கிரிக்கெட் (Cricket)

இங்கிலாந்து பயிற்சியாளராக இந்தியரை நியமிக்க வேண்டும்- மான்டி பனேசர் யோசனை

Published On 2025-12-25 13:59 IST   |   Update On 2025-12-25 13:59:00 IST
  • இங்கிலாந்து அணியின் தலைமை பயிற்சியாளராக நியூசிலாந்தை சேர்ந்த பிரெண்டன் மெக்கல்லம் உள்ளார்.
  • ஆஷஸ் தொடரில் இங்கிலாந்து அணி தொடர்ச்சியாக 3 போட்டிகளில் தோல்வியடைந்தது விமர்சனத்துக்குள்ளானது.

இங்கிலாந்து கிரிக்கெட் அணி தற்போது ஆஷஸ் தொடரில் விளையாடுவதற்காக ஆஸ்திரேலியா சென்றுள்ளது. 5 போட்டிகள் கொண்ட தொடரில் 3 போட்டிகள் முடிவடைந்தது. 3 போட்டியிலும் ஆஸ்திரேலியாவே வென்று தொடரை கைப்பற்றியது. இரு அணிகளுக்கு இடையேயான 4-வது டெஸ்ட் போட்டி நாளை தொடங்குகிறது.

இங்கிலாந்து அணியின் தலைமை பயிற்சியாளராக நியூசிலாந்தை சேர்ந்த பிரெண்டன் மெக்கல்லம் உள்ளார். அவர் 2022 முதல் இங்கிலாந்து பயிற்சியாளராக உள்ளார். 2024-ல் அனைத்து வடிவங்களுக்கும் பொறுப்பேற்றார். 2027 வரை ஒப்பந்தம் உள்ளது, ஆனால் அவரது எதிர்காலம் குறித்து உறுதியற்ற நிலை நிலவுகிறது.

அதற்கு முக்கிய காரணமாக சமீபத்திய ஆஷஸ் தொடரில் இங்கிலாந்து அணி தொடர்ச்சியாக 3 போட்டிகளில் தோல்வியடைந்தது விமர்சனத்துக்குள்ளானது.

மெக்கலத்திற்குப் பிறகு இங்கிலாந்து அணியின் பயிற்சியாளராக ரவி சாஸ்திரியை நியமிக்க வேண்டும் என இங்கிலாந்து முன்னாள் வீரர் மான்டி பனேசர் யோசனை கூறியுள்ளார்.

இது குறித்து அவர் கூறியதாவது:-

பிரெண்டன் மெக்கலத்திற்குப் பிறகு இங்கிலாந்து அணியின் பயிற்சியாளராக ரவி சாஸ்திரியை நியமிக்க வேண்டும்.


ஆஸ்திரேலியாவை அவர்களது சொந்த மண்ணில் எப்படி தோற்கடிக்க வேண்டும் என்பதை கச்சிதமாக தெரிந்த ஒருவரை பற்றி நீங்கள் சிந்திக்க வேண்டும். ஆஸ்திரேலியாவின் பலம், பலவீனம், திட்டங்கள், மனம் ஆகியவற்றைத் அறிந்து, அதிலிருந்து எப்படி உங்களால் சாதகத்தை எடுத்துக் கொள்ள முடியும் என்பதும் தெரிந்திருக்க வேண்டும்.

அந்த வகையில் ஆஸ்திரேலியாவை எப்படி வீழ்த்த முடியும்? எனத் தெரிந்தவர் அவர்தான் என பனேசர் கூறினார். 

Tags:    

Similar News