கிரிக்கெட் (Cricket)

ரஞ்சி கோப்பை: கர்நாடகாவுக்கு எதிரான இறுதி போட்டியில் 584 ரன்கள் குவித்த ஜம்மு காஷ்மீர்

Published On 2026-02-26 11:25 IST   |   Update On 2026-02-26 11:25:00 IST
  • டாஸ் வென்ற ஜம்மு காஷ்மீர் அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தது.
  • சுபம் பண்டிர் சிறப்பாக விளையாடி சதம் அடித்து 121 ரங்களில் ஆட்டமிழந்தார்.

ரஞ்சி கோப்பை இறுதி போட்டியில் கர்நாடகா - ஜம்மு காஷ்மீர் அணிகள் விளையாடி வருகின்றன. நேற்று முன்தினம் தொண்டாகிய இந்த போட்டியில் டாஸ் வென்ற ஜம்மு காஷ்மீர் அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தது.

அதன்படி ஜம்மு காஷ்மீர் தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கிய கம்ரான் இக்பால் 6 ரன்னில் வெளியேற சிறப்பாக விளையாடிய மற்றொரு தொடக்க ஆட்டக்காரரான யாவர் ஹாசன் 88 ரன்கள் அடித்து அவுட்டானார்.

இதையடுத்து களமிறங்கிய சுபம் பண்டிர் சிறப்பாக விளையாடி சதம் அடித்து 121 ரங்களில் ஆட்டமிழந்தார். அடுத்தடுத்து களமிறங்கிய வீரர்கள் சிறப்பாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தினர்.

கேப்டன் பராஸ் டோக்ரா 70 ரன்னும் அப்துல் சமத் 61 ரன்னும் கன்ஹையா வாதவன் 70 ரன்னும் சாஹில் லோத்ரா 72 ரன்னும் அடித்து அவுட்டாக்கினர்.

173.1 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுகளை இழந்து ஜம்மு காஷ்மீர் அணி 584 ரன்கள் குவித்தது.

Tags:    

Similar News