என் மலர்
செய்திகள்
- 'தலைவர் தம்பி தலைமையில்' படம் வருகிற 15-ந்தேதி பொங்கலன்று வெளியாகிறது.
- நேற்று 'தலைவர் தம்பி தலைமையில்' பட ட்ரெய்லர் வெளியீட்டு விழா நடைபெற்றது.
கடந்த 2024-ம் ஆண்டு ஜீவா நடிப்பில் வெளியாகி மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது 'ப்ளாக்' திரைப்படம். இப்படத்தை பாலசுப்பிரமணி கேஜி இயக்கியிருந்தார். ஜீவாவின் ஜோடியாக பிரியா பவானி சங்கர் நடிக்க சாம்.சி எஸ் இசையமைத்திருந்தார். திரைப்படம் ஒரு டைம் லூப் கதையம்சத்தில் உருவாகி மக்களின் ஆதரவை பெற்றது.
இதனை தொடர்ந்து, ஜீவாவின் 45 ஆவது படமாக 'தலைவர் தம்பி தலைமையில்' உருவாகி உள்ளது. 'Falimy' படத்தை இயக்கி புகழ்பெற்ற இயக்குனர் நிதிஷ் சகாதேவ் இப்படத்தை இயக்கி உள்ளார். ராவண கோட்டம் படத்தை தயாரித்த கண்ணன் ரவி இப்படத்தை தயாரித்துள்ளார்.
அரசியல் கலந்த நகைச்சுவை படமாக உருவாகி உள்ள 'தலைவர் தம்பி தலைமையில்' படம் வருகிற 30-ந்தேதி உலகமெங்கும் வெளியாக உள்ளதாக படக்குழு ஏற்கனவே அறிவித்திருந்தது. இந்த நிலையில், வருகிற 15-ந்தேதி பொங்கலன்று வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.
விஜயின் ஜனா நாயகன் படம் தணிக்கை சான்றிதழ் பிரச்சினையாக நேற்று வெளியாகவில்லை. இது தொடர்பான வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் வருகிற 21-ந்தேதி வரை ஒத்திவைத்துள்ளது. இந்த நிலையில்தான் ஜீவா படம் முன்னதாகவே ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், நேற்று தலைவர் தம்பி தலைமையில்' பட ட்ரெய்லர் வெளியீட்டு விழா நடைபெற்றது. இந்த விழாவில் பேசிய ஜீவா, "நான்தான் சென்சார் போர்டின் பிராண்ட் அம்பாசிடர். ஜிப்ஸி திரைப்படத்தில் 48 கட்கள் கொடுத்தனர். என்னைதான் சென்சார் போர்டு முதலில் செய்தார்கள் அவர்களோடு சேர்த்து கொரோனாவும் என்னை செய்தது" என்று கிண்டலாக தெரிவித்தார்.
- முட்டைக்கோஸைத் துருவி நன்றாக வதக்கி, மிளகாய், உப்பு, புளியுடன் சேர்த்து அரைத்தால் சுவையான தேங்காய்த் துவையல்ரெடி.
- பூரிக்கிழங்கு செய்யும்போது அதில் பொட்டுக்கடலையுடன் சோம்பு சேர்த்து அரைத்து கலந்தால் சுவையாக இருக்கும்.
* வத்தக்குழம்பு மற்றும் காரக்குழம்பு போன்றவற்றில் காரம் அதிகமாகி விட்டால், சிறிது தேங்காய் பால் விட்டு இறக்குங்கள். காரம் குறைவதோடு சுவையாகவும் இருக்கும்.
* சாம்பாருக்கு போடும் துவரம் பருப்பை லேசாக வறுத்து வேக வைத்தால் சாம்பார் சீக்கிரம் கெட்டுப் போகாது.
* கேரட்டை நீரில் போட்டு வேக வைப்பதை விட இட்லி போல் ஆவியில் வேக வைத்தால் கேரட்டில் உள்ள சத்துக்கள் அழியாமல் இருக்கும்.
