search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Simbu"

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • இயக்குனர் மணிரத்னம் நாயகன் படத்திற்கு பிறகு பல வருடங்கள் கழித்து கமல்ஹாசன் நடிப்பில் தக் லைஃப் திரைப்படத்தை இயக்கி வருகிறார்.
    • ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனத்தின் தயாரிப்பிலும் ஏ ஆர் ரகுமானின் இசையிலும் இந்த படம் உருவாகி வருகிறது.

    இயக்குனர் மணிரத்னம் நாயகன் படத்திற்கு பிறகு பல வருடங்கள் கழித்து கமல்ஹாசன் நடிப்பில் தக் லைஃப் திரைப்படத்தை இயக்கி வருகிறார்.

    இதில் கமல்ஹாசன் உடன் இணைந்து சிம்பு, அசோக் செல்வன், கௌதம் கார்த்திக், திரிஷா, ஐஸ்வர்யா லக்ஷ்மி, ஜோஜு ஜார்ஜ், அபிராமி, நாசர் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்து வருகின்றனர். ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனத்தின் தயாரிப்பிலும் ஏ ஆர் ரகுமானின் இசையிலும் இந்த படம் உருவாகி வருகிறது.

    ஆக்சன் கலந்த கேங்ஸ்டர் படமாக தயாராகி வரும் இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களுக்கு முன்பாகவே தொடங்கப்பட்டு ராஜஸ்தான், புதுடெல்லி, பாண்டிச்சேரி போன்ற பகுதிகளில் பல கட்டங்களாக நடைபெற்று வருகிறது. முதல் கட்டப்படப்பிடிப்பு பணிகள் நிறைவடைந்து படப்பிடிப்பு தளங்களில் இருந்து சில புகைப்படங்கள் கசிந்தது.

    இதன் அடுத்த கட்ட படப்பிடிப்பு ஐரோப்பாவில் (செர்பியா) நடைபெற இருப்பதாகவும் அதற்கான வேலைகளும் மும்மரமாக நடைபெற்று வருவதாகவும் தற்போதைய தகவல்கள் தெரிவிக்கின்றன.

     

    பாண்டிச்சேரி படப்பிடிப்பு தளத்தில் பிரபல நடிகருக்கு ஆக்சிடண்ட் ஆகியது என தகவல் வெளியாகியுள்ளது. படத்தின் ஆக்ஷன் காட்சிகள் படமாக்கப்படும் சமயத்தில் நடிகர் ஜோஜூ ஜார்ஜ், ஹெலிகாப்டரில் இருந்து குதிக்கும் போது அவருக்கு எலும்பு முறிவு ஏற்பட்டதாகவும் அதனால் ஜோஜு ஜார்ஜ் ஓய்விற்காக கொச்சின் திரும்பி உள்ளதாகவும் சொல்லப்படுகிறது. இந்த தகவல் அறிந்த ரசிகர்கள் ஜோஜு ஜார்ஜ் விரைவில் குணமடைய வேண்டும் என கமெண்ட் செய்து வருகின்றனர்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளிவந்த மான் கராத்தே படத்தை இயக்கிய திருக்குமரன் அடுத்ததாக அருண் விஜயின் படத்தை இயக்குகிறார்.
    • இப்படத்தில் அருண் விஜய் இரு வேடங்களில் நடித்துள்ளார். தடம் படத்திற்கு பிறகு இரு வேடங்களில் நடித்திருக்கும் படம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

    கடந்த ஜனவரி மாதம் விஜய் ஏ.எல் இயக்கத்தில் அருண் விஜய் , எமி ஜாக்சன், நிமிஷா சஜயன் இணைந்து நடித்து மிஷன் சாப்டர் 1 திரைப்படம் வெளியாகியது. இப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து பாலா இயக்கத்தில் வனங்கான், பார்டர், AV 36 திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

    சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளிவந்த மான் கராத்தே படத்தை இயக்கிய திருக்குமரன் அடுத்ததாக அருண் விஜயின் படத்தை இயக்குகிறார். இப்படத்தின் நாயகியாக சித்தி இத்னானி நடிக்கவுள்ளார். இவர் இதற்கு முன் சிம்பு நடித்த வெந்து தணிந்தது காடு படத்தின் கதாநாயகியாக நடித்தது குறிப்பிடத்தக்கது.

