கிரிக்கெட்
null

6 ஆம் கட்ட தேர்தல் : முன்னாள் இந்திய வீரர்களான எம்.எஸ்.டோனி, கவுதம் கம்பீர் வாக்களித்தனர்

Published On 2024-05-25 09:09 GMT   |   Update On 2024-05-25 13:13 GMT
  • இந்த தேர்தலில் பல விளையாட்டு பிரபலங்கள் வாக்களித்து வருகின்றனர்.
  • கவுதம் கம்பீர் டெல்லியில் உள்ள தங்களது வாக்குச்சாவடியில் வாக்களித்தார்.

நாடு முழுவதும் பாராளுமன்ற மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவு 7 கட்டங்களாக நடைபெற்று வருகிறது. நாட்டின் பல்வேறு முக்கிய தொகுதிகளில் 5 கட்ட வாக்குப்பதிவு நடந்து முடிந்துள்ளது.

இந்நிலையில் 6 ஆம் கட்ட வாக்குப்பதிவு நாளான இன்று (மே 25) டெல்லி, அரியானா, பீகார், உத்தர பிரதேசம், ஒடிசா, ஜார்க்கண்ட், மேற்கு வங்காளம், ஜம்மு-காஷ்மீர் ஆகியவற்றில் உள்ள மொத்தம் 58 தொகுதிகளில் வாக்குப்பதிவு தொடங்கி காலை முதலே விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

இந்த தேர்தலில் பல விளையாட்டு பிரபலங்கள் வாக்களித்து வருகின்றனர். ஜார்கண்ட் மாநிலத்தின் ராஞ்சி மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட வாக்குப்பதிவு மையத்தில் இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் எம்.எஸ்.டோனி வாக்களித்தார்.

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர்கள் கவுதம் கம்பீர் , கபில்தேவ் ஆகியோர் டெல்லியில் உள்ள தங்களது வாக்குச்சாவடியில் வாக்களித்தனர்.

Full View


Full View

Tags:    

Similar News