* அவல் கேசரி செய்யும்போது ஒரு ஸ்பூன் நெய் விட்டு வாசனை வரும் வரை லேசாக வறுத்து, பின்பு மிக்சியில் லேசாக அரைத்து கேசரி செய்தால் ரவா கேசரி போல் இருக்கும்.
* அடைக்கு ஊற வைக்கும்போது அரிசி, பருப்பு வகைகளுடன், ஒரு டேபிள் ஸ்பூன் வெந்தயமும் ஊற வைத்து அரைத்தால் அடை மிருதுவாகவும், வாசனையாகவும் இருக்கும்.
* ரவா தோசை செய்யும்போது இரண்டு ஸ்பூன் கடலைமாவு சேர்த்து செய்து பாருங்கள். தோசை நன்கு சிவந்து மொறுமொறுவென நன்றாக இருக்கும்.
* சர்க்கரை பொங்கல் செய்யும் போது பாலுக்கு பதில் பால் பவுடர் சேர்த்து செய்தால் பொங்கலின் சுவை கூடும்.
* எலுமிச்சைப்பழ ரசம் செய்வது போல நார்த்தங்காய் சாறு பிழிந்து பருப்பு ரசம் செய்யலாம். சுவையாக இருக்கும்.
* காய்கறிகள், கீரை போன்றவற்றை வேக வைத்த நீரைக் கீழே கொட்டாமல் ரசத்தில் சேர்த்தால் சத்து மிகுந்த ரசம் தயார்.
* சூப் செய்ய நல்ல கிரேவி பதம் வருவதற்கு சோள மாவு கிடைக்காத பட்சத்தில் ஒரு ஸ்பூன் ஜவ்வரிசியை வறுத்து மிக்ஸியில் பொடி செய்து சேர்த்தால் அடர்த்தியாக இருக்கும். சத்தும் அதிகம்.
* பீட்ரூட்டைத்துருவி ஆவியில் வேக வைத்து, கெட்டியான தயிரில் போடவும். மிளகாய், தேங்காய், சீரகம் சேர்த்து விழுதாக அரைத்து பீட்ரூட் கலவையில் கலந்தால் சுவை மிகுந்த பீட்ரூட் பச்சடி தயார்.
* நீர் மோரில் சிறிது ரசப்பொடி சேர்த்து பருகினால் சுவையாக இருக்கும்.
* நீள மிளகாயை கிள்ளி, பிளாஸ்டிக் டப்பாவில் வைத்துக்கொண்டால், தாளிக்கும் போதும், மற்ற உபயோகத்துக்கும் சுலபமாக இருக்கும்.
* இஞ்சியை துருவி, வெயிலில் காயவைத்துப் பொடித்து வைத்துக்கொண்டால், டீ, குருமா, பொங்கல் போன்றவற்றில் சேர்க்க மணத்துக்கு மணம், உடலுக்கும் நல்லது.
* சப்பாத்தியின் மேல் சிறிது எண்ணெய்யைத் தடவி ஒரு டப்பாவில் போட்டு மூடி பிரிட்ஜில் வைத்தால் மூன்று நாட்கள் வரை பிரெஷ்ஷாக இருக்கும்.
* ஆப்பத்துக்கு மாவு அரைக்கும்போது தேங்காய்த்துருவல் மற்றும் வாழைப்பழத்தைச் சேர்த்து அரைத்து வைத்து ஆப்பம் வார்த்தால் ஆப்பம் சுவை மிகுந்து இருக்கும்.
* மாங்காய்த்தொக்கு, இஞ்சித் தொக்கு என்று எதை செய்தாலும் அதில் கொஞ்சம் எலுமிச்சை சாறு பிழிந்தால் அந்த தொக்குகள் நீண்ட நாட்களுக்கு கெடாமல் இருக்கும்.
