என் மலர்tooltip icon

    செய்திகள்

    • தங்களது ஆட்சியில் 52 லட்சம் மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கப்பட்டதாக அதிமுக தெரிவித்தது.
    • போராட்டத்தில் பாஜக, அமமுக, கொங்கு இளைஞர் பேரவை, புரட்சி பாரதம் கட்சிகளின் பிரதிநிதிகள் பங்கேற்றனர்.

    கல்லூரி மாணவரகள் 10 லட்சம் பேருக்கு இலவச லேப்டாப் வழங்கப்படும் என தமிழக அரசு சார்பில் அறிவிக்கப்பட்டது.

    இந்நிலையில், ப்ளஸ் 1, ப்ளஸ் 2 மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்க வலியுறுத்தி சென்னையில் அதிமுகவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    திமுக ஆட்சியில் மாணவர்களின் வாக்குகளைப் பெறுவதற்காக லேப்டாப் வழங்குவதால் அதிமுகவினர் புகார் அளித்துள்ளனர்.

    தங்களது ஆட்சியில் 52 லட்சம் மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கப்பட்டதாக அதிமுக தெரிவித்தது.

    இந்த போராட்டத்தில் பாஜக, அமமுக, கொங்கு இளைஞர் பேரவை, புரட்சி பாரதம் கட்சிகளின் பிரதிநிதிகள் பங்கேற்றனர்.

    இதற்கிடையே, இலவச லேப்டாப் திட்டத்தால் பயன்பெற்றவர்களுடன் சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கலந்துரையாடினார்.

    இது ஒரு பக்கம் இருக்க, மதுரையில் மாநகராட்சியில் ரூ.200 கோடி ஊழல் எனக் கூறி அதிமுக போராட்டம் நடத்தியது.

    • ஐயப்ப பக்தர்கள், ராமேஸ்வரத்தில் உள்ள ராமநாதசுவாமி கோவிலுக்கு செல்வது வழக்கம்
    • இந்த வழக்கம் திடீரென்று எப்படித் தொடங்கியது எனத் தெரியவில்லை

    சபரிமலையில் மண்டல, மகர விளக்கு சீசனையொட்டி கடந்த மாதம் 16-ந்தேதி நடை திறக்கப்பட்டது. 17-ந் தேதி முதல் பூஜை. வழிபாடுகள் நடந்து வருகிறது.

    சீசனையொட்டி அடுத்த மாதம் (ஜனவரி) 10-ந் தேதி வரை தரிசனத்திற்கான ஆன்லைன் முன்பதிவு (தினசரி 70 ஆயிரம் பக்தர்கள்) நிறைவடைந்தது. உடனடி தரிசன முன்பதிவு அடிப்படையில் தினசரி 10 ஆயிரம் முதல் 15 ஆயிரம் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு வருகிறார்கள். நடப்பு சீசனையொட்டி மண்டல பூஜை வருகிற 27-ந் தேதியும், மகர விளக்கு பூஜை அடுத்த மாதம் 14-ந் தேதியும் நடக்கிறது.

    இந்நிலையில், சபரிமலை செல்லும் பக்தர்கள், ராமேஸ்வரத்தில் உள்ள ராமநாதசுவாமி கோவில் சென்று திரும்பும்போது பாம்பன் பாலத்தில் வாகனத்தை நிறுத்தி துணியை கடலில் வீசுவது திடீர் வாடிக்கை ஆகியுள்ளது. இந்த வழக்கம் திடீரென்று எப்படித் தொடங்கியது எனத் தெரியவில்லை

    பாம்பன் பாலத்தில் இருந்தபடி ஐயப்ப பக்தர்கள் துணிகளை கடலில் வீசுவதால் கடல் வளம் பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

    • டெல்லியில் தற்போது கடும் பனிமூட்டம் நிலவுகிறது.
    • இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

    டெல்லியில் தற்போது கடும் பனிமூட்டம் நிலவுகிறது. இதனால் விமானப் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது, சாலைகளில் தெளிவாகத் தெரியாத நிலை உள்ளது. மற்றும் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

    இந்த சூழலில் அங்கு ஒரு கிரிக்கெட் போட்டியும் நடந்துள்ளது. இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் பந்து வீச்சாளர் முகம் கூட சரியாக தெரியாத நிலையில் பந்தை வீச அதை பேட்டர் விளாசுகிறார். அதில் கீப்பர் மற்றும் பேட்டர் மட்டுமே தெளிவாக தெரிகிறார்கள். மற்றபடி மறுமுனையில் உள்ள பேட்டர் , பந்து வீச்சாளர், நடுவர் ஆகியோர் ஓர் அளவு தெரிந்த நிலையில் சுற்றி யார் எங்கே உள்ளார்கள் என்பதே தெரியவில்லை.

