இந்தியா
null

சி.பி.ஐ. விசாரணைக்கு ஆஜராக டெல்லி சென்றடைந்தார் த.வெ.க. தலைவர் விஜய்

Published On 2026-01-12 10:37 IST   |   Update On 2026-01-12 11:17:00 IST
  • விஜயுடன் ஆதவ் அர்ஜூனா, நிர்மல்குமாரும் வந்துள்ளனர்.
  • மத்திய அரசின் Y பிரிவு பாதுகாப்பு அடிப்படையில் விஜய் செல்லும் அனைத்து இடங்களிலும் டெல்லி காவல்துறை பாதுகாப்பு அளிக்கிறது.

கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக டெல்லியில் உள்ள சி.பி.ஐ. அலுவலகத்தில் ஆஜராக தமிழக வெற்றிக்கழகத் தலைவர் விஜய் டெல்லி வந்தடைந்தார்.

சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் புறப்பட்டு டெல்லி வந்தடைந்தார். அவருடன் ஆதவ் அர்ஜூனா, நிர்மல்குமாரும் வந்துள்ளனர்.

மத்திய அரசின் Y பிரிவு பாதுகாப்பு அடிப்படையில் விஜய் செல்லும் அனைத்து இடங்களிலும் டெல்லி காவல்துறை பாதுகாப்பு அளிக்கிறது.

காலை 11 மணி அளவில் சி.பி.ஐ. அலுவலகத்தில் ஆஜராகும் விஜயிடம் அடுக்கடுக்கான கேள்விகளை அதிகாரிகள் கேட்க உள்ளதால் விசாரணை பல மணி நேரம் நீடிக்கலாம் என கூறப்படுகிறது. 

Tags:    

Similar News