* முட்டைக்கோஸைத் துருவி நன்றாக வதக்கி, மிளகாய், உப்பு, புளியுடன் சேர்த்து அரைத்தால் சுவையான தேங்காய்த் துவையல்ரெடி.
* பூரிக்கிழங்கு செய்யும்போது அதில் பொட்டுக்கடலையுடன் சோம்பு சேர்த்து அரைத்து கலந்தால் சுவையாக இருக்கும்.
* இட்லிக்கு மாவு அரைக்கும்போது ஊற வைத்த அரிசியையும், உளுந்தையும் முப்பது நிமிடங்கள் பிரிட்ஜில் வைத்திருந்து அரைத்தால் மிக்சி சூடாவதை தவிர்க்கலாம்.
- செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் விளக்கைத் துலக்கக்கூடாது.
- விளக்கில் நெய் ஊற்றி தீபம் ஏற்றினால் நினைத்தது நிறைவேறும்.
வீட்டில் ஒவ்வொருவரும் விளக்கேற்றி வழிபாடு செய்கிறோம். பூஜையறையில் ஐந்துமுக விளக்கேற்றி, அதில் ஐந்து திரிகளிலும் தீபம் ஏற்றி பண்டிகை நாட்களில் வழிபாடு செய்தால் பலன் அதிகம் கிடைக்கும்.
மற்ற நாட்களில் இரண்டு திரிப்போட்டு இரண்டுமுக தீபம் ஏற்ற வேண்டும். ஜோடி தீபம் ஏற்றி வழிபட்டால் தம்பதியர்களின் கோரிக்கைகள் நிறைவேறும். விளக்கை துலக்குவதற்கு ஏற்ற நாட்கள் எவை என்பதை அறிந்து கொள்ளவேண்டும்.
செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் விளக்கைத் துலக்கக்கூடாது. விளக்கில் குபேரனும், லட்சுமியும் குடியிருப்பதாக ஐதீகம். திங்கள் அல்லது வியாழக்கிழமை விளக்கைத் துலக்கிவைத்துக் கொண்டு, விளக்கில் நெய் ஊற்றி தீபம் ஏற்றினால் நினைத்தது நிறைவேறும்.
அதிகாலை பிரம்மமுகூர்த்த நேரத்தில், அந்நி மாலையில் பூஜை அறையில் கோலமிட்டு அதன்மேல் குத்துவிளக்கேற்றி ஜோதிக்கே ஜோதிவழிபாடு செய்தால் சோதனைகள் அகன்று சாதனைகள் நிகழ்த்த இயலும்.
- தலை, கை, கால் உள்ளிட்ட பல பகுதிகளில் பலத்த வெட்டுக்காயம் ஏற்பட்டு ஆதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
- தலைமறைவானவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்குள் ரவுடி வெட்டிக்கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
அரசு மருத்துவமனையில் பிரசவ வார்டில் அனுமதிக்கப்பட்டிருந்த தோழியை காண்பதற்காக வந்த ரவுடி ஆதி வெட்டி படுகொலை செய்யப்பட்டார். தலை, கை, கால் உள்ளிட்ட பல பகுதிகளில் பலத்த வெட்டுக்காயம் ஏற்பட்டு ஆதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
ரவுடி ஆதியை வெட்டிக்கொன்றது தோழி சுசித்ராவின் உறவினர்கள் மூன்று பேர் என்பது போலீசாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது.
தலைமறைவான சுசித்ராவின் உறவினர்களாக சூர்யா, அலிபாய் மற்றும் கார்த்திக் ஆகியோரை போலீசார் தேடி வருகின்றனர்.
- 'ஜனநாயகன்' திரைப்படத்தின் டிரெய்லரின் பல காட்சிகள் பகவந்த் கேசரி படத்துடன் ஒத்துப்போனது.
- பகவந்த் கேசரி Amazon Prime OTT தளத்தில் டிரெண்டிங்கில் முதல் இடத்தை பிடித்து அசத்தியது.