    இவர்களுடன் தான்யா ரவிச்சந்திரன் நடிக்கிறார். படத்தின் இசையை சாம். சி.எஸ் மேற்கொள்கிறார். அன்பறிவு ஸ்டண்ட் காட்சிகளை கையாளுகின்றனர். பிடிஜி யூனிவர்சல் என்ற நிறுவனம் இப்படத்தை தயாரிக்கவுள்ளனர்.

    படத்தின் டைட்டில் மற்றும் போஸ்டரை இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் அவரது எக்ஸ் பக்கத்தில் கடந்த மாதம் வெளியிட்டார்.

    இப்படத்திற்கு 'ரெட்ட தல' என்ற தலைப்பை வைத்துள்ளனர் அதைத்தொடர்ந்து படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் படக்குழுவினர் வெளியிட்டனர். இப்படத்தில் அருண் விஜய் இரு வேடங்களில் நடித்துள்ளார். தடம் படத்திற்கு பிறகு இரு வேடங்களில் நடித்திருக்கும் படம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

    இந்நிலையில் படத்தின் படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்துள்தை போஸ்டர் ஒன்றை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர் அதில் அருண் விஜய் கூலர்ஸ் அணிந்து கார் ஓட்டியபடி அமர்ந்து இருக்கும் காட்சி அமைந்துள்ளது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • படக்குழுவினருக்கு சிம்பு பிரியாணி விருந்து கொடுத்துள்ளார்.
    • புகைப்படங்களை அஸ்வத் மாரிமுத்து தனது சமூக வலைதளபக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

    தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் எஸ்.டி.ஆர்.48 என்ற படத்தில் சிம்பு நடித்து வருகிறார். மேலும் மணிரத்னம் இயக்கத்தில் உருவாகும் 'தக்லைப்' படத்தில் கமல்ஹாசனுக்கு மகனாக நடித்து வருவதாக கூறப்படுகிறது. 30 ஆண்டுகளுக்கு பிறகு மணிரத்னம், கமல்ஹாசன் ஆகியோர் தக்லைப் படத்தில் இணைந்துள்ளதால் இந்த படத்திற்கான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

    சமீபத்தில் டெல்லியில் நடந்த படத்தின் படப்பிடிப்பில் கமல்ஹாசன், சிம்பு, அபிராமி, நாசர் ஆகியோர் இணைந்து நடித்த காட்சிகள் படமாக்கப்பட்டது.

    இந்நிலையில் இயக்குனர் அஸ்வத் மாரிமுத்து பிறந்தநாளையொட்டி படக்குழுவினருக்கு சிம்பு பிரியாணி விருந்து கொடுத்துள்ளார். இந்த புகைப்படங்களை அஸ்வத் மாரிமுத்து தனது சமூக வலைதளபக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • கல்யாணம் முதல் காதல் வரை என்ற சின்னத்திரையில் நடிகையாக திரை வாழ்க்கையை ஆரம்பித்து தற்போது வெள்ளித்திரையில் பிரபல நடிகையாக மாறியுள்ளார் நடிகை பிரியா பவானி சங்கர்.
    • சமீபத்தில் ஹரி இயக்கத்தில் விஷால் நடிப்பில் வெளிவந்த ரத்னம் திரைப்படத்தில் விஷாலுக்கு ஜோடியாக நடித்திருந்தார்.

    கல்யாணம் முதல் காதல் வரை என்ற சின்னத்திரையில் நடிகையாக திரை வாழ்க்கையை ஆரம்பித்து தற்போது வெள்ளித்திரையில் பிரபல நடிகையாக மாறியுள்ளார் நடிகை பிரியா பவானி சங்கர். சின்ன திரையில் இருந்து வெளிவந்து வெள்ளி திரையில் இவர் நடித்த முதல் திரைப்படம் மேயாத மான். இப்படம் மாபெரும் வெற்றியை பெற்றது. அதன் பின்னர் கடைக்குட்டி சிங்கம் என்ற திரைப்படத்தில் ஒரு சிறிய கதாபாத்தில் நடித்து மக்கள் மனதை கவர்ந்தார்.

