செய்திகள்

சட்டம் மூலம் ஸ்டெர்லைட் ஆலையை மூட வேண்டும்- வைகோ

Published On 2018-06-07 08:04 GMT   |   Update On 2018-06-07 08:04 GMT
தமிழக சட்டசபையை கூட்டி ஸ்டெர்லைட் ஆலையை மூடுவதற்கான காரணங்களை விரிவாக சொல்லி சட்டம் கொண்டு வந்து ஆலையை மூட வேண்டும் என்று வைகோ தெரிவித்துள்ளார். #MDMK #Vaiko #SterlitePlant
பீளமேடு:

ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ கோவை விமான நிலையத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது கூறியதாவது:-

மத்திய அரசு கொண்டு வந்த நீட் என்ற மரண கயிறு தமிழகத்தில் தாழ்த்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மாணவர்களை சுக்கு நூறாக்கி அவர்கள் தற்கொலை செய்து கொள்ளும் முடிவுக்கு தள்ளி உள்ளது.

திருச்சியில் பஸ் டிரைவர் மகள் சுபஸ்ரீ நீட் தேர்வு தோல்வியால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது மிகுந்த வேதனை அளிக்கிறது. ஏற்கனவே அனிதாவும், பிரதீபாவும் இதே நீட் தேர்வால் உயிரிழந்து உள்ளனர்.

நீட் தேர்வு மூலம் சிறந்த டாக்டர்களை உருவாக்க முடியும் என்ற வாதம் பொய்யானது. தமிழகத்தை சேர்ந்த தணிகாசலம் உள்ளிட்ட பல டாக்டர்கள் வெளிநாட்டில், வெளி மாநிலத்தில் சிறந்த மருத்துவர்களாக உள்ளனர்.

தமிழகத்தில் பிளஸ்-2வில் 91.9 சதவீதம் தேர்ச்சி அடைந்த மாணவர்கள் நீட் தேர்வில் 34-வது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளனர். பிளஸ்-2 வில் 65 சதவீதம் பெற்ற பல மாநிலங்கள் முன்னணி இடத்தில் உள்ளது.

தமிழக மாணவர்களை அழிப்பதே மத்திய அரசின் நோக்கம். ஸ்டெர்லைட் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ராம்நாத் ஆலையை அனுமதி வாங்கி கண்டிப்பாக நடத்துவோம் என கூறி உள்ளார். அவருக்கு என்ன ஆணவம்?

மாசு கட்டுப்பாட்டு வாரியம் பிறப்பித்த ஆணையை காட்டி ஆலையை மூட தமிழக அரசு உத்தரவிட்டு இருப்பது சரியான நடவடிக்கை அல்ல என சட்ட வல்லுனர்கள் தெரிவித்து உள்ளனர்.


தற்போதைய ஆணைப்படி இருந்தால் ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் இயக்க விட வாய்ப்பு உள்ளது. எனவே சட்டசபையை கூட்டி ஆலையை மூடுவதற்கான காரணங்களை விரிவாக சொல்லி சட்டம் கொண்டு வந்து ஆலையை மூட வேண்டும். அப்போது தான் ஆலையை திறக்க முடியாது.

மகாராஷ்டிராவில் ஆலையை உடைத்த போது அனில் அகர்வால் ஏன் உயர் நீதிமன்றம், உச்ச நீதிமன்றம் செல்லவில்லை. ஸ்டெர்லைட் ஆலை தலைமை நிர்வாக அதிகாரி ராமநாத் போராடுபவர்கள் சமூக விரோதிகள் என கூறி உள்ளார்.

நானும் பல போராட்டங்கள் நடத்தி உள்ளேன. அப்படி என்றால் நானும் சமூக விரோதியா? அவர் நாவை அடக்கி பேச வேண்டும். போராட்டம் நடத்துபவர்கள் சில அமைப்புகள் மூலம் பணம் பெற்று எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள் என்று கூறி உள்ளார். இது போன்ற கருத்துக்களை கூற வேண்டாம்.

ஸ்டெர்லைட் ஆலையை தொடர்ந்து ஓட்டுவோம் என கூறி உள்ளார். அவ்வாறு ஓட்டினால் ஆலை இருக்காது.

ஸ்டெர்லைட் ஆலை பாக்கெட்டில் தமிழக அரசு உள்ளது. மோடி பாக்கெட்டில் ஸ்டெர்லைட் முதலாளியா? பணமா என்பது தெரியவில்லை.

இவ்வாறு அவர் கூறினார். #MDMK #Vaiko #SterlitePlant
Tags:    

Similar News