இந்தியா
நேஷனல் ஹெரால்டு வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல்: காங்கிரஸ் நாளை ஆலோசனை
- நாளை மாலை 4 மணிக்கு காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் கூட்டம் நடைபெறும்.
- போராட்டங்கள் நடத்துவது பற்றி முடிவு.
புதுடெல்லி:
நேஷனல் ஹெரால்டு வழக்கில் காங்கிரஸ் முன்னாள் தலைவர்கள் சோனியாகாந்தி, ராகுல்காந்தி ஆகியோருக்கு எதிராக அமலாக்கத்துறை டெல்லி கோர்ட்டில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது.
இந்நிலையில், இதுபற்றி விவாதிக்க காங்கிரஸ் கட்சி தனது பொதுச்செயலாளர்கள், துணை அமைப்புகளின் தலைவர்கள், பொறுப்பாளர்கள் ஆகியோர் பங்கேற்கும் கூட்டத்துக்கு நாளை (சனிக்கிழமை) ஏற்பாடு செய்துள்ளது.
இதுதொடர்பாக காங்கிரஸ் பொதுச்செயலாளர் (அமைப்பு) கே.சி.வேணுகோபால் சுற்றறிக்கை அனுப்பி உள்ளார். அதில், நாளை மாலை 4 மணிக்கு காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் கட்சி தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தலைமையில் கூட்டம் நடைபெறும் என்று கூறப்பட்டுள்ளது.
நேஷனல் ஹெரால்டு வழக்கில் கட்சி தலைமையை குறிவைப்பதற்கு எதிராக போராட்டங்கள் நடத்துவது பற்றி கூட்டத்தில் முடிவு எடுக்கப்படுகிறது.