வழிபாடு

நவராத்திரி 3-ம் நாள் நாள்: சுகபோகங்கள் அருளும் வராகி!

Published On 2025-09-24 11:00 IST   |   Update On 2025-09-24 11:00:00 IST
  • வராக நாதருக்கு வராக ரூபம் கொண்டு அன்னை காட்சி அளித்ததால் வராகி என்று அழைக்கப்படுகிறாள்.
  • வராகியை வழிபட சுக்கிரதோஷம் நிவர்த்தியாகும்.

நவராத்திரி மூன்றாம் நாளன்று அன்னை பராசக்கதி, வராகியாக வழிபாடு செய்யப்படுகிறாள். அம்பிகையின் படைத்தளபதியாக இருப்பவள். மங்கலமய நாராயணி என்றும் அழைக்கப்படுபவள். வராக நாதருக்கு வராக ரூபம் கொண்டு அன்னை காட்சி அளித்ததால் வராகி என்று அழைக்கப்படுகிறாள்.

அன்னை வராகியை வழிபாடு செய்ய அரிசி மாவைக் கொண்டு மலர்கள் உருவத்தில் கோலம் போட வேண்டும். 20 அகல் தீபம் ஏற்ற வேண்டும். இதற்கு தேங்காய் எண்ணெய் அல்லது இலுப்பை எண்ணெய் பயன்படுத்த வேண்டும். பலாப்பழம் மற்றும் கற்கண்டு சாதம் நிவேதனம் செய்ய வேண்டும். சம்பங்கி, மருக்கொழுந்து கொண்டு பூஜிக்க வேண்டும்.

"வீற்றிருப்பாள்நவ கோணத்திலே நம்மை வேண்டும் என்று காத்திருப்பாள் கலி வந்தணுகாமல்என் கண்கலக்கம் பார்த்திருப்பாள் அல்லள் எங்கே என்றங்குச பாசம் கையில் கோத்திருப்பாள் இவளே என்னை ஆளும் குலதெய்வமே" என பாடி துதித்தால் வேண்டும் வரம் அருளுவாள்.

அன்னை வராகி ஆதிபத்தியம் கொண்ட கிரகம் சுக்கிரன். எனவே வராகியை வழிபட சுக்கிரதோஷம் நிவர்த்தியாகும். வாழ்க்கையில் உள்ள தடைகளை நீக்கி, வெற்றி, செல்வம், செழிப்பை தருவாள். குடும்பத்தில் இருக்கும் குழப்பங்கள், சண்டைகள் விலகி, அமைதி உண்டாகும். குழந்தை பாக்கியம் கிடைக்கும், கல்வியில் முன்னேற்றம் உண்டாகும். தொழில் மற்றும் எந்த ஒரு காரியத்திலும் இறங்கினாலும் அந்த காரியத்தில் வெற்றி கிடைக்கும்.

Tags:    

Similar News