    அதைத்தொடர்ந்து அடுத்தடுத்து படங்களில் கமிட் ஆகினார் பிரியா பவானி சங்கர். மான்ஸ்டர், களத்தில் சந்திப்போம், குருதி ஆட்டம் போன்ற படங்களில் நடித்தார்.

    இத்திரைப்படத்திற்கு கிடைத்த வெற்றியைத் தொடர்ந்து  பிரியா பவானி சங்கர் பல படங்களில் கமிட்டாகி வருகிறார். தமிழில் சிம்பு, தனுஷ், விஷால் என அனைத்து முன்னணி நடிகர்களுடனும் இணைந்து நடிக்கிறார். தமிழ் மட்டுமன்றி தற்போது தெலுங்கிலும் பிரியா பவானி சங்கர் ஆர்வம் செலுத்தி வருகிறார்.  இதனிடையே தமிழில், இந்தியன் 2, டிமான்டி காலனி, மழை பிடிக்காத மனிதன் ஆகிய திரைப்படங்களில் நடித்திருக்கிறார்.

    சமீபத்தில் ஹரி இயக்கத்தில் விஷால் நடிப்பில் வெளிவந்த ரத்னம் திரைப்படத்தில் விஷாலுக்கு ஜோடியாக நடித்து சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி மக்கள் மனதை வென்றார்.

     

    இதனிடையே அவர் தனது கல்லூரி காலத்திலிருந்து காதலித்து வரும் ரத்னவேலு என்பவருடன் அவ்வப்போது புகைப்படம் எடுத்து இன்ஸ்டாகிராமில் பதிவிடுவார். தற்பொழுது அவருடன் ஜாலியாக ஆஸ்திரேலியாவிற்கு சுற்றுலா சென்றிருக்கிறார். இது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வௌியாகி வைரலாகி வருகின்றன.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • 'இந்தியன் 2' திரைப்படம் அடுத்த மாதம் 12-ந்தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
    • இப்படத்தின் இசைவெளியீட்டு விழா சென்னையில் மிகவும் பிரமாண்டமாக நடைபெற்றது. இதில் பல தமிழ் சினிமா பிரபலங்கள் கலந்துக் கொண்டனர்.

    இந்தியன் படத்தின் இரண்டாம் பாகத்தை 28 ஆண்டுகளுக்கு பிறகு இயக்குனர் சங்கர் இயக்கி இருக்கிறார். இந்த படத்தில் கமல் ஹாசன், பிரியா பவானி சங்கர், காஜல் அகர்வால், ரகுல் பிரீத் சிங், சித்தார்த், பாபி சிம்ஹா, சமுத்திரக்கனி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

    லைகா மற்றும் ரெட் ஜெயன்ட் நிறுவனம் இணைந்து தயாரித்துள்ள இந்த படத்துக்கு அனிருத் இசையமைத்துள்ளார். சமீபத்தில் இந்த படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்தது. 'இந்தியன் 2' திரைப்படம் அடுத்த மாதம் 12-ந்தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. நேற்று இப்படத்தின் இசைவெளியீட்டு விழா சென்னையில் மிகவும் பிரமாண்டமாக நடைபெற்றது. இதில் பல தமிழ் சினிமா பிரபலங்கள் கலந்துக் கொண்டனர். இயக்குனர் லோகேஷ் கனகராஜ், நெல்சன் திலிப்குமார், சிம்பு மற்றும் பலர் சிறப்பு விருந்தினராக கலந்துக் கொண்டனர்.

    இசைவெளியீட்டு விழாவில் சிம்பு "கமல்ஹாசன் சார் தான் என்னோட ஸ்கிரீன் குரு, அவரோட தக் லைஃப் படத்துல் வேலை செய்றது ரொம்ப அதிர்ஷடமா நான் பாக்குறேன், நான் இந்தியன் 1 ஓட மிகப் பெரிய ரசிகன், இந்திய 2, இந்தியன் 3 அப்பறம் கேம் சேஞ்சர் படம் பன்ற ஷங்கர் சாருக்கு ஹாட்ஸ் ஆஃப்" என்று கூறினார்.

