உள்ளூர் செய்திகள்

வாலிபர் தூக்கு போட்டு தற்கொலை

Published On 2022-08-04 10:05 GMT   |   Update On 2022-08-04 10:05 GMT
  • குடும்ப தகராறு காரணமாக வாலிபர் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
  • இது குறித்து தகவல் அறிந்த பெருந்துறை சப்-இன்ஸ்பெக்டர் செந்தில் குமார் வழக்கு பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

பெருந்துறை:

பெருந்துறை கருமாண்டி செல்லிபாளையம் பாரதி நகர் பகுதியை சேர்ந்தவர் பழனி. இவரது மகன் பாலச்சந்தர் (34). இவர் வாடகை கார் டிரைவராக வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி மருதவல்லி. இவர்களுக்கு ஜெகதீஸ்வரன் என்ற ஆண் குழந்தையும், சன்மதி என்ற பெண் குழந்தையும் உள்ளனர்.

பாலச்சந்தர் மது பழக்கத்திற்கு அடிமையாகி இருந்து உள்ளார். அடிக்கடி மது குடித்து விட்டு வந்து மனைவியுடன் தகராறு செய்து வந்தார். இதனால் பாலசந்தரின் மனைவி மருதவல்லி மற்றும் தந்தை பழனி ஆகியோர் கண்டித்து உள்ளனர். ஆனாலும் பாலச்சந்தர் தொடர்ந்து மது குடித்து விட்டு வந்து குடும்பத்தின–ருடன் தகராறு செய்து வந்து உள்ளார்.

இதனால் மருதவல்லி கோபித்துக் கொண்டு குழந்தைகளை அழைத்துக் கொண்டு கோபி அருகே உள்ள கோட்டு புள்ளம் பாளையத்தில் உள்ள அவரது தாய் வீட்டிற்கு சென்று விட்டார். இதன் காரணமாக மன உளைச்ச–லில் காணப்பட்ட பாலச்சந்தர் சம்பவத்தன்று இரவு வீட்டில் தூங்க சென்று உள்ளார்.

மறுநாள் காலை வெகு நேரம் ஆகியும் வீட்டின் கதவு திறக்காததால் சந்தேகம் அடைந்த அவரது தந்தை வீட்டின் கதவை திறந்து பார்த்து உள்ளார். அப்போது பாலச்சந்தர் தூக்கில் தொங்கிய நிலையில் இருந்து உள்ளார். உடனடியாக அவரது குடும்பத்தினர் பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர். இது குறித்து தகவல் அறிந்த பெருந்துறை சப்-இன்ஸ்பெக்டர் செந்தில் குமார் வழக்கு பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News