    இதனை பார்த்த கிரிக்கெட் ரசிகர்கள் காதலுக்கு கண்ணில்லை என்றால் பரவாயில்லை கிரிக்கெட் விளையாட கண் வேண்டுமே. அதில் பந்து வருவது கூட சரியாக தெரியவில்லை என ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். மேலும் சிலர் இவர்கள்தான் உண்மையான கிரிக்கெட் லவ்வர்ஸ் எனவும் மற்றும் சிலர் என்னதான் பனி மூட்டத்தில் கிரிக்கெட்டில் விளையாடினாலும் பாதுகாப்பு முக்கியம் எனவும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

    • சொத்துக்களை பறிமுதல் செய்ய கோர உள்ளதாகவும் தீபக் கோத்தாரி தெரிவித்துள்ளார்.
    • பெஸ்ட் டீல் டிவி பிரைவேட் லிமிடேட் எனும் ஆன்லைன் ஷாப்பிங் நிறுவனத்தின் இயக்குநர்களாக நடிகை ஷில்பா ஷெட்டியும், அவரது கணவர் ராஜ்குந்த்ராவும் உள்ளனர்

    பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டி மற்றும் அவரது கணவர் ராஜ் குந்த்ரா மீதான ரூ.60 கோடி மோசடி வழக்கில், மும்பை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் முதல் தகவல் அறிக்கையை பதிவு செய்துள்ளனர்.  கடந்த ஆகஸ்ட் 14 ஆம் தொழிலதிபர் தீபக் கோத்தாரி என்பவரிடமிருந்து ரூ.60 கோடி மோசடி செய்ததாக இருவர்மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

    இந்நிலையில் இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள புகார்தாரரின் அறிக்கையின்படி, தனது பணத்தை பறிமுதல் செய்ய அமலாக்க இயக்குநரகத்திடம் கோரிக்கை வைக்க உள்ளதாகவும், பணமோசடி தடுப்புச் சட்டத்தின் (PMLA) விதிகளின்படி சொத்துக்களை பறிமுதல் செய்ய கோர உள்ளதாகவும் தீபக் கோத்தாரி தெரிவித்துள்ளார்.

    பெஸ்ட் டீல் டிவி பிரைவேட் லிமிடேட் எனும் ஆன்லைன் ஷாப்பிங் நிறுவனத்தின் இயக்குநர்களாக நடிகை ஷில்பா ஷெட்டியும், அவரது கணவர் ராஜ்குந்த்ராவும் உள்ளனர். 2015-2023 காலகட்டத்தில் இந்த நிறுவனத்திற்கு தொழிலதிபர் தீபக் கோத்தாரியை ரூ.60.48 கோடி முதலீடு செய்ய தூண்டியதாகவும், ஆனால் அந்தப் பணத்தை இருவரும் தங்களின் சொந்த காரணங்களுக்காக பயன்படுத்தியதாகவும் கூறப்படுகிறது.


    • நீர்வரத்து சீரானவுடன் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி அளிக்கப்படும் என வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.
    • அருவியில் குளிக்க வந்த சுற்றுலா பயணிகள் ஆழியார் வனத்துறை சோதனை சாவடியுடன் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.

    ஆனைமலை:

    கோவை மாவட்டம் ஆழியார் அருகே கவியருவி உள்ளது.

    இந்த அருவிக்கு கோவை மாவட்டம் மட்டுமின்றி வெளிமாவட்டங்களில் இருந்தும் அதிகளவிலான சுற்றுலா பயணிகள் வந்து செல்வார்கள்.

    விடுமுறை நாட்களில் கவியருவியில் கூட்டம் அலைமோதும். சுற்றுலா பயணிகள் தங்கள் குடும்பத்தினருடன் கவியருவியில் குளித்து மகிழ்ந்து செல்வர்.

    இந்த நிலையில் ஆனைமலை சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று இரவு முதல் கனமழை கொட்டி தீர்த்தது. குறிப்பாக மேற்கு தொடர்ச்சி மலை பகுதி உள்ள வால்பாறை கவர்கல், காடம்பாறை போன்ற பகுதிகளிலும் இரவு முதல் அதிக அளவில் மழை பெய்தது.

    இந்த மழை காரணமாக ஆழியார் கவியருவில் திடீரென இன்று அதிகாலை காட்டாற்று வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. அத்துடன் தண்ணீர் செந்நிறமாக ஆர்ப்பரித்து கொட்டியது.

    தொடர்ந்து அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால், சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு நலன் கருதி அருவிக்கு செல்ல வனத்துறை தடை விதித்துள்ளது.

