கிரிக்கெட் (Cricket)

திருவனந்தபுரம் பத்மநாபசாமி கோவிலில் இந்திய கிரிக்கெட் வீரர்கள் தரிசனம்

Published On 2026-01-30 15:21 IST   |   Update On 2026-01-30 15:21:00 IST
  • கடைசி 20 ஓவர் போட்டி நாளை கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் நடக்கிறது.
  • கிரிக்கெட் வீரர்கள் சுமார் 30 நிமிடங்கள் கோவிலில் இருந்தனர்.

இந்தியா-நியூசிலாந்து கிரிக்கெட் அணிகள் மோதும் 5-வது மற்றும் கடைசி 20 ஓவர் போட்டி நாளை கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் நடக்கிறது.

இதற்காக இரு அணி வீரர்களும் திருவனந்தபுரம் வந்தனர். இந்த நிலையில் இன்று காலை இந்திய வீரர்கள் சூர்யகுமார் யாதவ், அக்சர் படேல், வருண் சக்கரவர்த்தி, ரிங்கு சிங், குல்தீப் யாதவ், ரவி பிஷ்னோய் ஆகியோர் திருவனந்தபுரம் பத்மநாபசாமி கோவிலுக்கு சென்று தரிசனம் செய்தனர்.

அவர்கள் சுமார் 30 நிமிடங்கள் கோவிலில் இருந்தனர்.

Tags:    

Similar News