வயநாடு நிலச்சரிவு: உயிரிழப்பு 135 ஆக அதிகரிப்பு
வயநாடு நிலச்சரிவில் சிக்கி 20-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த சம்பவம் பெரும் வருத்தத்தை ஏற்படுத்தி உள்ளது. துயரில் சிக்கி தவிக்கும் குடும்பத்தார் விரைந்து மீண்டுவர வேண்டுகிறேன். மீட்பு பணிகள் நடைபெற்று வருகின்றன என்று தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவு மற்றும் அதன் காரணமாக பலர் உயிரிழந்தது குறித்து அறிந்து மிகவும் வேதனை அடைந்தேன் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவு மிகவும் வேதனையளிப்பதாக எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
வயநாடு நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 24ஆக அதிகரிப்பு... 70 பேர் காயமடைந்துள்ளனர்.
கேரளா, வயநாட்டில் காட்டாற்று வெள்ளத்தில் தற்காலிக பாலம் அமைத்து தேசிய பேரிடர் மீட்பு படையினர் மக்களை மீட்டு வருகின்றனர்.
கேரளாவில் பெய்து வரும் தொடர் கனமழையால் வடக்கஞ்சேரி அருகே வெள்ளத்தில் மூழ்கிய ரெயில் தண்டவாளம்...
"வயநாடு நிலச்சரிவில் உயிரிழப்புகள் குறித்த செய்தி கவலை அளிக்கிறது. உயிரிழந்தோர் குடும்பத்தாருக்கு ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்துக் கொள்கிறேன். காயமுற்றோர் விரைந்து குணமடையவும், மீட்பு பணிகள் வெற்றி பெற வேண்டுகிறேன்," என குடியரசு தலைவர் திரவுபதி முர்மு எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.