    நீர்வரத்து சீரானவுடன் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி அளிக்கப்படும் என வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

    இதனால் அருவியில் குளிக்க வந்த சுற்றுலா பயணிகள் ஆழியார் வனத்துறை சோதனை சாவடியுடன் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.

    தற்போது மழை பெய்து கொண்டிருப்பதால், வால்பாறை செல்லும் சுற்றுலா பயணிகள் மலைப்பாதையில் அதிக கவனத்துடன் செல்ல வேண்டும். ஆங்காங்கே மலைகளில் இருந்து அருவி போல் நீர் வந்து கொண்டிருப்பதால் அவற்றுக்கு அருகே நின்று புகைப்படம் மற்றும் செல்பி எடுக்கக் கூடாது எனவும் வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

    உடுமலை சுற்றுவட்டார பகுதிகளிலும் நேற்று நள்ளிரவு பலத்த மழை பெய்தது. இந்த மழை காரணமாக திருமூர்த்திமலை மலைமேலுள்ள பஞ்சலிங்க அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் அடிவாரத்தில் அமைந்துள்ள அமணலிங்கேஸ்வரர் கோவில் அருகில் செல்லும் தோணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு கோவில் வளாகத்தை வெள்ளம் சூழ்ந்து செல்கின்றது. இதனால் பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் கோவிலுக்குள் அனுமதிக்கப்படவில்லை.

    தொடர் கண்காணிப்பு மற்றும் பாதுகாப்பு பணியில் கோவில் ஊழியர்கள் ஈடுபட்டனர். 

    • டி20 பந்துவீச்சாளர்கள் தரவரிசையில் வருண் சக்ரவர்த்தி 818 புள்ளிகளை பெற்றுள்ளார்.
    • டி20 பந்து வீச்சாளர்கள் தரவரிசையில் அதிக புள்ளிகள் பெற்ற வீரர் 8-வது வீரர் ஆவார்.

    ஆடவருக்கான தரவரிசை பட்டியலை சிறிய மாற்றத்துடன் ஐசிசி இன்று வெளியிட்டுள்ளது. அதில் டி20 பந்துவீச்சாளர்கள் தரவரிசையில் தமிழக வீரர் வருண் சக்கரவர்த்தி முதலிடத்தில் தொடர்கிறார்.

    இந்நிலையில் தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான டி20 தொடரில் சிறப்பாக பந்துவீசிய நிலையில், வருண் சக்ரவர்த்தி 818 புள்ளிகளை பெற்று அசத்தியுள்ளார். இதன் மூலம் டி20 பந்து வீச்சாளர்கள் தரவரிசை புள்ளிகளில் அதிக புள்ளிகள் பெற்ற முதல் இந்தியர் என்ற வரலாற்று சாதனையை வருண் சக்கரவர்த்தி படைத்துள்ளார்.

    மேலும் டி20 பந்து வீச்சாளர்கள் தரவரிசையில் அதிக புள்ளிகள் பெற்ற வீரர் 8-வது வீரர் என்ற சாதனையை வருண் சக்கரவர்த்தி படைத்துள்ளார். இந்த பட்டியலில் பாகிஸ்தான் வீரர் உமர் குல் (865 புள்ளிகள்) முதல் இடத்தில் உள்ளார்.

    டி20 பந்து வீச்சாளர் தரவரிசையில் அதிக புள்ளிகள் பெற்ற வீரர்கள்:-

    உமர் குல் (பாகிஸ்தான்) 865

    சாமுவேல் பத்ரீ (வெஸ்ட் இண்டீஸ்) 864

    டேனியல் வெட்டோரி (நியூசிலாந்து) 858

    சுனில் நரைன் (வெஸ்ட் இண்டீஸ்) 832

    ரஷித் கான் (ஆப்கானிஸ்தான்) 828

    தப்ரைஸ் ஷம்சி (தென்னாப்பிரிக்கா) 827

    ஷாஹித் அப்ரிடி (பாகிஸ்தான்) 822

    வருண் சக்ரவர்த்தி (இந்தியா) 818

    ஷதாப் கான் (பாகிஸ்தான்) 811

    வனிந்து ஹசரங்கா (இலங்கை) 809

    • தொற்றா நோய்கள், நகர்ப்புற நிர்வாகம், வேளாண்மை, உள்ளிட்ட துறைகளில் விரிவான ஆய்வு நடத்தப்படும்
    • மெட்ஜெம்மா (MedGemma) மாதிரிகளைப் அடிப்படையாக கொண்டு இந்தியாவிற்கான Health Foundation Models

