தமிழ்நாடு செய்திகள்

யுபிஎஸ்சி தேர்வு முடிவுகள் வெளியீடு... முதல் 10 இடத்தில் இடம்பெற்ற தமிழ்நாடு மாணவர்கள்!

Published On 2026-03-06 15:31 IST   |   Update On 2026-03-06 15:31:00 IST
  • முதன்மைத் தேர்வு ஆகஸ்ட் 22 முதல் ஆகஸ்ட் 31, 2025 வரை நடைபெற்றது.
  • நேர்காணல் இரண்டு கட்டங்களாக நடைபெற்றது.

2025ஆம் ஆண்டிற்கான யுபிஎஸ்சி தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டுள்ளன. முதன்மைத் தேர்வை தொடர்ந்து நேர்காணல் முடிந்தநிலையில், இன்று முடிவுகள் வெளியாகி உள்ளன. இந்த ஆண்டு மொத்தம் 958 தேர்வர்கள் பல்வேறு பணிகளுக்காக (IAS, IPS, IFS)பரிந்துரைக்கப்பட்டுள்ளனர். தேர்வு முடிவுகளின்படி, அனுஜ் அக்னிஹோத்ரி அகில இந்திய அளவில் முதலிடம் பிடித்துள்ளார்.

மேலும் தமிழ்நாட்டைச் சேர்ந்த இருவர் முதல் பத்து இடங்களில் இடம்பெற்றுள்ளனர். மதுரையைச் சேர்ந்த ராஜேஸ்வரி சுவே 2ஆம் இடமும், ராஜா மொகைதீன் 7ஆம் இடமும் பிடித்துள்ளனர். கடந்தாண்டு சென்னையைச் சேர்ந்த பி. சிவச்சந்திரன் அகில இந்திய அளவில் 23-வது இடத்தைப் பிடித்து தமிழ்நாடு அளவில் முதலிடம் பெற்றார்.

தேர்வர்கள் தங்கள் முடிவுகளை யுபிஎஸ்சி-இன் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் (upsc.gov.in) பார்க்கலாம்.  

Tags:    

Similar News