தமிழ்நாடு செய்திகள்

'மக்கள் பணியில் பங்கு கேட்டால் அது எப்படி சதியாகும்?' - மாணிக்கம் தாகூர்

Published On 2026-02-12 14:33 IST   |   Update On 2026-02-12 14:33:00 IST
  • “மக்கள் முடிவு செய்வார்கள் .கூட்டணி ஆட்சியா? அல்லது ஒரு கட்சி ஆட்சியா என்பதை
  • தமிழ்நாட்டில் கூட்டணி ஆட்சிக்கு இடமில்லை

தமிழ்நாட்டில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் நீடித்தாலும், வரும் தேர்தலில் வெற்றிப் பெற்றால் ஆட்சியில் பங்கு வேண்டும் என காங்கிரஸின் சில தலைவர்கள் கடந்தசில நாட்களாகவே வலியுறுத்தி வருகின்றனர். ஆனால் திமுக தரப்பில் தொடர்ந்து மறுப்பு தெரிவிக்கப்பட்டு வந்தது. அவ்வப்போது திமுக அமைச்சர்கள் இதுதொடர்பாக கருத்து தெரிவிக்க, அதற்கு பதிலளித்து இந்த மோதலை நீட்டித்து வந்தார் காங்கிரஸ் எம்.பி.மாணிக்கம் தாகூர்.

இந்நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இந்த பேச்சுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் தமிழ்நாட்டில் கூட்டணி ஆட்சிக்கு இடமில்லை எனத் தெரிவித்து காங்கிரஸ் கோரிக்கையை நேரடியாக நிராகரித்துள்ளார். மேலும், கூட்டணியைப் பிரிக்கச் சிலர் சதி செய்வதாகவும் தெரிவித்தார்.

இதற்கு நேற்றே எதிர்வினையாற்றிய காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூர், "மக்கள் முடிவு செய்வார்கள் .கூட்டணி ஆட்சியா? அல்லது ஒரு கட்சி ஆட்சியா என்பதை . 2006-ல் மக்கள் தீர்பை செயல்படுத்தாதது நம் தவறு" என தனது எக்ஸ் தளப் பதிவில் தெரிவித்திருந்தார். இது விவாதப் பொருளானது. இந்நிலையில் இன்றும் இதுதொடர்பாக தனது எக்ஸ் பக்கத்தில் ஒரு பதிவிட்டுள்ளார். அதில்,  "தோழமையில் மக்கள் பணியில் பங்கு கேட்டால் அது எப்படி சதியாகும்?" எனக் குறிப்பிட்டுள்ளார். 

மாணிக்கம் தாகூர் உள்ளிட்ட சில காங்கிரஸ் தலைவர்கள் திமுகவின் இந்த நிலைப்பாட்டில் முரண்பட்டாலும், மாநிலத் தலைவர் செல்வப்பெருந்தகை அமைதியாகவே இருக்கிறார். அனைத்தையும் தலைமை பார்த்துக்கொள்ளும் என அவ்வப்போது வெடிக்க வரும் பிரச்சனையை அமர்த்திவருகிறார். 

Tags:    

Similar News