ஹெச். வினோத் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள படம் 'ஜன நாயகன்' ஜனவரி 9 ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாக இருந்த நிலையில் தணிக்கை சான்று வழங்கப்படாததால் கடைசி நேரத்தில் ரிலீஸ் தேதி ஒத்திவைக்கப்பட்டது. இதனால் விஜய் ரசிகர்கள் பெருத்த ஏமாற்றம் அடைந்தனர். மேலும் 'ஜன நாயகன்' படத்திற்கு தணிக்கை சான்று வழங்கப்படாததற்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
'ஜனநாயகன்' திரைப்படத்தின் டிரெய்லரின் பல காட்சிகள் பகவந்த் கேசரி படத்துடன் ஒத்துப்போனது. இதனையடுத்து 'ஜனநாயகன்' படம் சுமார் 80% 'பகவந்த் கேசரி' படத்தின் ரீமேக் எனும் கருத்து சமூக வலைதளங்களில் வைரலானது
இதனால் பாலகிருஷ்ணா நடிப்பில் தெலுங்கில் மாபெரும் வெற்றியை பெற்ற பகவந்த் கேசரி Amazon Prime OTT தளத்தில் டிரெண்டிங்கில் முதல் இடத்தை பிடித்து அசத்தியது.
இந்நிலையில், 'பகவந்த் கேசரி' படத்தின் அடிப்படை கருவை மட்டும் வைத்துக்கொண்டு `ஜனநாயகன்' படத்தை உருவாக்கியிருக்கிறார்கள் என்று 'பகவந்த் கேசரி' இயக்குநர் அனில் ரவிபுடி தெரிவித்துள்ளார்.
அண்மையில் கொடுத்த நேர்காணலில் பேசிய அனில் ரவிபுடி, "'பகவந்த் கேசரி' படத்தின் முதல் 20 நிமிடங்கள், இடைவேளை மற்றும் இரண்டாம் பாதியின் சில பகுதிகள் என சில விஷயங்கள் மட்டுமே ஜன நாயகன் படத்தில் அப்படியே இருக்கும். மற்றபடி வில்லன் கதாபாத்திரத்தை முழுமையாக மாற்றி, ரோபோ மற்றும் Sci-Fi அம்சங்களைச் சேர்த்துள்ளனர். தமிழ் ரசிகர்களுக்கு அது கண்டிப்பாக ஒரு புதுமையான அனுபவமாக இருக்கும்" என்று தெரிவித்தார்.
- பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தின் தமிழ் துறை தலைவரும் ஒத்துழைக்க ஒப்புக்கொண்டுள்ளார்.
- வாரணாசி மாவட்ட கல்வி ஆய்வாளரும் தமிழ் வகுப்புகள் நடத்த உத்தரவிட்டுள்ளார்.
வாரணாசி என அழைக்கப்படும் காசிக்கும், தமிழ்நாட்டுக்கும் இடையே நீண்ட காலமாக கலாசார, நாகரிக, கல்வி உறவு இருந்து வருகிறது. இதை பிரதிபலிக்கும் வகையில், பிரதமர் மோடி உத்தரவின்பேரில், காசி தமிழ் சங்கமம் ஆண்டுதோறும் நடந்து வருகிறது.
அதன் காரணமாக வாரணாசியில் தமிழ் கற்கும் ஆர்வம், இந்தி மாணவர்களிடம் எழுந்திருப்பதாக கடந்த மாதம் 28-ந் தேதி நடந்த 'மனதின் குரல்' நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பெருமிதமாக கூறினார். வாரணாசியில் உள்ள அரசு குயின் கல்லூரி மாணவர் பாயல் படேல், குறுகிய காலத்தில் தமிழ் கற்றுக்கொண்டதாக அவர் குறிப்பிட்டார்.