    பின் ரசிகர்களிடம் "மக்கள் எல்லாரும் என்னைய வெயிட் குறச்சிட்டாரு , டிரான்ஸ்ஃபார்ம் ஆயிட்டாரு எல்லாம் சொல்றாங்க ஆனா அதுக்கும் மேல இது ஆன்மிகம் சார்ந்த விஷயம், நம்ம கூட இருக்கறவங்க எல்லாரும் ஒரு நாள் நம்மல விட்டுட்டு போயிடுவாங்க, நம்ம முடி கூட கொஞ்ச நாளுல கொட்டிடும், ஆனா எப்பொழுதும் நம்ம கூட இருக்க ஒரே விஷயம் நம்ம உடம்புதான் அத நம்ம நல்லா பாத்துகணும்" என்று கூறினார்.

    பின்னர் செய்தியாளர்கள் சந்திப்பில் சிம்பு பேசியதாது, 'தக் லைப்' படப்பிடிப்பை முடித்துவிட்டுதான் இங்கு வந்திருக்கிறேன். அடுத்து, 'எஸ்.டி.ஆர்.48' படமும் தொடங்கும். உலகிலேயே அதிக கஷ்டப்படும் ஆள் யார்னா அது உண்மையை வெளிப்படையாக பேசுகிறவர்கள்தான்.

    நானும் அதில் ஒருவன். மக்களவை தேர்தல் சமயத்தில் நான் படப்பிடிப்பில் இருந்தேன். சூட்டிங் கேன்சல் செய்துவிட்டு வரும் அளவுக்கு நான் பெரிய ஆள் கிடையாது. ஆனால், ஓட்டுப் போட வராதது எனக்கு வருத்தம்தான். பின் தயாரிப்பாளர் சங்கம் எனக்கு ரெட் கார்டெல்லாம் தரவில்லை, அது எனக்கும் தயாரிப்பாளர் ஐசரி கணேஷுக்கும் ஒரு சிறிய பிரச்சனை அதை நாங்கள் இப்பொழுது சரி ஆக்கிவிட்டோம்', என்றார்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • சங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் பிரமாண்டமாக தயாராகியுள்ள 'இந்தியன் 2' திரைப்படம் ஜூலை 12 ஆம் தேதி ரிலீசுக்கு தயாராகியுள்ளது.
    • 'இந்தியன் 2'படத்தின் இசை வெளியீடு நேற்று மாலை 6 மணியளவில் சென்னையில் உள்ள நேரு உள்விளையாட்டு அரங்கில் பிரமாண்டமான முறையில் நடைப்பெற்றது.

    சங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் பிரமாண்டமாக தயாராகியுள்ள 'இந்தியன் 2' திரைப்படம் ஜூலை 12 ஆம் தேதி ரிலீசுக்கு தயாராகியுள்ளது. இப்படத்தில் கமலுடன் பிரியா பவானி சங்கர், காஜல் அகர்வால், ரகுல் ப்ரீத் சிங், சித்தார்த், பாபி சிம்ஹா, சமுத்திரக்கனி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

    லைகா மற்றும் ரெட் ஜெயண்ட் நிறுவனம் இணைந்து தயாரித்துள்ள இப்படத்துக்கு அனிருத் இசையமைத்துள்ளார். இந்நிலையில் ஏற்கனவே அறிவித்திருந்தபடி 'இந்தியன் 2'படத்தின் இசை வெளியீடு நேற்று மாலை 6 மணியளவில் சென்னையில் உள்ள நேரு உள்விளையாட்டு அரங்கில் பிரமாண்டமான முறையில் நடைப்பெற்றது.

    இவ்விழாவில் தமிழ் சினிமாவின் பல பிரபலங்கள் கலந்துக் கொண்டனர். இயக்குனர் லோகேஷ் கனகராஜ், நெல்சன் திலிப்குமார், நடிகர் சிம்பு மற்றும் பலர் பங்கேற்றனர்.

