search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Corona Kumar"

    • விஷ்ணு விஷாலுக்கு இந்த வாய்ப்பு கிடைத்துள்ளது
    • படத்தின் ஷூட்டிங் ஏப்ரல் மாதம் தொடங்க இருக்கிறது

    'இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா' படத்தை இயக்கி பிரபலமானவர் இயக்குனர் கோகுல். அதன் பின் கார்த்தியை வைத்து காஷ்மோரா, விஜய் சேதுபதி நடித்த ஜுங்கா போன்ற படங்களை இயக்கினார். கடைசியாக பாலாஜி நடித்த சிங்கப்பூர் சலூன் படத்தை இயக்கினார்.

    வேல்ஸ் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் ஐசரி கணேஷ் இதனை தயாரித்திருந்தார். 'சிங்கப்பூர் சலூன்' படத்தின் வெற்றி விழாவில் தன்னுடைய அடுத்த படத்தையும் வேல்ஸ் நிறுவனம் தான் தயாரிக்கும் என இயக்குனர் கோகுல் கூறினார். அந்த படத்தின் கதாநாயகன் யார் என்ற தகவலை அப்போது அவர் தெரிவிக்கவில்லை.

    இந்நிலையில் கோகுல் இயக்கும் 'கொரோனா குமார்' படத்தில் விஷ்ணு விஷால் கதாநாயகனாக நடிக்க உள்ளார் என அறிவிக்கப்பட்டுள்ளது. முதலில் இப்படத்தில் சிம்பு நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டார். அதன்பின் தயாரிப்பு நிறுவனத்துடன் ஏற்பட்ட பிரச்சினையால் சிம்பு விலகினார்.

    தற்போது விஷ்ணு விஷாலுக்கு இந்த வாய்ப்பு கிடைத்துள்ளது. படத்தின் ஷூட்டிங் ஏப்ரல் மாதம் தொடங்க இருக்கிறது. மேலும், விஷ்ணு விஷால் தயாரிப்பில் ஒரு படத்தை இயக்க இயக்குனர் கோகுல் ஒப்பந்தம் ஆகி உள்ளார்.

    • கொரோனா குமார் படத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்து விட்டு, படத்தை முடிக்கவில்லை என குற்றச்சாட்டு.
    • நடிகர் சிம்புவுக்கு வேறு படங்களில் நடிக்க தடை விதிக்க வேண்டும் என பட தயாரிப்பு நிறுவனம் மனு.

    நடிகர் சிம்பு செப்டம்பர் 19-ம் தேதிக்குள் ஒரு கோடி ரூபாய்க்கான உத்தரவாதத்தை அளிக்க வேண்டும், அளிக்கவில்லை எனில், அவர் மற்ற படங்களில் நடிப்பதற்கு தடை விதிக்கப்படும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    முன்னதாக 2021-ம் ஆண்டு "கொரோனா குமார்" என்ற படத்தில் நடிக்க நடிகர் சிம்பு ரூ. 9.5 கோடி சம்பளமாக பெற்றுக் கொள்ள ஒப்புக்கொண்டு இருக்கிறார். இதைத் தொடர்ந்து ரூ. 4.5 கோடி வரையிலான தொகையை பெற்றுக் கொண்ட நடிகர் சிம்பு, படப்பிடிப்பில் கலந்து கொள்ளவில்லை என்று வேல்ஸ் பட தயாரிப்பு நிறுவனம் தனது மனுவில் குறிப்பிட்டு இருக்கிறது.

     

    எனினும், "கொரோனா குமார்" படத்தில் நடிக்க நடிகர் சிம்புவுக்கு ரூ. 1 கோடி முன்பணமாக வழங்கப்பட்டதற்கான ஆவணங்கள் உள்ளன. அதன்படி நடிகர் சிம்பு "கொரோனா குமார்" படத்தில் நடிக்காமல் மற்ற படங்களில் நடித்து வருவதால், வேல்ஸ் நிறுவனம் நடிகர் சிம்புவுக்கு எதிராக மனுதாக்கல் செய்து இருந்தது.

    இந்த மனு மீதான விசாரணையில் தான், சென்னை உயர்நீதிமன்றம் நடிகர் சிம்பு ரூ. 1 கோடிக்கான உத்தரவாதம் அளிக்க உத்தரவிட்டுள்ளது. 

    ×