புதுச்சேரி
கூட்டணி கட்சிக்குள் பிரமுகர்களை இழுக்க போட்டா போட்டி- புதுவை அரசியலில் பரபரப்பு
- கூட்டணி கட்சிக்குள்ளேயே ஒரு கட்சியிலிருந்து, மற்றொரு கட்சிக்கு இழுக்கும் யுக்தி புதுவை அரசியலில் உருவாகியுள்ளது.
- அரசியல்கட்சிகள் தங்கள் நிர்வாகிகளை தக்க வைப்பதிலும் பெரும் முயற்சிகள் எடுத்து வருகின்றனர்.
புதுச்சேரி:
நாடு முழுவதும் பாராளுமன்ற தேர்தலுக்கான பணிகளை அரசியல் கட்சிகள் தொடங்கியுள்ளது. புதுவையில் அரசியல் கட்சிகள் பாராளுமன்ற தேர்தலை எதிர்கொள்ள பணிகளை தொடங்கியுள்ளன.
புதுவை மக்களிடம் செல்வாக்கை பெற மக்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி ஊர்வலம், ஆர்ப்பாட்டம், சத்தியாகிரகம் ஆகியவற்றை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் ஒரு கட்சியிலிருந்து மற்றொரு கட்சிக்கு நிர்வாகிகளை இழுக்கும் வேலையும் நடந்து வருகிறது.
கூட்டணி கட்சிக்குள்ளேயே ஒரு கட்சியிலிருந்து, மற்றொரு கட்சிக்கு இழுக்கும் யுக்தி புதுவை அரசியலில் உருவாகியுள்ளது.
காங்கிரஸ் கூட்டணியில் இடம்பெற்று சட்டசபையில் எதிர்கட்சி அந்தஸ்து பெற்ற தி.மு.க. காங்கிரஸ் கட்சியின் நிர்வாகிகள், பிரமுகர்கள், அனுதாபிகளை தங்கள் பக்கம் இழுத்துள்ளனர்.