இதைத்தொடர்ந்து, பிரதமரின் தொலைநோக்கு பார்வைக்கு ஏற்ப அரசு குயின் கல்லூரி, தினந்தோறும் மாலைநேர தமிழ் வகுப்புகளை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது.
இதுகுறித்து அந்த கல்லூரியின் முதல்வர் சுமித் குமார் கூறியதாவது:-
தமிழ்நாட்டை சேர்ந்த சந்தியா குமார் சாய் இதற்கு முன்பு மாணவர்களுக்கு தமிழ் கற்றுக் கொடுத்தார். அவரிடம் பேசினோம். அவரும் ஆன்லைன் வகுப்பு எடுக்க சம்மதித்துள்ளார். பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தின் தமிழ் துறை தலைவரும் ஒத்துழைக்க ஒப்புக்கொண்டுள்ளார்.
வாரணாசி மாவட்ட கல்வி ஆய்வாளரும் தமிழ் வகுப்புகள் நடத்த உத்தரவிட்டுள்ளார். எனவே, மாலை நேர தமிழ் வகுப்புகள் தொடங்கப்படுகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
மாணவர்களின் தமிழ் ஆர்வத்தை அறிந்து, அடுத்த கல்வி ஆண்டில் இருந்து பள்ளியில் முறையான தமிழ் பாட வகுப்பு அறிமுகப்படுத்த பரிசீலித்து வருவதாக பள்ளி முதல்வர் பிரியங்கா திவாரி தெரிவித்தார்.
இதுதவிர, கலாசாரத்தை பரிமாறிக் கொள்ளும்வகையில், இந்தி கற்றுக்கொடுப்பதற்காக வாரணாசியில் இருந்து 50 ஆசிரியர்களை தமிழ்நாட்டுக்கு அனுப்பி வைப்பதற்கான ஏற்பாடுகளும் நடந்து வருகின்றன.
- சதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ஜேமிசன் பந்தில் 93 ரன்களில் கோலி ஆட்டமிழந்தார்.
- நேற்றைய போட்டியில் ஆட்ட நாயகன் விருதை கோலி வென்றார்.
இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து அணி 3 ஒருநாள் போட்டிகள் மற்றும் 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முதல் போட்டி இன்று வதோதராவில் நடைபெற்றது.
போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் சுப்மன் கில் பந்துவீச்சை தேர்வுசெய்தார். இதன்படி நியூசிலாந்து முதலில் பேட்டிங் செய்தது. 50 ஓவர்களின் முடிவில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 300 ரன்கள் குவித்து, இந்தியாவிற்கு வெற்றி இலக்காக 301 ரன்களை நிர்ணயித்தது. தொடர்ந்து விளையாடிய இந்திய அணி 49 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 306 ரன்கள் குவித்தது. இதன்மூலம் 4 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா வெற்றிப் பெற்றது. இதன்மூலம் தொடரில் இந்தியா 1-0 என்ற கணக்கில் உள்ளது.
இப்போட்டியில் ரோகித் அவுட்டாகி வெளியேறிய சமயத்தில் கோலி களமிறங்கிய போது மைதானத்தில் இருந்த ரசிகர்கள் கூச்சலிட்டு ஆரவாரம் செய்தனர்.
போட்டி முடிந்த பின்பு இதுகுறித்து பேசிய கோலி, "ஒருவர் அவுட் ஆகி வெளியே செல்லும்போது, களத்திற்குள் வரும் எனக்கு அதிக ஆர்ப்பரிப்பு எழுவது எனக்கு பிடிக்கவில்லைதான். இதே போல தோனிக்கும் அடிக்கடி நடக்கிறது. ரசிகர்களின் உற்சாகத்தை என்னால் புரிந்துகொள்ள முடிகிறது. அதே நேரத்தில், அவுட்டாகி வெளியேறுபவர் இதை பெரிதும் விரும்ப மாட்டார் என நினைக்கிறேன்" என்று தெரிவித்தார்.