    சென்னை ஐஐடி உட்பட இந்தியாவின் நான்கு முக்கிய கல்வி நிறுவனங்களில் ஏஐ மையங்களை மேம்படுத்த கூகிள் நிறுவனம் ரூ.72 கோடி நிதி அளிப்பதாக அறிவித்துள்ளது. தொற்றா நோய்கள், நகர்ப்புற நிர்வாகம், வேளாண்மை, உள்ளிட்ட துறைகளில் விரிவான ஆய்வு நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    அதன்படி பெங்களூரு IISc-யில் உள்ள TANUH-க்கும், கான்பூரில் உள்ள Airawat Research Foundation-க்கும், IIT Madras-ல் உள்ள AI Centre of Excellence for Education-க்கும், IIT Ropar-ல் உள்ள ANNAM.AI-க்கும் இந்த நிதி பகிரப்படும். நேற்று (டிச.16) நடைபெற்ற கூகுளின் 'Lab to Impact' உரையாடலில் இந்த செய்தி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்வில் மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானும் கலந்துகொண்டார்.


    டெல்லியில் நேற்று நடைபெற்ற இந்திய ஏஐ தாக்க உச்சி மாநாடு2026-ல் இந்த அறிவிப்பு வெளியானது

    மேலும் கூகுள் தனது மெட்ஜெம்மா (MedGemma) மாதிரிகளைப் அடிப்படையாக கொண்டு இந்தியாவிற்கான Health Foundation Models- ஐ உருவாக்குவதற்கு $400,000 (தோராயமாக இந்திய மதிப்பில் ரூ.3 கோடியே 30 லட்சம்) வழங்குவதாகவும் கூறியுள்ளது. இதன் ஒரு பகுதியாக தோல் மருத்துவம் மற்றும் OPD வகைப்பாட்டிற்கான AI கருவிகளை உருவாக்க , அஜ்னா லென்ஸ் (ஸ்டார்அப் நிறுவனம்) எய்ம்ஸ் நிபுணர்களுடன் இணைந்து செயல்படும். IISc ஆராய்ச்சியாளர்கள் இதன் மருத்துவ பயன்பாடுகளை ஆராய்வர்.   

    • மெஸ்ஸிக்கு தனது கையெழுத்திட்ட பனியனை நினைவுப் பரிசாக டெண்டுல்கர் வழங்கினார்.
    • மெஸ்ஸி தனது இன்டர் மியாமி அணியினருடன் பயணத்தை முடித்துக் கொண்டு புறப்பட்டனர்.

    அர்ஜென்டினா கால்பந்து அணியின் கேப்டனும், 8 முறை உலகின் சிறந்த கால்பந்து வீரர் விருதை வென்றவருமான லயோனல் மெஸ்ஸி தனது இன்டர் மியாமி அணியினருடன் இந்தியாவுக்கு 3 நாள் சுற்றுப்பயணம் வந்திருந்தனர்.

    3 நாள் சுற்றுப்பயணத்தில் முதாவதாக கொல்கத்தாவில் தனது முழுஉருவ சிலையை திறந்து வைத்த பிறகு சால்ட்லேக் ஸ்டேடியத்திற்கு சென்ற மெஸ்ஸி அங்கு கூட்டம் அதிகம் இருந்ததால் பாதுகாப்பு பிரச்சினை காரணமாக அங்கிரந்து சிறிது நேரத்தில் வெளியேறினார்.

    அடுத்ததாக ஐதராபாத் சென்ற மெஸ்ஸி அங்கு தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டியுடன் கால்பந்து ஆடினார்.

    இதனையடுத்து 2-வது நாள் பயணமாக அவர் நேற்று மும்பை சென்றார். அங்குள்ள வான்கடே ஸ்டேடியத்தில் பிரமாண்ட நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. ரசிகர்கள் கூட்டத்தால் ஸ்டேடியம் நிரம்பி வழிந்தது.

    மராட்டிய முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ், இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர், இந்திய கால்பந்து நட்சத்திரம் சுனில் சேத்ரி உள்பட பிரபலங்களும் கலந்து கொண்டனர்.

    மெஸ்ஸிக்கு தனது கையெழுத்திட்ட பனியனை நினைவுப் பரிசாக டெண்டுல்கர் வழங்கினார். இங்கு மெஸ்ஸி ஒரு மணி நேரம் செலவிட்டார்.

    இதனையடுத்து மெஸ்ஸி 3-வது நாள் சுற்றுப்பயணமாக இன்று டெல்லி சென்றார். மதியம் மும்பையில் இருந்து டெல்லி வந்தடைந்த மெஸ்ஸியும் அவரது குழுவும் அருண் ஜெட்லி மைதானத்தில் நடந்த நிகழ்வில் பங்கேற்றனர்.

    மாலை 4 மணிக்குப் பிறகு நடந்த இந்த நிகழ்வில், சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் தலைவர் ஜெய் ஷா இந்திய கிரிக்கெட் அணியின் 10வது எண் ஜெர்சியை மெஸ்ஸிக்கு பரிசளித்தார்.

