செய்திகள்
நக்கீரன் கோபால் கைதுக்கு டிடிவி தினகரன் வரவேற்பு
ஆளுநர் குறித்து செய்தி வெளியிட்டதற்காக நக்கீரன் கோபால் கைது செய்யப்பட்டதை அமமுக துணை பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வரவேற்றுள்ளார். #NakkeeranGopal #TTVDhinakaran
சென்னை:
நக்கீரன் வாரப் பத்திரிகையின் ஆசிரியர் கோபால் இன்று காலை புனே செல்வதற்காக சென்னை விமான நிலையத்துக்கு சென்றபோது அவரை போலீசார் கைது செய்தனர். சிந்தாதிரிப்பேட்டை போலீஸ் நிலைய மாடியில் உள்ள திருவல்லிக்கேணி துணை கமிஷனர் அலுவலகத்துக்கு கொண்டு செல்லப்பட்டு அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
நக்கீரன் கோபால் கைதுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ உள்ளிட்ட தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், நக்கீரன் கோபால் கைது செய்யப்பட்டதை அமமுக துணை பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வரவேற்றுள்ளார். எந்தவித ஆதாரமும் இல்லாமல் தனிநபர்கள் மீது அவதூறாக செய்திகளை வெளியிடுவது தவறு என்றும் அவர் கூறியுள்ளார். #NakkeeranGopal #TTVDhinakaran
நக்கீரன் வாரப் பத்திரிகையின் ஆசிரியர் கோபால் இன்று காலை புனே செல்வதற்காக சென்னை விமான நிலையத்துக்கு சென்றபோது அவரை போலீசார் கைது செய்தனர். சிந்தாதிரிப்பேட்டை போலீஸ் நிலைய மாடியில் உள்ள திருவல்லிக்கேணி துணை கமிஷனர் அலுவலகத்துக்கு கொண்டு செல்லப்பட்டு அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
பேராசிரியை நிர்மலா தேவி கைது தொடர்பான செய்தியில் கவர்னர் மாளிகையை தொடர்புப்படுத்தி எழுதியதாக அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் நக்கீரன் கோபால் கைது செய்யப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், நக்கீரன் கோபால் கைது செய்யப்பட்டதை அமமுக துணை பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வரவேற்றுள்ளார். எந்தவித ஆதாரமும் இல்லாமல் தனிநபர்கள் மீது அவதூறாக செய்திகளை வெளியிடுவது தவறு என்றும் அவர் கூறியுள்ளார். #NakkeeranGopal #TTVDhinakaran