கொலைகள் தொடர்ந்தால்... ஈரானுக்கு எச்சரிக்கை விடுத்த வெள்ளை மாளிகை
- வெள்ளை மாளிகையின் பத்திரிகை செயலாளர் செய்தியாளர்களைச் சந்தித்தார்.
- அப்போது, ஈரான் நிலைமையை அதிபர் உன்னிப்பாகக் கண்காணித்து வருகிறார் என்றார்.
வாஷிங்டன்:
ஈரானில் தற்போதைய ஆட்சிக்கு எதிராக நடந்து வரும் போராட்டங்களில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். இது ஈரானுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே பதற்றத்தை அதிகரித்துள்ளது.
ஈரானில் நடந்து வரும் போராட்டங்களை அமெரிக்கா தூண்டிவிடுவதாக ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி குற்றம் சாட்டினார்.
இதற்கிடையே, போராட்டத்தில் ஈடுபடுபவர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்படும் என வெளியான தகவலுக்கு அதிபர் டிரம்ப் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்.
இந்நிலையில், ஈரானில் கொலைகள் தொடர்ந்தால் கடுமையான விளைவுகள் ஏற்படும் என அந்நாட்டு அரசுக்கு வெள்ளை மாளிகை எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதுதொடர்பாக வெள்ளை மாளிகையின் பத்திரிகை செயலாளர் கரோலின் லீவிட் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
நேற்று நிறைவேற்ற திட்டமிடப்பட்டு நிறைவேற்றப்பட இருந்த 800 மரண தண்டனைகள் நிறுத்தப்பட்டதை அதிபர் டிரம்ப் புரிந்து கொள்கிறார்.
அதிபருக்கு அனைத்து விருப்பங்களும் மேசையில் உள்ளன. ஆர்ப்பாட்டக்காரர்களைக் கொல்வது தொடர்ந்தால் கடுமையான விளைவுகள் ஏற்படும் என அதிபர் டிரம்ப் ஈரானை எச்சரித்திருந்தார்.
அதிபர் டொனால்டு டிரம்ப் ஈரானில் நிலவும் நிலைமையை உன்னிப்பாகக் கண்காணித்து வருகிறார் என தெரிவித்துள்ளார்.