     

    'இந்தியன் 2' படத்தில், பாரா, காலண்டர் சாங், நீளோற்பம், ஜகாஜகா, கம்பேக் இந்தியன், கதரல்ஸ் என மொத்தம் ஆறு பாடல்கள் இடம்பெற்றுள்ளது. இந்த விழாவில் படத்தின் பாடலான கம் பேக் இந்தியன் என்ற பாடலை அனிருத் லைவாக பாடினார்.

    அனிருத் விழாவில் இசையமைப்பாளர் ஏ.ஆர் ரகுமானை பாராட்டி பேசினார் " ஷங்கர் சார் ஸ்டைல சொல்லனும்னா சிக்ஸ்க்கு அப்பறம் செவென் டா.... ரஹ்மான் சார்க்கு அப்பறம் எவன் டா" என்று கூறினார்.

    சிம்பு விழாவில் " சிம்பு லேட்டா வந்துடாரு அப்படின்னு எல்லாரும் சொல்லுவாங்க, ஆனா நான் மணி சாரோட தக் லைஃப் படத்தோட ஷூட்டிங்ல இருந்துதான் வரேன்" என்று கூறினார்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • கடந்த 2006 ஆம் ஆண்டு சூர்யா, ஜோதிகா நடிப்பில் வெளியான திரைப்படம் சில்லுனு ஒரு காதல்.
    • இந்த படத்தை பிரபல தயாரிப்பு நிறுவனமான பிரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கப் போவதாக நேற்று அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது.

    கடந்த 2006 ஆம் ஆண்டு சூர்யா, ஜோதிகா நடிப்பில் வெளியான திரைப்படம் சில்லுனு ஒரு காதல். இந்த படத்தை ஒபேலி N கிருஷ்ணா இயக்கியிருந்தார். இந்த படம் இன்று வரையிலும் பலரின் ஃபேவரைட் படங்களில் ஒன்றாக இருக்கிறது. நடிகர் சூர்யா இந்த படத்தில் சாக்லேட் பாய் கணவராகவும் ரக்கெட் பாய் லவ்வராகவும் நடித்து ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார். படத்தின் இடம்பெற்ற அனைத்து பாடல்களும் மிகப் பெரிய ஹிட் ஆனது.

    அதைத்தொடர்ந்து ஒபேலி N கிருஷ்ணா, சிம்பு நடிப்பில் 10 தல திரைப்படத்தையும் இயக்கி வெற்றி பெற்றார். அடுத்ததாக ஒபேலி N கிருஷ்ணா, புதிய படம் ஒன்றை இயக்க இருக்கிறார்.

    இந்த படத்தை பிரபல தயாரிப்பு நிறுவனமான பிரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கப் போவதாக நேற்று அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது. ஆனால் அவர் இயக்கவிருக்கும் திரைப்படத்தின் கதைக்களம் என்ன? என்னென்ன நடிகர்கள் நடிக்கபோகிறார்கள் குறித்த தகவல் எதையும் வெளியிடவில்லை.

    ஆனால் இப்படம் சில்லுனு ஒரு காதல் திரைப்படத்தின் இரண்டாம் பாகமாக உருவாகவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதைத்தொடர்ந்து இதில் நடிகர் கவினை ஹீரோவாக நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக தற்போதைய தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் படத்தில் நடிக்கும் மற்ற நடிகர், நடிகை குறித்த அப்டேட் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.


    • 2011 ஆம் ஆண்டு தனுஷ் நடிப்பில் வெளிவந்த மாப்பிள்ளை திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்து தமிழ் சினிமாவிற்கு அறிமுகமாகினார்.
    • ஹன்சிகா தற்பொழுது காந்தாரி என்ற படத்தில் நடித்துள்ளார்.

