இந்தியா

வக்பு திருத்த மசோதாவுக்கு எதிராக காங்கிரஸ், ஒவைசி உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல்!

Published On 2025-04-04 17:30 IST   |   Update On 2025-04-04 18:56:00 IST
  • மேல்சபையில் இன்று அதிகாலை வக்பு வாரிய திருத்த மசோதா வாக்கெடுப்பு நடத்தி நிறைவேற்றப்பட்டது.
  • AIMIM தலைவர் அசாதுதீத் ஒவைசி ஆகியோர் உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளனர்.

பாராளுமன்ற மக்களவையில் நேற்று அதிகாலை வக்பு வாரிய திருத்த மசோதா நிறைவேற்றப்பட்ட நிலையில், மேல்சபையில் இன்று அதிகாலை வக்பு வாரிய திருத்த மசோதா வாக்கெடுப்பு நடத்தி நிறைவேற்றப்பட்டது. இதற்கு காங்கிரஸ், தி.மு.க., சமாஜ்வாடி, திரிணாமூல் காங்கிரஸ் உள்ளிட்ட இந்தியா கூட்டணி கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வாக்களித்தன.

வக்பு வாரிய திருத்த மசோதாவுக்கு எதிராக வழக்கு தொடர உள்ளதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஏற்கெனவே அறிவித்து இருந்தார். வக்பு வாரிய திருத்த மசோதாவுக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்வதாக காங்கிரஸ் கட்சிப் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் இன்று காலை அறிவித்தார்.

இந்நிலையில் வக்பு வாரிய சட்டத் திருந்த மசோதாவை எதிர்த்து காங்கிரஸ் எம்.பி. முகமது ஜாவத் மற்றும் AIMIM தலைவர் அசாதுதீத் ஒவைசி ஆகியோர் உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளனர்.

"இந்த மசோதா வக்பு சொத்துக்கள் மற்றும் அவற்றின் மேலாண்மை மீது தன்னிச்சையான கட்டுப்பாடுகளை விதிக்கிறது என்றும், முஸ்லிம் சமூகத்தின் மத சுயாட்சியைக் குறைமதிப்பிற்கு உட்படுத்துகிறது என்றும் காங்கிரஸ் எம்.பி. முகமது ஜாவத் தனது மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

Tags:    

Similar News