    இதேபோல், மெஸ்ஸிக்கு தொழிலதிபர் ஆனந்த் அம்பானி அன்பாக பரிசளித்துள்ளார்.

    அதன்படி, தொழிலதிபர் ஆனந்த் அம்பானி, மெஸ்ஸிக்கு ரிச்சர்ட் மில் RM 003 V2 ஆசிய எடிஷன் கைக்கடிகாரத்தை பரிசளித்தார். இதன் மதிப்பு சுமார் ரூ.10.91 கோடியாகும். உலகிலேயே இந்த எடிஷனில் 12 கைக்கடிகாரங்கள் மட்டுமே தயாரிக்கப்பட்டுள்ளன.

    • நிதிஆயோக் வெளியிட்டிருக்கும் இலக்குகளில் தமிழ்நாடு முதல் இடத்தில் இருக்கிறது.
    • காலநிலை மாற்றச் சவால்களையும் எதிர்த்து, தமிழ்நாடு போராடும்! தமிழ்நாடு வெல்லும்!

    சென்னை:

    தமிழ்நாடு காலநிலை மாற்றத்திற்கான ஆட்சி மன்ற குழுவின் 3-வது கூட்டம் சென்னை தலைமைச் செயலக 10-வது மாடி கூட்டரங்கில் இன்று நடைபெற்றது. கூட்டத்திற்கு தலைமை தாங்கி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-

    காலநிலை மாற்றத்தின் விளைவுகளை இப்போது கண்கூடாக பார்த்து கொண்டு இருக்கிறோம். இப்போது கூட, 'டிட்வா புயல்' எப்படிப்பட்ட கோர தாண்டவத்தை ஆடியது. அதனால் இலங்கை உள்ளிட்ட நாடுகள் எப்படி பாதிக்கப்பட்டது என்று பார்த்தோம். நம்முடைய அரசு தொடர்ந்து மேற்கொண்டு வந்த பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளால், பெரியளவில் பாதிப்புகள் ஏற்படாமல் தமிழ்நாட்டை காப்பாற்றி இருக்கிறோம். எப்போதோ ஒருமுறை, புயல்-வெள்ளங்களை எதிர்கொண்ட காலத்தை எல்லாம் நாம் கடந்து விட்டோம். அதை உணர்ந்து தான் 3 ஆண்டுகளுக்கு முன்பே இந்த பேரிடர்களுக்கேற்ற தடுப்பு மற்றும் தகவமைப்பு உட்கட்டமைப்புகளை தொடங்கிவிட்டோம்.

    காலநிலை மாற்ற ஆட்சி மன்றக்குழு, பசுமைத் தமிழ் நாடு இயக்கம், தமிழ்நாடு ஈரநில இயக்கம், தமிழ்நாடு காலநிலை மாற்ற இயக்கம், தமிழ்நாடு நெய்தல் மீட்சி இயக்கம் என்று நாம் முன் கூட்டியே நிறைய செய்து கொண்டிருக்கிறோம். இதனால், இந்தியாவிற்கே வழிகாட்டும் நிலையில் தமிழ்நாடு இருக்கிறது.

    கடந்த பட்ஜெட் கூட்டத் தொடரில், ரூ.24 கோடி மதிப்பீட்டில் காலநிலைக் கல்வியறிவு முன்னெடுப்பு குறித்த அறிவிப்பை வெளியிட்டோம். அதைத் தொடர்ந்து, தமிழ்நாடு முழுவதும் திறமைமிகு 4 ஆயிரம் பள்ளி ஆசிரியர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு இருக்கிறார்கள். மிக விரைவில், காலநிலைக் கல்வியறிவு குறித்த பயிற்சிகள் வழங்கப்பட இருக்கிறது.

    அதுமட்டுமல்லாமல், பள்ளி மாணவர்களுக்கு, சுற்றுச்சூழல் விழிப்புணர்வு ஏற்படுத்த ஆண்டுக்கு இரண்டு முறை, மாவட்ட காலநிலை மாற்ற இயக்கம் மூலமாக, நடத்தப்படும் ஒரு நாள் கோடைக்கால மற்றும் குளிர்கால சிறப்பு முகாம்களை 2 நாள் முகாம்களாக பள்ளிக் கல்வித்துறை மூலமாக நடத்த ஏற்பாடு செய்தி ருக்கிறோம்.