- விஜய்க்கு உரிய பாதுகாப்பு வழங்கக்கோரி டெல்லி காவல்துறையிடம் அக்கட்சி தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது.
- கோரிக்கையை ஏற்ற டெல்லி காவல்துறை விஜய்க்கு முழு பாதுகாப்பு வழங்கப்படும் என உறுதி அளித்துள்ளனர்.
கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பலியான சம்பவம் தொடர்பான வழக்கு விசாரணைக்கு டெல்லியில் உள்ள சி.பி.ஐ. அலுவலகத்தில் ஆஜராகும் படி தமிழக வெற்றிக்கழகத் தலைவர் விஜய்க்கு சம்மன் அனுப்பப்பட்டது.
அதன்படி, இன்று காலை 11 மணி அளவில் டெல்லியில் உள்ள சி.பி.ஐ. அலுவலகத்தில் ஆஜராகுவதற்காக டெல்லி செல்வதற்காக சென்னை விமான நிலையத்திற்கு தமிழக வெற்றிக்கழகத் தலைவர் விஜய் வந்திருந்தார். அங்கிருந்து தனி விமானம் மூலம் டெல்லிக்கு புறப்பட்டு சென்றார்.

தனி விமானத்தில் டெல்லி செல்லும் தமிழக வெற்றிக்கழகத் தலைவர் விஜயுடன் ஆதவ் அர்ஜூனா, நிர்மல்குமார் ஆகியோர் உடன் சென்றுள்ளனர்.
இதனிடையே, தமிழக வெற்றிக்கழகத் தலைவர் விஜய்க்கு உரிய பாதுகாப்பு வழங்கக்கோரி டெல்லி காவல்துறையிடம் அக்கட்சி தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. அக்கோரிக்கையை ஏற்ற டெல்லி காவல்துறை விஜய்க்கு முழு பாதுகாப்பு வழங்கப்படும் என உறுதி அளித்துள்ளனர்.
முன்னதாக இவ்வழக்கு தொடர்பாக கடந்த மாதம் 29,30,31-ந்தேதிகளில் புஸ்சி ஆனந்த், ஆதவ் அர்ஜூனா, நிர்மல்குமார் ஆகியோர் டெல்லி சி.பி.ஐ. அலுவலகத்தில் ஆஜராகினர் என்பது குறிப்பிடத்தக்கது.
- இன்றைய ராசிபலன்
- 12 ராசிகளுக்கும் ஆன இன்றைய ராசிபலன்கள்
மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிபலன்களுக்கான இன்றைய ராசிபலன்கள்
மேஷம்
இடமாற்றம் இனிமை தரும் நாள். எதிர்காலம் குறித்து முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். அடிப்படை வசதிகளைப் பெருக்கிக் கொள்வீர்கள்.
ரிஷபம்
யோகமான நாள். தன வரவு தாராளமாக வந்து சேரும். இல்லத்திற்கு தேவையான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். பொதுவாழ்வில் புதிய பொறுப்புகள் வந்து சேரும்.
மிதுனம்
பக்குவமாகப் பேசி பாராட்டுகளைப் பெறும் நாள். அரைகுறையாக நின்ற பணிகளைச் செய்து முடிப்பீர்கள். குடும்பத்தில் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் அகலும்.
கடகம்
நண்பர்களால் நல்ல காரியம் நடைபெறும் நாள். விட்டுப்போன வரன்கள் மீண்டும் வந்து சேரும். தொலைபேசி வழித்தகவல் மகிழ்ச்சி தரும்.
சிம்மம்
தொழில் வளர்ச்சி மேலோங்கும் நாள். தொகை எதிர்பார்த்தபடியே வந்து சேரும். நினைத்த காரியம் நிறைவேறும். அரசியல்வாதிகளால் ஆதாயம் உண்டு.
