தமிழ்நாடு செய்திகள்

விஜயுடன் சந்திப்பு- பிரவீன் சக்ரவர்த்தி விளக்கம்

Published On 2025-12-09 09:11 IST   |   Update On 2025-12-09 09:11:00 IST
  • கூட்டணியில் குழப்பம் என யாராவது காங்கிரசில் இருந்து கூறினார்களா?
  • தி.மு.க.- காங்கிரஸ் கூட்டணியில் எந்த குழப்பமும் இல்லை.

தமிழக வெற்றிக்கழகத் தலைவர் விஜய் உடன் ராகுல் காந்தியின் வியூக வகுப்பாளர் பிரவீன் சக்ரவர்த்தி கடந்த வாரம் சந்தித்து பேசியது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. சென்னை பட்டினம்பாக்கத்தில் உள்ள விஜயின் இல்லத்தில் இச்சந்திப்பானது நடைபெற்றது.

இதற்கு முன்னதாக, முன்னதாக திருச்சியில் நடைபெற்ற திருமண விழாவில் காங்கிரஸ் மூத்த தலைவர் திருச்சி வேலுச்சாமியுடன் விஜயின் தந்தையும், இயக்குநருமான எஸ்.ஏ.சந்திரசேகரும், முன்னாள் தமிழக காங்கிரஸ் தலைவரான திருநாவுக்கரசரை செங்கோட்டையனும் சந்தித்து பேசியதும் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. அடுத்தடுத்து காங்கிரஸ் தலைவர்களுடன் த.வெ.க.வினரின் சந்திப்பு அக்கட்சியுடன் த.வெ.க இணைய வாய்ப்புள்ளதாக அரசியல் நோக்கர்கள் கருத்து தெரிவித்தனர்.

இந்த நிலையில், விஜயை சந்தித்ததில் எந்த தவறும் இல்லை என்று ராகுல்காந்தியின் வியூக அமைப்பாளர் பிரவீன் சக்ரவர்த்தி முதல் முறையாக விளக்கம் அளித்துள்ளார். இதுதொடர்பாக ஆங்கில இணையதளம் ஒன்றிற்கு பேட்டியளித்த பிரவீன் சக்ரவர்த்தி கூறியிருப்பதாவது:-

* எல்லா சந்திப்புகளுக்கும் பின்னால் ஒரு திட்டம் இருக்க வேண்டிய அவசியமில்லை.

* இட்லி, வடை, தோசை சாப்பிடுவது ஒரு சாதாரண சந்திப்பாகவோ அல்லது திரைப்படங்களைப் பற்றிப் பேசுவதற்கான சந்திப்பாகவோ கூட இருந்திருக்கலாம்.

* த.வெ.க தலைவர் விஜயை நான் சந்தித்ததில் எந்த தவறும் இல்லை.

* த.வெ.க.வில் இணையும் எண்ணம் கொஞ்சமும் இல்லை.

* விஜயுடனான தனது சந்திப்பால் தி.மு.க. கூட்டணியில் குழப்பம் என்பது தவறு.

* கூட்டணியில் குழப்பம் என யாராவது காங்கிரசில் இருந்து கூறினார்களா?

* தி.மு.க.- காங்கிரஸ் கூட்டணியில் எந்த குழப்பமும் இல்லை.

* த.வெ.க- காங்கிரஸ் கூட்டணி என ஊடகங்கள் மட்டுமே பேசி வருவதாக கூறினார்.

Tags:    

Similar News