    தமிழ் திரையுலகில் அறிமுகமான குறுகிய காலத்திலேயே, விஜய், சூர்யா, தனுஷ், சிம்பு போன்ற பிரபலங்களுக்கு ஜோடியாக நடித்து முன்னணி ஹீரோயினாக வலம் வந்தவர் ஹன்சிகா. 2011 ஆம் ஆண்டு தனுஷ் நடிப்பில் வெளிவந்த மாப்பிள்ளை திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்து தமிழ் சினிமாவிற்கு அறிமுகமாகினார்.

    'சின்ன குஷ்பு' என்று அன்போடு அழைக்கப்பட்ட ஹன்சிகா பட வாய்ப்புகள் குறைய தொடங்கியதும், தற்காலிகமாக சினிமாவுக்கு சிறிது காலம் ஓய்வு கொடுத்தார்.

    சிறிய இடைவெளிக்குப் பிறகு 'மஹா' என்ற படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். கலவையான விமர்சனம் பெற்ற இப்படத்தில் சிம்பு கவுரவ வேடத்தில் நடித்திருந்தார். அதைத்தொடர்ந்து பார்ட்னர், மை நேம் இஸ் ஷ்ருதி, 105 மினிட்ஸ் போன்ற படங்களில் நடித்தார்.

    சில மாதங்களுக்கு முன் ஹன்சிகா நடிப்பில் வெளியான கார்டியன் திரைப்படம் மக்களிடையே கலவையான விமர்சனத்தை பெற்றது. அதை தொடர்ந்து ஹன்சிகா தற்பொழுது காந்தாரி என்ற படத்தில் நடித்துள்ளார்.

    இப்படத்தை ஆர் கண்ணன் தயாரித்து இயக்கியுள்ளார். மெட்ரோ சிரிஷ் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். படத்தின் இசையை முத்து கணேஷ் மேற்கொள்கிறார். படத்தின் மேகிங் வீடியோவை நேற்று படக்குழுவினர் வெளியிட்டனர். ஹாரர் கதைக்களத்தில் அமைந்திருக்கும் இத்திரைப்படம் வரும் ஜூலை மாதம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • இப்படத்தில் கமல்ஹாசன் , த்ரிஷா, நாசர், அபிராமி, கௌதம் கார்த்திக், ஜோஜு ஜார்ஜ், ஐஸ்வர்யா லெக்ஷ்மி நடித்துள்ளனர்.
    • இந்நிலையில் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு தில்லியில் நடைப்பெற்ற நிலையில். சிம்புவுக்கான ப்ரோமோ காட்சிகளை சில நாட்களுக்கு முன் வெளியிட்டிருந்தனர்.

    பிரபல நடிகர் கமல்ஹாசன் இயக்குனர் மணி ரத்னத்துடன் ''நாயகன்' படத்துக்குப் பின் 34- ஆண்டுகளுக்கு பிறகு 'தக் லைஃப்' என்ற ஆக்ஷன் படத்தில் மீண்டும் இணைந்து உள்ளார்.

    இப்படத்தில் கமல்ஹாசன் , த்ரிஷா, நாசர், அபிராமி, கௌதம் கார்த்திக், ஜோஜு ஜார்ஜ், ஐஸ்வர்யா லெக்ஷ்மி நடித்துள்ளனர். இப்படத்திற்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்து உள்ளார் .

    இப்படத்தை ராஜ் கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல், மெட்ராஸ் டாக்கீஸ் மற்றும் ரெட் ஜெயண்ட் மூவிஸ் ஆகியவை இணைந்து தயாரிக்கின்றன. இந்த படத்தின் படப்பிடிப்பு ஜனவரி மாதம் தொடங்கியது. முதல்கட்ட படப்பிடிப்பு சென்னையிலும், இரண்டாம் கட்டம் செர்பியாவிலும் நடைப்பெற்றது. சமீபத்தில் சிம்பு தக் லைஃப் படத்தில் இணைந்தார்.

    இந்நிலையில் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு தில்லியில் நடைப்பெற்ற நிலையில். சிம்புவுக்கான ப்ரோமோ காட்சிகளை சில நாட்களுக்கு முன் வெளியிட்டிருந்தனர். அந்த ப்ரோமோ வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானது. சிம்பு இப்படத்தில் கமலுக்கு மகனாக நடிக்கவிருப்பதாக தகவல் பரவி வருகிறது.

