தமிழ்நாடு செய்திகள்
அ.தி.மு.க.விடம் ஆட்சியில் பங்கு கேட்கவில்லை- நயினார் நாகேந்திரன்
- தமிழ்நாட்டில் ஆட்சியில் பங்கு வேண்டும் என காங்கிரஸ் கட்சி, தி.மு.க.விடம் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.
- தி.மு.க. ஆட்சியை அகற்ற வேண்டும் என்பதே எங்களது தேசிய ஜனநாயக கூட்டணியின் நோக்கம்.
வடவள்ளி:
கோவை வடவள்ளியில் மோடி முகாம் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் தமிழக பா.ஜ.க மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் பங்கேற்று பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
தமிழ்நாட்டில் ஆட்சியில் பங்கு வேண்டும் என காங்கிரஸ் கட்சி, தி.மு.க.விடம் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. ஆனால் ஆட்சியில் பங்கு இல்லை என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறி விட்டார்.
தமிழ்நாட்டில் இருந்து தி.மு.க. ஆட்சியை அகற்ற வேண்டும் என்பதே எங்களது தேசிய ஜனநாயக கூட்டணியின் நோக்கம். அ.தி.மு.க.விடம் நாங்கள் ஆட்சியில் பங்கு கேட்கவில்லை. ஆட்சியில் பங்கு மட்டுமில்லை. எதையுமே அ.தி.மு.க.விடம் நாங்கள் கேட்கப்போவதில்லை என்றார்.