    மேலும், கூல் ரூபிங் திட்டத்தை, தமிழ்நாடு காலநிலை மாற்ற இயக்கத்தின் 2025-26-ம் ஆண்டிற்கான செயல்திட்டத்தில் சேர்த்திருக்கிறோம். அம்பத்தூரில் இருக்கும் பெருந்தலைவர் காமராஜர் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி வகுப்பறைகளில், கூல் ரூபிங் எனப்படும் அதிக வெப்ப பிரதிபலிப்புமிக்க வெள்ளைப் பூச்சுகள் பூசப்பட்டிருக்கிறது. இதன் மூலமாக வகுப்பறைகளில் வெப்ப அளவினை கணக்கி டக்கூடிய சென்சார்கள் வைத்து கண்காணித்ததில், அறை வெப்ப நிலை 1.5 டிகிரி முதல் 3 டிகிரி வரை குறைந்திருக்கிறது. இதுகுறித்த அறிக்கையின் அடிப் படையில், இந்தத் திட்டத்தை தமிழ்நாட்டில் இருக்கும் 297 பசுமைப் பள்ளிகளிலும் செயல்படுத்த இருக்கிறோம்.

    கடலோர வாழ்விடங்களை, இயற்கை சார்ந்த தீர்வுகள் மூலம் மறு சீரமைக்கும் திட்டத்தின்கீழ், தொடர்ச்சியாக அலையாத்தி மரக்கன்றுகள் நடப்பட்டு வருகிறது. இதன் ரிசல்ட் என்ன தெரியுமா? தமிழ்நாட்டில் 4500 ஹெக்டேர் பரப்பளவுக்கு இருந்த அலையாத்திக் காடுகள், 9 ஆயிரம் ஹெக்டேராக, அதாவது, இரண்டு மடங்காக அதிகரித்திருக்கிறது.

    காலநிலை மாற்றத்தை எதிர்கொள்வதில் பெண்களின் பங்குதான் அளப்பரியது.

    அதனால்தான், 100 மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு, காலநிலை மாற்றம் மற்றும் நெகிழி ஒழிப்புப் பரப்புரையையும் மேற்கொள்ள, 100 இ-ஆட்டோக்கள் வழங்கப்பட்டிருக்கிறது.

    தமிழ்நாட்டின் மொத்த பசுமை இல்ல வாயு வெளியேற்றம் போக்குவரத்துத் துறையின் பங்கு 12 சதவீதத்தில் இருந்து 19 சதவீதமாக உயர்ந்திருக்கிறது என்று ஆய்வறிக்கைகளில் தெரிய வந்திருக்கிறது. அதுவும், கடந்த 2005 முதல் 2019-க்கு இடைப்பட்ட காலத்தில், இது 3 மடங்கு அதிகரித்திருக்கிறது.

    சென்னை போன்ற மெட்ரோ சிட்டியில் போக்குவரத்து நெரிசலும் அதிகரித்து வருகிறது. மக்கள் அதிகமாக பொது போக்குவரத்தை பயன்படுத்துவது தான் இதைக் குறைக்க சிறந்த வழி! அதை ஊக்குவிப்பதற்காகதான், எம்.டி.சி. மூலமாக, முதற்கட்டமாக 120 மின்சாரப் பஸ்களை பயன்பாட்டிற்கு கொண்டு வந்திருக்கிறோம். மக்களிடம் நல்ல வரவேற்பு இருக்கிறது. அதனால், மேலும் 600 மின்சாரப் பஸ்களை விரைவில் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்போகிறோம். இதனால், நெரிசல் குறையும், காற்று மாசு குறையும், எல்லோருடைய நேரமும் மிச்சமாகும்.

    வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத அளவுக்கு இவ்வளவும் செய்திருப்பதால்தான், ஒன்றிய அரசே நமக்கு சான்றிதழ் வழங்கியிருக்கிறார்கள். நிதிஆயோக் வெளியிட்டிருக்கும் இலக்குகளில் தமிழ்நாடு முதல் இடத்தில் இருக்கிறது.

    "நம்முடைய அரசுக்கு வளர்ச்சி ஒரு கண் என்றால், சுற்றுச்சூழல் மற்றும் இயற்கை வளங்களைப் பாதுகாப்பது மற்றொரு கண்" புவி வெப்பமயமாதலைப் பொறுத்தவரை, தமிழ்நாடு 2070-ம் ஆண்டிற்கு முன்பே, 'நெட் ஜீரோ' இலக்கை அடைய வேண்டும்! நம்முடைய அரசு வருவதற்கு முன்பு, இதற்கான நிதி ஒதுக்கீடும் மிகவும் குறைவாகதான் இருந்தது. ஆனால், திராவிட மாடல் அரசில் ரூ.500 கோடி வரை இதற்காக ஒதுக்கி இருக்கிறோம்.

