிச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

    Next Story
    ×