தமிழ்நாடு செய்திகள்

விஜய் படித்துவிட்டு வந்து பேச வேண்டும் - அமைச்சர் மா.சுப்பிரமணியன் விமர்சனம்

Published On 2025-09-14 08:28 IST   |   Update On 2025-09-14 08:28:00 IST
  • கலைஞர் மகளிர் உரிமைத் தொகை போன்ற திட்டங்கள் விஜய் போன்றவர்கள் சொல்லி கொண்டுவரப்பட்டதல்ல.
  • திமுக அரசின் திட்டங்களால் பயன்பெறும் மக்களுக்கு தெரியும் அரசின் செயல்பாடுகள் பற்றி.

பெசன்ட்நகர்:

த.வெ.க. தலைவர் விஜய் நேற்று தனது முதல் அரசியல் பயணத்தை தொடங்கினார். மக்கள் சந்திப்பு என்ற பயணத்தை திருச்சியில் தொடங்கிய விஜய், தி.மு.க. அரசு மீது பல்வேறு விமர்சனங்களை முன்வைத்தார். இதற்கு தி.மு.க. அமைச்சர்களும் பதிலடி கொடுத்து வருகின்றனர்.

இந்த நிலையில், தி.மு.க. அரசு மீது குற்றம் சுமத்துவதற்கு முன்பாக விஜய் படித்துவிட்டு வந்து பேச வேண்டும் என மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார். மேலும் அவர் கூறுகையில்,

கலைஞர் மகளிர் உரிமைத் தொகை போன்ற திட்டங்கள் விஜய் போன்றவர்கள் சொல்லி கொண்டுவரப்பட்டதல்ல.

திமுக அரசின் திட்டங்களால் பயன்பெறும் மக்களுக்கு தெரியும் அரசின் செயல்பாடுகள் பற்றி.

இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 6.5 சதவீதம். தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சி 11.19 சதவீதம். இதெல்லாம் விஜய் படித்து தெரிந்துக்கொண்டு அதன்பிறகு குற்றம்சாட்டுவது நல்லது என்றார். 

Tags:    

Similar News