இந்தியா

வக்பு வாரிய திருத்த மசோதா நாளை தாக்கல்: உத்தவ் தாக்கரே நிலை என்ன?- பட்னாவிஸ் கேள்வி

Published On 2025-04-01 19:15 IST   |   Update On 2025-04-01 19:15:00 IST
  • பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் வரும் 4-ம் தேதியுடன் முடிவடைகிறது.
  • வக்பு வாரிய சட்டத்திருத்த மசோதா நாளை மக்களவையில் தாக்கல் செய்யப்படுகிறது.

மும்பை:

ரம்ஜான் விடுமுறைக்கு பிறகு பாராளுமன்ற பட்ஜெட் கூட்டம் இன்று மீண்டும் தொடங்கியது. வரும் 4-ம் தேதியுடன் இந்த கூட்டத்தொடர் முடிவடைகிறது.

இந்த சூழலில், எதிர்க்கட்சிகள் தொடர்ந்து எதிர்த்து வரும் வக்பு வாரிய சட்டத்திருத்த மசோதா நாளை மக்களவையில் தாக்கல் செய்யப்படுகிறது.

பா.ஜ.க. எம்பிக்கள் அனைவரும் நாள் முழுவதும் அவையில் இருக்க வேண்டுமென பா.ஜ.க. கொறடா உத்தரவு பிறப்பித்துள்ளார்.

இந்நிலையில், மகாராஷ்டிர முதல் மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்டுள்ள செய்தியில், வக்பு திருத்த மசோதா நாளை பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட உள்ளது. இப்போது உத்தவ் பாளாசாகேப் தாக்கரேவின் சிவசேனா, இந்து சாம்ராட் பாளாசாகேப் தாக்கரேவின் சித்தாந்தத்தைப் பின்பற்றுமா அல்லது ராகுல் காந்தியின் அடிச்சுவடுகளைப் பின்பற்றி திருப்திப்படுத்தும் நடவடிக்கைகளைத் தொடருமா என பார்ப்போம் என பதிவிட்டுள்ளார்.

Tags:    

Similar News