இந்தியா

இந்தியாவிற்கு எதிரான நடவடிக்கைகளுக்கு வலுவான பதிலடி கொடுக்கப்படும் - ஜனாதிபதி

Published On 2026-01-28 12:07 IST   |   Update On 2026-01-28 12:07:00 IST
  • ஏழைக்களுக்காக தொடங்கப்பட்ட ஆயுஷ்மான் பாரத் திட்டத்தில் கடந்த ஓராண்டில் மட்டும் 2.5 கோடி பேர் பயன் பெற்றுள்ளனர்.
  • கடந்தாண்டு 50 ஆயிரமாக இருந்து ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் எண்ணிக்கை இந்தாண்டு 2 லட்சமாக உயர்ந்துள்ளது.

புதுடெல்லி:

பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் முதல் நாள் ஜனாதிபதி திரவுபதி முர்மு உரையுடன் தொடங்கியது. இரு அவைகளின் கூட்டுக்கூட்டத்தில் ஜனாதிபதி உரையாற்றினார்.

மத்திய அரசின் கடந்த கால சாதனைகளை விளக்கி ஜனாதிபதி திரவுபதி முர்மு உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:

* லட்சாதிபதி சகோதரிகள் திட்டத்தில் நாடு முழுவதும் 2 கோடி பெண்கள் லட்சாதிபதியாக மாற்றி உள்ளனர்.

* ஏழைக்களுக்காக தொடங்கப்பட்ட ஆயுஷ்மான் பாரத் திட்டத்தில் கடந்த ஓராண்டில் மட்டும் 2.5 கோடி பேர் பயன் பெற்றுள்ளனர்.

* எதிரிகளுக்கு எதிரான ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை மூலம் இந்தியாவின் வீரம் வெளிச்சம்போட்டு காட்டப்பட்டுள்ளது.

* ஆபரேஷன் சிந்தூர் மூலம் பயங்கரவாதிகளின் முகாம்கள் அழிக்கப்பட்டுள்ளது.

* இந்தியாவிற்கு எதிரான நடவடிக்கைகளுக்கு வலுவான பதிலடி கொடுக்கப்படும்.

* இடதுசாரி பயங்கரவாதத்திற்கு எதிராக வலுவான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது.

* நாட்டில் தற்போது இடதுசாரி பயங்கரவாதம் வெறும் 8 மாவட்டங்களில் மட்டுமே உள்ளது.

* 100-க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் இடதுசாரி பயங்கரவாதம் ஒழிக்கப்பட்டதால் மக்கள் நிம்மதியாக வாழ முடிகிறது.

* இந்தியாவில் விரைவில் இடதுசாரி பயங்கரவாதம் முற்றிலும் ஒழிக்கப்படும்.

* கடந்தாண்டு 50 ஆயிரமாக இருந்து ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் எண்ணிக்கை இந்தாண்டு 2 லட்சமாக உயர்ந்துள்ளது.

* 2 லட்சம் ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் மூலம் 2 லட்சம் நபர்களுக்க வேலை கிடைத்துள்ளது.

* உலகக்கோப்பைகளை வென்ற இந்திய மகளிர் கிரிக்கெட் அணி, மகளிர் பார்வையற்றோர் கிரிக்கெட் அணிகளுக்கு பாராட்டுகள்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News