தமிழ்நாடு செய்திகள்

அரசியலில் இருந்து என்னை ஒழித்துக்கட்ட சதி- அன்புமணி மீது ராமதாஸ் தாக்கு

Published On 2026-02-12 14:52 IST   |   Update On 2026-02-12 14:52:00 IST
  • பொய்யும், புரட்டுமாக பேசுகின்றனர். எங்களை வசைப்பாடுகிறார்கள்.
  • தேர்தல் ஆணையத்தில் அடிமட்ட அதிகாரிகள் ஒருதலைபட்சமாக நடந்து கொள்கிறார்கள்.

திண்டிவனம் தைலாபுரம் தோட்டத்தில் பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

அப்போது அவர் கூறியதாவது:-

அரசியலில் இருந்து என்னை ஒழித்துக்கட்ட எதை எதையோ பேசுகிறார்கள். ஒரு கூட்டம் பொய் பேசுவதையே அரசியலாக கொண்டு செயல்படுகிறது. அந்த கூட்டத்தை நாங்கள் கட்சியில் இருந்தும், அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்தும் நீக்கி விட்டோம். அவர்களிடம் ஒரு கூட்டம் சேர்ந்து செயல்படுகிறது.

என்னை பற்றி அவதூறாக மனம் புண்படும்படியும், ஏளனமாகவும், பொய்யும், புரட்டுமாக பேசுகின்றனர். எங்களை வசைப்பாடுகிறார்கள். என்னை மட்டுமின்றி அரசியல் அனுபவம் கொண்ட பா.ம.க. கவுரவ தலைவர் ஜி.கே.மணியையும் அவர்கள் வசைப்பாடுகிறார்கள்.

டெல்லி உயர்நீதிமன்றத்தில் நமக்கு சாதகமாக 2 முறை தீர்ப்பு வந்துள்ளது. தேர்தல் ஆணையத்தின் அதிகாரிகள் சிலரை அக்கும்பல் தன் வசப்படுத்தியதால் அவர்களுக்காக தேர்தல் ஆணையம் டெல்லி உயர்நீதிமன்றத்தில் சீராய்வு மனு தாக்கல் செய்துள்ளது.

தேர்தல் ஆணையத்தில் அடிமட்ட அதிகாரிகள் ஒருதலைபட்சமாக நடந்து கொள்கிறார்கள். பாதிக்கப்பட்டவர்கள் தாக்கல் செய்யவேண்டிய வழக்கை தேர்தல் ஆணையம் செய்துள்ளது. தேர்தல் ஆணையம் சரியான திசையில் செல்லவில்லை. கூட்டணி குறித்து பேசிக்கொண்டிருக்கிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News