கன்னி
தைரியத்தோடு செயல்பட்டு சாதனை படைக்கும் நாள். சங்கிலித் தொடர்போல வந்த கடன் சுமை குறையும். நீடித்த நோயிலிருந்து நிவாரணம் காண்பீர்கள்.
துலாம்
புதிய பாதை புலப்படும் நாள். புகழ் மிக்கவர்களின் சந்திப்பு கிடைக்கும். முயற்சிகளில் வெற்றி கிட்டும். தொழிலில் புதிய ஒப்பந்தங்கள் வந்துசேரும்.
விருச்சிகம்
நல்ல வாய்ப்புகள் இல்லம் தேடி வரும் நாள். நண்பர்களின் உதவி தக்க சமயத்தில் கிடைக்கும். பொருளாதார நிலை திருப்தி தரும். புதிய ஒப்பந்தங்கள் வந்து சேரும்.
தனுசு
முன்னேற்றம் கூடும் நாள். உடன்பிறப்புகள் நீங்கள் கேட்ட உதவிகளைச் செய்ய முன்வருவர். பாகப்பிரிவினைகள் சுமுகமாக முடியும்.
மகரம்
செல்வாக்கு மேலோங்கும் நாள். நீங்கள் பார்க்க நினைத்த நபர் உங்கள் இல்லம் தேடி வரலாம். உத்தியோகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும்.
கும்பம்
தெய்வீக சிந்தனை மேலோங்கும் நாள். திட்டமிட்ட காரியம் திட்டமிட்டபடியே நடைபெறும். திடீர் பயணத்தால் ஆதாயம் கிடைக்கும்.
மீனம்
சிந்தித்துச் செயல்பட வேண்டிய நாள். சேமிப்பில் சிறிது கரையலாம். எப்படியும் முடிந்துவிடும் என நினைத்த வேலை ஒன்று முடிவதில் தாமதமாகலாம்.
- மக்கள் டெஹ்ரான் உள்ளிட்ட முக்கிய நகரங்களில் வீதிகளில் இறங்கிப் போராடினர்.
- நாணய மதிப்பு வீழ்ச்சியால் ஈரானின் மத்திய வங்கி கவர்னர் தனது பதவியை ராஜினாமா செய்தார்.
டெஹ்ரான்:
ஈரானிய நாணயமான ரியால், அமெரிக்க டாலருக்கு எதிராக மிக மோசமான வீழ்ச்சியைச் சந்தித்தது. டிசம்பர் 28 அன்று, ஒரு அமெரிக்க டாலருக்கு நிகரான ரியால் மதிப்பு 1.42 மில்லியனாக வீழ்ந்தது.
பொருளாதார நெருக்கடி மற்றும் விலைவாசி உயர்வால் ஆத்திரமடைந்த மக்கள் மற்றும் வியாபாரிகள் தெஹ்ரான் உள்ளிட்ட முக்கிய நகரங்களில் வீதிகளில் இறங்கிப் போராடினர். போராட்டக்காரர்களைக் கலைக்கப் போலீசார் கண்ணீர்ப்புகைக் குண்டுகளை வீசினர். நிலைமை மோசமானதால் மத்திய வங்கி ஆளுநரான முகமது ரெசா ஃபர்சின் தனது பதவியை ராஜினாமா செய்தார்.
அமெரிக்காவின் பொருளாதாரத் தடை, பணவீக்கம், சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட பெட்ரோல் விலை மாற்றம் ஆகியவையே இந்த நெருக்கடிக்கு முக்கியக் காரணங்களாகும். பொதுமக்களின் தொடர் போராட்டத்தால் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.
போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கும் பாதுகாப்புப் படையிருக்கும் இடையே பல இடங்களில் மோதல் வெடித்ததை தொடர்ந்து வன்முறையாக மாறியது. வன்முறைகளில் பலியானோர் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. போராட்டத்தைக் கட்டுப்படுத்த இணைய சேவையை அரசாங்கம் துண்டித்துள்ளது.
