உள்ளூர் செய்திகள்

கலெக்டர் அலுவலகத்தில் பாதிக்கப்பட்ட பெண் மனு கொடுக்க வந்த காட்சி. 

கள்ளக்காதலியிடம் இருந்து கணவரை மீட்டு தரக்கூறி கலெக்டர் அலுவலகத்தில் பெண் மனு

Published On 2022-07-11 11:16 GMT   |   Update On 2022-07-11 11:16 GMT
  • தேனி மாவட்டத்தை சேர்ந்த பெண்ணுடன் பழக்கம் ஏற்பட, அந்த பெண்ணுடன் சேர்ந்து பாண்டியன் நகரில் கணவர் வசித்து வருவதாக கூறப்படுகிறது.
  • 20க்கும் மேற்பட்ட முறை புகார் அளித்தும் போலீசார் அவரது கணவர் மீது எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காமல் காலம் கடத்தி வருவதாக புகார்.

திருப்பூர் :

திருப்பூர் எம் .எஸ். நகர் பகுதியை சேர்ந்தவர் சுமதி- . இவருக்கு 17 வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது. இதனிடையே சுமதியின் கணவருக்கு வேறு ஒரு பெண்ணுடன் தொடர்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து கணவர் சுமதி மற்றும் மகளை விட்டு பிரிந்து சென்றார்.

தேனி மாவட்டத்தை சேர்ந்த பெண்ணுடன் பழக்கம் ஏற்பட , அந்த பெண்ணுடன் சேர்ந்து பாண்டியன் நகரில் கணவர் வசித்து வருவதாக கூறப்படுகிறது. இது குறித்து சுமதி திருப்பூர் வடக்கு காவல் நிலையம் மற்றும் திருவாரூர் காவல் நிலையம் என மாறி மாறி 20க்கும் மேற்பட்ட முறை புகார் அளித்தும் போலீசார் அவரது கணவர் மீது எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காமல் காலம் கடத்தி வருவதாக கூறப்படுகிறது.

இதனால் மனமடைந்த சுமதி தனது கணவரை அந்த பெண்ணிடம் இருந்து மீட்டு தர வேண்டும் என்று திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இன்று மனு அளித்தார். 

Tags:    

Similar News