    நமது மாநிலத்தை பாதித்த பேரிடர்களுக்கான நிவாரண நிதியாக தமிழ்நாடு அரசு கேட்டதில் வெறும் 17 விழுக்காடுதான் ஒன்றிய அரசு விடுவித்திருக்கிறது. நாம் கேட்டது 24 ஆயிரத்து ரூ.679 கோடி. அவர்கள் வழங்கியது வெறும் ரூ.4 ஆயிரத்து 136 கோடி மட்டும்தான்!

    எத்தனையோ சவால்களை எதிர்கொண்டு தமிழ்நாடு போராடியிருக்கிறது! வென்றிருக்கிறது! நாட்டிற்கே வழிகாட்டி இருக்கிறது! அதுபோல், இந்த காலநிலை மாற்றச் சவால்களையும் எதிர்த்து, தமிழ்நாடு போராடும்! தமிழ்நாடு வெல்லும்!

    இவ்வாறு அவர் பேசினார்.

    • இந்த மோட்டார்சைக்கிளில் தனித்துவமாக, பெட்ரோல் டேங்க், ஹெட்லைட் வெள்ளை நிறத்தில் இடம் பெற்றுள்ளது.
    • இதன் டேங்க் பகுதியில் புளூ மற்றும் ரெட் ஸ்டிரைப்கள் இடம்பெற்றுள்ளன.

    டிவிஎஸ் நிறுவனம் இந்திய சந்தையில் புதிய ரோனின் அகோண்டா எடிஷன் மோட்டார்சைக்கிளை அறிமுகம் செய்துள்ளது. இந்த பைக்கில் 225 சிசி சிங்கிள் சிலிண்டர் என்ஜின் இடம் பெற்றுள்ளது. இது அதிகபட்சமாக 20.4 hp பவர், 19.9 நியூட்டன் மீடஅடர் டார்க் வெளிப்படுத்துகிறது. இத்துடன் 5 ஸ்பீடு கியர் பாக்ஸ் உள்ளது.

    அம்சங்களை பொருத்தவரை இந்த மோட்டார்சைக்கிளில் சிங்கிள் சேனல் ஏபிஎஸ், எல்சிடி இன்ஸ்ட்ரூமென்ட் கன்சோல், ப்ளூடூத் கனெக்டிவிட்டி வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த மோட்டார்சைக்கிளில் தனித்துவமாக, பெட்ரோல் டேங்க், ஹெட்லைட் வெள்ளை நிறத்தில் இடம் பெற்றுள்ளது.

    இதன் டேங்க் பகுதியில் புளூ மற்றும் ரெட் ஸ்டிரைப்கள் இடம்பெற்றுள்ளன. இந்திய சந்தையில் இந்த பைக்கின் விலை ரூ.1.31 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த பைக் டிவிஎஸ் ரோனின் சீரிசில் என்ட்ரி லெவல் மற்றும் மிட் ரேஞ்ச் மாடலுக்கு இடையில் நிலைநிறுத்தப்பட்டுள்ளது.

    • இன்று ராகுல் காந்தி பெர்லினில் புலம் பெயர்ந்த இந்தியர்களை சந்திக்கிறார்.
    • காங்கிரஸ் வெளிநாட்டு தலைவர்களையும் ராகுல் காந்தி சந்தித்து பேசுகிறார்.

    பாராளுமன்ற மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி வருகிற 15-ந்தேதி ஜெர்மனி புறப்பட்டு சென்றார். 20-ந்தேதி வரை அவர் ஜெர்மனியில் இருப்பார்.

    இன்று அவர் பெர்லினில் புலம் பெயர்ந்த இந்தியர்களை சந்திக்கிறார். அதோடு ஐரோப்பிய நாடுகளில் உள்ள அனைத்து காங்கிரஸ் வெளிநாட்டு தலைவர்களையும் ராகுல் காந்தி சந்தித்து பேசுகிறார்.

    வெளிநாடு வாழ் இந்தியர்கள் சந்திக்கும் பிரச்சனைகள், அயலக காங்கிரசில் அதிக அளவில் உறுப்பினர்களை இணைப்பது, அமைப்பை வலுப்படுத்துவது உள்ளிட்டவை குறித்தும் ஆலோசனை ராகுல் காந்தி நடத்தவுள்ளார்.

    இந்நிலையில், இன்று ராகுல் காந்தி முனிச்சில் உள்ள BMW உற்பத்தி ஆலையை பார்வையிட்டார். குறிப்பாக ராகுல் காந்தி, பி.எம்.டபிள்யூ. நிறுவனத்துடன் இணைந்து உருவாக்கப்பட்ட டி.வி.எஸ். நிறுவனத்தின் 450சிசி மோட்டார் சைக்கிளில் அமர்ந்து பார்த்தார். இது தொடர்பான வீடியோவை காங்கிரஸ் கட்சி வெளியிட்டுள்ளது.

