தமிழ்நாடு செய்திகள்

பாராளுமன்ற தேர்தல் பணிகள்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவாலயத்தில் ஆலோசனை

Published On 2024-02-28 14:13 IST   |   Update On 2024-02-28 14:13:00 IST
  • மற்ற கட்சிகள் அனைத்தும் கூடுதல் தொகுதிகளை கேட்டு வருகிறது.
  • கட்சிப் பணிகள் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனைகளை வழங்கினார்.

சென்னை:

பாராளுமன்ற தேர்தலையொட்டி கூட்டணி கட்சிகளுடன் தி.மு.க. பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. இதில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக், கொங்கு நாடு மக்கள் கட்சி ஆகிய இரு கட்சிகளுடன் உடன்பாடு ஏற்பட்டுள்ளது.

மற்ற கட்சிகள் அனைத்தும் கூடுதல் தொகுதிகளை கேட்டு வருகிறது. இதனால் உடன்பாடு ஏற்படுவதில் கால தாமதம் ஏற்பட்டு வருகிறது.

இந்த பிரச்சினைகளுக்கு தீர்வு காணவும், பாராளுமன்ற தேர்தல் பணிகள் பற்றி ஆலோசிக்கவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று அண்ணா அறிவாலயம் வந்தார். அங்கு பொதுச் செயலாளர் துரைமுருகன், பொருளாளர் டி.ஆர்.பாலு, அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி மற்றும் நிர்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார்.

அடுத்ததாக கூட்டணி கட்சியினரை எந்தெந்த தேதிகளில் பேச்சு வார்த்தைக்கு அறிவாலயத்துக்கு அழைப்பது என்பது பற்றி விவாதிக்கப்பட்டது.

மேலும் வருகிற 1-ந் தேதி சென்னையில் நடைபெற உள்ள பிரம்மாண்ட பொதுக் கூட்ட ஏற்பாடுகள் குறித்தும் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.

அறிவாலயம் வந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சென்னை வடக்கு மாவட்ட கழக பொறுப்பாளராக நியமிக்கப்பட்ட ஆர்.டி.சேகர் எம்.எல்.ஏ. சந்தித்து வாழ்த்து பெற்றார்.

அப்போது கட்சிப் பணிகள் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனைகளை வழங்கினார்.

Tags:    

Similar News