    தற்பொழுது படப்பிடிப்பு நடக்கும் இடத்தில் குழந்தைகளுடன் சிம்பு எடுத்துக் கொண்ட புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அது குறித்த வீடியோ தற்பொழுது வெளியாகியுள்ளது. அதில் சிம்பு அனைத்து சிறுவர்களுக்கு கை கொடுத்து, அன்பாக அவர்களுடன் இணைந்து புகைப்படம் எடுத்துக் கொள்கிறார்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • நடிகர் அசோக் செல்வன் சூது கவ்வும், தெகிடி, ஓ மை கடவுளே உள்ளிட்ட படங்களின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர்.
    • நாயகன் திரைப்படத்திற்கு பிறகு கமலை வைத்து மணி ரத்னம் தக் லைஃப் என்ற படத்தை இயக்கி வருகிறார்.

    நடிகர் அசோக் செல்வன் சூது கவ்வும், தெகிடி, ஓ மை கடவுளே உள்ளிட்ட படங்களின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர். தனக்கான கதையை தேர்ந்தெடுத்து சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி மக்கள் மனதை வென்றவர் அசோக் செல்வன்.

    அந்த வகையில் கடந்த ஆண்டு வெளியான போர் தொழில் திரைப்படம் ரசிகர்களின் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. அதன் பின்னர் சபாநாயகன், ப்ளூ ஸ்டார் போன்ற படங்களும் வெற்றி பெற்றன.

    அதைத் தொடர்ந்து அசோக்செல்வன் நடிப்பில் பொன் ஒன்று கண்டேன் ஓடிடி திரைப்படமாக வெளியானது. அடுத்ததாக எமக்கு தொழில் ரொமான்ஸ் திரைப்படத்தில் நடித்து வெளியாக தயாராகவுள்ளது.

    நாயகன் திரைப்படத்திற்கு பிறகு கமலை வைத்து மணி ரத்னம் தக் லைஃப் என்ற படத்தை இயக்கி வருகிறார்.

    இந்த படத்தில் திரிஷா, சிம்பு, மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். மெட்ராஸ் டாக்கீஸ், ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் மற்றும் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் இணைந்து தயாரிக்கும் இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்க ரவி.கே.சந்திரன் ஒளிப்பதிவு செய்கிறார்.

    இப்படத்தில் ஜெயம் ரவி கதாப்பாத்திரத்திற்கு மாற்றாக அசோக் செல்வன் நடிக்கவுள்ளதாக தகவல் பரவியது.

    அதனை உறுதிப்படுத்தும் விதமாக நடிகர் அசோக் செல்வன் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவு ஒன்றினை வெளியிட்டுள்ளார். அதில், "உண்மையான மறக்கமுடியாத நாட்கள், அதிசயங்களும் நடக்கும்" என்று குறிப்பிட்டுள்ளார். கமல் நடிப்பில் வெளியான சத்யா படத்தின் ரீமேக்கில் அசோக் செல்வன் கதாநாயகனாக நடிப்பது கூடுதல் தகவலாகும்.

    இதன் மூலம் அசோக் செல்வன், தக் லைஃப் படத்தில் தான் நடிக்கப் போவதை தெரிவித்துள்ளார் என்று ரசிகர்கள் பலரும் தங்களின் கருத்துக்களை தெரிவித்து வருவதோடு அசோக் செல்வனுக்கு வாழ்த்துக்களையும் தெரிவித்து வருகின்றனர்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • தக் லைஃப் படத்தில் சிம்பு நடிப்பதை படக்குழு உறுதிப்படுத்தியது.
    • கொரோனா குமார் படம் தவிர மற்ற படங்களில் நடித்து வருகிறார்.

    தமிழ் திரையுலகில் முன்னணி நடிகர் சிலம்பரசன். இவர் தற்போது இயக்குநர் தேசிங்கு பெரியசாமி இயக்கும் புதிய படத்தில் நடித்து வருகிறார். இது சிம்புவின் 48 ஆவது திரைப்படம் ஆகும். இதுதவிர நடிகர் கமல்ஹாசன் மற்றும் மணி ரத்னம் கூட்டணியில் உருவாகும் தக் லைஃப் படத்தில் சிம்பு நடிப்பதை படக்குழு சமீபத்தில் உறுதிப்படுத்தியது.