    இதனிடையே பேசிய ராகுல் காந்தி, "வலுவான பொருளாதாரங்களுக்கு உற்பத்தித் துறைதான் முதுகெலும்பாகத் திகழ்கிறது. துரதிர்ஷ்டவசமாக, இந்தியாவில் உற்பத்தித் துறை சரிவைச் சந்தித்து வருகிறது. நாம் வளர்ச்சியை வேகப்படுத்த வேண்டுமானால், நாம் அதிகமாக உற்பத்தி செய்ய வேண்டும். மேலும் பெருமளவில் உயர்தர வேலைவாய்ப்புகளை உருவாக்க வேண்டும்" என்று தெரிவித்தார்.

    • விற்பனை வருகிற டிசம்பர் 23ஆம் தேதி, பகல் 12 மணிக்கு தொடங்குகிறது.
    • இத்துடன் டால்பி அட்மோஸ், ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் மற்றும் இன்-டிஸ்பிளே கைரேகை சென்சார் வழங்கப்பட்டுள்ளது.

    இந்திய சந்தையில் மோட்டோரோலா நிறுவனத்தின் அல்ட்ரா ஸ்லிம் மாடலாக மோட்டோரோலா எட்ஜ் 70 ஸ்மார்ட்போன் வெளியாகி இருக்கிறது. 5.99 மில்லிமீட்டர் அளவில் மிக மெல்லியதாக வடிவமைக்கப்பட்டு இருக்கும் புதிய மோட்டோ ஸ்மார்ட்போனி 5000mAh பேட்டரியுடன், 68W டர்போ-பவர் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி உள்ளது.

    ஸ்மார்ட்போன் பிரியர்கள் விரும்பும்படியான குவால்காம் ஸ்னாப்டிராகன் 7 ஜென் 4 சிப்செட்டி மூலம் மோட்டோரோலா எட்ஜ் 70 மாடல் இயங்குகிறது. இத்துடன் அட்ரினோ 722 ஜிபியு கிராஃபிக்ஸ் கார்டு வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 16 ஓஎஸ் கொண்டுள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட்போனிற்கு ஆண்ட்ராய்டு அப்டேட், 4 வருடங்களுக்கு செக்யூரிட்டி அப்டேட் வழங்குவதாக மோட்டோரோலா நிறுவனம் தெரிவித்து இருக்கிறது.

    புதிய எட்ஜ் 70 ஸ்மார்ட்போன் கார்னிங் கொரில்லா கிளாஸ் 7i பாதுகாப்புடன் 6.7 இன்ச் 2712x1220 பிக்சல் pOLED ஸ்கிரீன் வழங்கப்பட்டுள்ளது. புகைப்படங்களை எடுக்க 50MP பிரைமரி கேமரா, 50MP அல்ட்ரா வைடு கேமரா, முன்புறம் 50MP செல்ஃபி கேமரா வழங்கப்பட்டு இருக்கிறது.

    இத்துடன் மோட்டோ ஏஐ 2.0 மூலம் ஏ.ஐ. இமேஜ் ஸ்டூடியோ (AI Image Studio), ஸ்கெட்ச் டூ இமேஜ் (Sketch to Image), ஸ்டைல் சின்க் (Style Sync) போன்று கேமரா சர்ந்த அம்சங்கள் இந்த மாடலில் நிறைந்துள்ளன.

    இந்த ஸ்மார்ட்போன் மிலிட்டரி கிரேடு டியூரபிலிட்டி பாதுகாப்பு, IP68 மற்றும் IP69 ரேட்டிங் கொண்ட டஸ்ட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டண்ட் வசதி கொண்டுள்ளது. இத்துடன் டால்பி அட்மோஸ், ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் மற்றும் இன்-டிஸ்பிளே கைரேகை சென்சார் வழங்கப்பட்டுள்ளது.

    இந்திய சந்தையில் புதிய மோட்டோரோலா எட்ஜ் 70 ஸ்மார்ட்போனின் 8 ஜிபி ரேம், 256 ஜிபி மெமரி மாடல் விலை ரூ.29,999 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. குறிப்பிட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தும் போது தள்ளுபடி சலுகைகளும் வழங்கப்படுகிறது. இதனால் ஸ்மார்ட்போனினை ரூ.28,999 முதல் வாங்கலாம். விற்பனை வருகிற டிசம்பர் 23ஆம் தேதி, பகல் 12 மணிக்கு தொடங்குகிறது.

    புதிய மோட்டோரோலா எட்ஜ் 70 ஸ்மார்ட்போன் பேண்டோன் லில்லி பேட், பேண்டோன் கேஜெட் கிரே மற்றும் பேண்டோன் ப்ரோன்ஸ் கிரீன் ஆகிய வண்ணங்களில் கிடைக்கிறது.

    ×