இந்தியா

தேடி வரும் பக்தர்களின் பாலியல் செயல்களை ரகசியமாக பார்த்து ரசித்த சாமியார் கைது!

Published On 2025-06-29 16:40 IST   |   Update On 2025-06-29 16:40:00 IST
  • 'AirDroid Kid' என்ற ரகசிய செயலியை ரகசியமாக இன்ஸ்டால் செய்வார்.
  • பாலியல் தொழிலாளர்கள் உட்பட பல பெண்களுடன் பாலியல் செயல்களில் ஈடுபட செய்துள்ளார்.

மகாராஷ்டிராவின் பிம்ப்ரி சின்ச்வாட்டில், 29 வயது சாமியார் ஒருவர்  கைது செய்யப்பட்டார்.

குற்றம் சாட்டப்பட்டவர் பிரசாத் என்ற தாதா பீம்ராவ் தம்தார் (29) 'தெய்வீக சக்திகள்' இருப்பதாக கூறி பலரை, குறிப்பாக கருத்தரிக்க சிரமப்படும் பெண்களை ஏமாற்றினார்.

காவல்துறையினரின் கூற்றுப்படி, போலி பாபா பீம்ராவ் ஆன்மீகம் என்ற போர்வையில் பாவ்தான் பகுதியில் செயல்பட்டார். தெய்வீக சக்திகளைப் பெற்றதாகக் கூறி, பக்தர்களிடம் "நீங்கள் நான்கு முதல் ஐந்து மாதங்களில் இறந்துவிடுவீர்கள்" என்று அவர்களை ஏமாற்றி, மனதளவில் பலவீனப்படுத்தினார்.

புனித மாந்திரீகம் செய்வதாகக் கூறி, பக்தர்களைத் தனிமைப்படுத்தி, அவர்களின் தொலைபேசிகளைக் கேட்பார். பின்னர் அவர் 'AirDroid Kid' என்ற ரகசிய செயலியை ரகசியமாக இன்ஸ்டால் செய்வார். இதன் மூலம் பாதிக்கப்பட்டவரின் கேமரா, மைக்ரோஃபோன் மற்றும் GPS ஆகியவற்றை தொலைவிலிருந்து போலி பாபா அணுக முடிந்தது.

இந்த செயலியைப் பயன்படுத்தி, போலி பாபா பக்தர்களை அழைத்து, அவர்களின் உடைகள், இருப்பிடம் மற்றும் அன்றாட நடவடிக்கைகளை துல்லியமாக விவரிப்பார். இதன் அவர் மீதான அவர்களின் நம்பிக்கையை மேலும் வளர்ப்பார்.

அதிர்ச்சியூட்டும் திருப்பமாக, மரணத்திலிருந்து தப்பிக்க ஒரு தீர்வாக காதலி அல்லது பாலியல் தொழிலாளியுடன் பாலியல் உறவு கொள்ளுமாறு சில இளம் ஆண் பக்தர்களுக்கு பாபா அறிவுறுத்தினார்.

அவர்களின் மொபைல் போன்களை குறிப்பிட்ட கோணங்களில் வைக்க சொல்லி, அந்தரங்க தருணங்களை தொலைபேசி கேமரா மூலம் பார்த்து பதிவு செய்து அதை ரசியுள்ளார் பாபா.

இளம் பக்தர்களில் ஒருவர் தனது தொலைபேசி தொடர்ந்து சூடாகி வருவதைக் கவனித்தார். அவர் அதை ஒரு நண்பரிடம் கொடுத்தார், அவர் அதை மடிக்கணினியைப் பயன்படுத்தி ஸ்கேன் செய்து சந்தேகத்திற்கிடமான மறைக்கப்பட்ட செயலியைக் கண்டுபிடித்தார்.

யாரோ ஒருவர் தொலைபேசியை ரிமோட் மூலம் இயக்குவது உறுதி செய்யப்பட்டது. பாபா மட்டுமே சமீபத்தில் தனது தொலைபேசியைக் கையாண்டதாக பாதிக்கப்பட்டவர் நினைவு கூர்ந்தார். இதன்மூலம் ஏற்பட்ட சந்தேகத்தில் அவர் போலீசில் புகார் கொடுத்தார். மேலும் பாபா மீது 3 புகார்கள் வந்தன. 

போலி பாபா தாம்தார் கைது செய்யப்பட்டு, பாரதிய நியாய் சன்ஹிதா (பிஎன்எஸ்) மற்றும் மகாராஷ்டிரா நரபலி மற்றும் பிற மனிதாபிமானமற்ற, அகோரி நடைமுறைகள் மற்றும் சூனியம் தடுப்புச் சட்டம், 2013 உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

Tags:    

Similar News