கிரிக்கெட்
கேப்டனாக 10 ஆண்டுகள்: ரோகித் சர்மாவை பாராட்டிய சென்னை சூப்பர் கிங்ஸ்
- மும்பை இந்தியன்ஸ் அணி கேப்டனாக ஹர்திக் பாண்ட்யா அறிவிக்கப்பட்டுள்ளார்.
- கேப்டன் பதவியில் சிறப்பாக செயல்பட்டதற்காக ரோகித் சர்மாவுக்கு பலரும் பாராட்டு தெரிவித்தனர்.
புதுடெல்லி:
மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாக ஹர்திக் பாண்ட்யா அறிவிக்கப்பட்டுள்ளார். மும்பை அணியின் கேப்டனாக ரோகித் சர்மா செயல்பட்டு வந்த நிலையில், ஹர்திக் பாண்ட்யாவுக்கு கேப்டன் பதவி கொடுக்கப்பட்டு இருக்கிறது.
கேப்டன் பதவியில் சிறப்பாக செயல்பட்டதற்காக ரோகித் சர்மாவுக்கு பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், மும்பை இந்தியன்ஸ் அணியில் 10 ஆண்டுகளாக கேப்டன் பொறுப்பு வகித்த ரோகித் சர்மாவுக்கு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பாராட்டு தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள செய்தியில், 2013 முதல் 2023 வரை ஒரு பத்தாண்டு கால உற்சாகமான சவால், ரோகித்துக்கு மரியாதை என பதிவிட்டுள்ளது.
2013 ➡️ 2023 : A decade of spirited challenge! Much respect, Rohit! ?? pic.twitter.com/B8rqCmmT5R
— Chennai Super Kings (@ChennaiIPL) December 15, 2023