இந்நிலையில், போராட்டத்தில் ஈடுபடுபவர்களைக் கண்டதும் துப்பாக்கியால் சுடவும் ஈரான் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி உத்தரவிட்டார். இதனால் ஏற்பட்ட வன்முறையில் பலியானோர் எண்ணிக்கை 538 ஆக உயர்ந்துள்ளது. சுமார் 10,600 பேர் கைது செய்யப்பட்டனர்.
- உலக இந்தி தினம் ஜனவரி 10-தேதி கொண்டாடப்படுகிறது.
- சீனாவின் பல்வேறு பல்கலைக்கழகங்களில் இந்தி மொழி கற்பிக்கப்படுகிறது.
பீஜிங்:
உலக இந்தி தினம் ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 10-தேதி கொண்டாடப்படுகிறது. சீனாவின் பல்வேறு பல்கலைக்கழகங்களில் இந்தி மொழி கற்பிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், சீனாவின் ஷாங்காய் நகரில் உலக இந்தி தினம் கொண்டாடப்பட்டது. அங்குள்ள இந்திய தூதரக அலுவலகத்தில் நடந்த இந்த விழாவில் ஆசிரியர்கள், மாணவர்கள் பங்கேற்றனர்.
இந்த விழாவில் சீனாவில் வசிக்கும் இந்தியர்களும் பெருமளவில் கலந்துகொண்டனர். அப்போது பேசிய இந்திய துணைத்தூதர் பிரதிக் மாத்தூர், இந்தி மொழி எல்லைகளைக் கடந்து நம்மை இணைக்கிறது என கூறினார். அவர் பிரதமர் மோடியின் செய்தியையும் வாசித்தார்.
- ஜெர்மனி அதிபர் பிரீட்ரிக் மெர்ஸ் இன்று அகமதாபாத் விமான நிலையம் வந்தடைந்தார்.
- ஜெர்மனி அதிபரின் இந்தியாவிற்கான முதல் பயணம் இதுவாகும்.
புதுடெல்லி,
பிரதமர் நரேந்திர மோடியின் அழைப்பின் பேரில் ஜெர்மனிஅதிபர் பிரீட்ரிக் மெர்ஸ் ஜனவரி 12 மற்றும் 13-ம் தேதிகளில் இந்தியாவிற்கு பயணம் மேற்கொள்கிறார். இது ஜெர்மனி அதிபரின் இந்தியாவிற்கான முதல் அதிகாரப்பூர்வ பயணமாகும்.
12-ம் தேதி அகமதாபாத்தில் பிரதமர் மோடி, ஜெர்மனி அதிபர் பிரீட்ரிக் மெர்ஸ் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்துகிறார்கள்.
வர்த்தகம், முதலீடு, தொழில்நுட்பம், கல்வி, திறன் மற்றும் இயக்கம் ஆகியவற்றில் ஒத்துழைப்பை மேலும் தீவிரப்படுத்துவது குறித்தும், பாதுகாப்பு, அறிவியல், புதுமை மற்றும் ஆராய்ச்சி, பசுமை, நிலையான மேம்பாடு, மக்களிடையேயான உறவுகள் போன்ற முக்கிய துறைகளில் ஒத்துழைப்பை மேம்படுத்துவது குறித்தும் அவர்கள் விவாதிப்பார்கள் என இந்திய அரசு தெரிவித்துள்ளது.
இந்நிலையில், ஜெர்மனி அதிபர் பிரீட்ரிக் மெர்ஸ் குஜராத் மாநிலத்தின் அகமதாபாத்தில் உள்ள சர்தார் வல்லபாய் படேல் சர்வதேச விமான நிலையத்துக்கு இன்று அதிகாலை வந்தடைந்தார்.
ஜெர்மனி அதிபரின் இந்தியாவிற்கான முதல் பயணம் இது என்பது குறிப்பிடத்தக்கது.






