உள்ளூர் செய்திகள்
போலீசார் வாரிசுகளுக்கு கருணை அடிப்படையில் பணி நியமன ஆணை
- காவல் துறை தகவல் பதிவு உதவியாளர், வரவேற்பாளர் ஆகிய பணிகளுக்கு பணிமன அணை வழங்கப்பட்டு வருகிறது.
- போலீஸ் சூப்பிரண்டு சசிமோகன் நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கி 29 பேருக்கு பணி நியமன ஆணைகளை வழங்கி வாழ்த்து தெரிவித்தார்.
ஈரோடு:
தமிழக காவல்துறையில் பணியின்போது உயிரிழந்த 1,132 போலீசாரின் வாரிசு களுக்கு கருணை அடிப்ப டையில் பணி நியமனம் வழங்க முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தர விட்டார்.
கருணை அடிப்படையில் பணி நியம னத்தையும் சென்னையில் முதல்-அமைச்சர் தொடங்கி வைத்தார்.
அதைத்தொடர்ந்து முதற்கட்டமாக 912 பேருக்கு கருணை அடிப்படையில் பணி வழங்க உத்தரவிடப்பட்டு உள்ளது. காவல் துறை தகவல் பதிவு உதவியாளர், வரவேற்பாளர் ஆகிய பணிகளுக்கு பணிமன அணை வழங்கப்பட்டு வருகிறது.
அதன்படி ஈரோடு மாவட்டத்தில் பணியின் போது மரணம் அடைந்த போலீசாரின் வாரிசுகள் 29 பேருக்கு பணி நியமன ஆனைகள் வழங்கும் நிகழ்ச்சி ஈரோடு போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் நடந்தது.
போலீஸ் சூப்பிரண்டு சசிமோகன் நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கி 29 பேருக்கு பணி நியமன ஆணைகளை வழங்கி வாழ்த்து தெரிவித்தார்.