    முன்னதாக கொரோனா குமார் என்ற படத்தில் நடிப்பதற்காக நடிகர் சிம்புவுக்கு ரூ. 9 கோடி வரை சம்பளம் பேசப்பட்டதாகவும், அதில் ரூ. 4 கோடி வரை முன்பணமாக சிம்புவுக்கு கொடுக்கப்பட்டதாக தெரிகிறது. இந்த படத்தை இயக்குநர் கோகுல் இயக்க, வேல்ஸ் நிறுவனம் தயாரிக்க இருந்தது. எனினும், முன்பணம் பெற்றுக் கொண்ட நடிகர் சிம்பு, கொரோனா குமார் படம் தவிர மற்ற படங்களில் தொடர்ந்து நடித்து வருகிறார்.

     


    இதை எதிர்த்து வேல்ஸ் நிறுவனம் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இது தொடர்பான மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம் நடிகர் சிம்பு செப்டம்பர் 19 ஆம் தேதிக்குள் ஒரு கோடி ரூபாய்க்கான உத்தரவாதம் அளிக்க வேண்டும். உத்தரவாதம் அளிக்காத பட்சத்தில் சிம்பு மற்ற படங்களில் நடிக்க தடை விதிக்கப்படும் என உத்தரவிட்டுருந்தது.

    இந்த நிலையில், தக் லைஃப் படத்தில் சிம்பு நடிக்க தடை விதிக்க வேண்டும் என்று தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரில், "மணிரத்னம் இயக்கத்தில் உருவாகும் தக் லைஃப் படத்தில் சிம்பு நடிக்கக்கூடாது. அவர் ஏற்கனவே ஒப்புக் கொண்டபடி கொரோனா குமார் படத்தை சிம்பு முடித்துக் கொடுக்கவில்லை. இதனால் அவருக்கு ரெட் கார்டு போடப்பட்டு இருக்கிறது," என்று குறிப்பிட்டுள்ளார்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • 'டாடா' படத்தின் வெற்றிக்கு பிறகு நடிகர் கவின் கதாநாயகனாக நடித்துள்ள திரைப்படம் 'ஸ்டார்'.
    • இந்த படத்தை 'பியார் பிரேமா காதல்' படத்தை இயக்கி பிரபலமான இளன் இயக்கியுள்ளார்.

    'டாடா' படத்தின் வெற்றிக்கு பிறகு நடிகர் கவின் கதாநாயகனாக நடித்துள்ள திரைப்படம் 'ஸ்டார்'. இந்த படத்தை 'பியார் பிரேமா காதல்' படத்தை இயக்கி பிரபலமான இளன் இயக்கியுள்ளார். இந்த படத்தில் லால், அதிதி போஹங்கர், பிரீத்தி முகுந்தன், கீதா கைலாசம் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

    பி.வி.எஸ்.என்.பிரசாத், ஶ்ரீநிதி சாகர் ஆகியோர் தயாரித்துள்ள இந்த படத்துக்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். எழில் அரசு ஒளிப்பதிவு செய்துள்ளார். பிரதீப் இ ராகவ் படத்தொகுப்பு செய்கிறார்.

    'ஸ்டார்' திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த நிலையில் படம் வெற்றி பெற நடிகர் சிம்பு நேற்று அவரது எக்ஸ் தள பதிவில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

    அதில் அவர் ஸ்டார் படக்குழுவினர் அனைவருக்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள் இப்படம் தனது கனவுகளை துரத்திக் கொண்டு இருக்கும் அனைவரின் வாழ்க்கையை பிரதிபலிக்கும் வகையில் இருக்கும் என நம்புகிறேன் என பதிவிட்டார். சமீபத்தில் சிம்பு நடித்து கொண்டு இருக்கும் தக் லஃப் படத்தின் ப்ரோமோ வீடியோ வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    ×