செய்திகள்
ஸ்லோ பாய்சன் கொடுத்து ஜெயலலிதாவை கொன்று விட்டனர்- அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பேச்சு
ஸ்லோபாய்சன் கொடுத்து ஜெயலலிதாவை கொலை செய்து விட்டனர் என அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பரபரப்பாக குற்றம்சாட்டி பேசினார். #ADMK #TNMinister #DindigulSrinivasan #TTVDhinakaran #Sasikala
திண்டுக்கல்:
திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை சட்டமன்ற தொகுதி அ.தி.மு.க நிர்வாகிகள் ஆலோசனைக்கூட்டம் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தலைமையில் நடந்தது. கூட்டத்தில் அவர் பேசியதாவது:-
தி.மு.க, அ.தி.மு.க என பாகுபாடு பார்க்காமல் அனைத்து தொகுதிகளிலும் வளர்ச்சி பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தனக்கு ஒரு கண் போனாலும் எதிரிக்கு 2 கண் போகவேண்டும் என தினகரன் நினைக்கிறார்.
ஜெயலலிதா இருந்தபோது அவருக்கு சசிகலா துணையாக இருந்ததை வைத்துக் கொண்டு எல்லோரையும் மிரட்டியதை போல் தற்போதும் மிரட்டலாம் என பார்க்கிறார்.
இப்போது அவர்கள் உத்தமர் போல பேசி வருகிறார்கள். ஜெயலலிதாவின் வாரிசே நான்தான் என தினகரன் கூறி வருகிறார். வழக்கில் இருந்து விடுபடுவதற்காக ஜெயலலிதாவை சிக்கவைத்து விட்டு கருணாநிதி உதவியை நாடியவர் தினகரன். அதனால்தான் ஜெயலலிதா தான் உயிரோடு இருந்தவரை அவரை வீட்டிற்குள் அனுமதிக்கவே இல்லை. அவரால் அ.தி.மு.க அரசை ஒன்றும் செய்ய முடியாது.
இவ்வாறு அவர் பேசினார். #ADMK #TNMinister #DindigulSrinivasan #TTVDhinakaran #Sasikala
திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை சட்டமன்ற தொகுதி அ.தி.மு.க நிர்வாகிகள் ஆலோசனைக்கூட்டம் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தலைமையில் நடந்தது. கூட்டத்தில் அவர் பேசியதாவது:-
தி.மு.க, அ.தி.மு.க என பாகுபாடு பார்க்காமல் அனைத்து தொகுதிகளிலும் வளர்ச்சி பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தனக்கு ஒரு கண் போனாலும் எதிரிக்கு 2 கண் போகவேண்டும் என தினகரன் நினைக்கிறார்.
ஜெயலலிதா இருந்தபோது அவருக்கு சசிகலா துணையாக இருந்ததை வைத்துக் கொண்டு எல்லோரையும் மிரட்டியதை போல் தற்போதும் மிரட்டலாம் என பார்க்கிறார்.
இந்த ஆட்சி, கட்சியை எப்படியாவது ஒழிக்க வேண்டும் என ஸ்டாலினுடன் கூட்டணி சேர்ந்து முயற்சி செய்து வருகிறார். சர்க்கரை நோயாளியாக இருந்த ஜெயலலிதாவிற்கு எதைக்கொடுக்ககூடாதோ அதை வேண்டுமென்றே கொடுத்து ஸ்லோ பாய்சன் கொடுப்பது போல அவரை சசிகலா குடும்பத்தினர் கொலை செய்து விட்டனர்.
இவ்வாறு அவர் பேசினார். #ADMK #TNMinister #DindigulSrinivasan #TTVDhinakaran #Sasikala