என் மலர்
மொபைல்ஸ்
அறிமுகம் விலையாக இந்த போனின் விலையில் ரூ.5000 குறைக்கப்பட்டு 8ஜிபி/128ஜிபி வேரியண்ட் ரூ.44,999க்கும், 12ஜிபி/256ஜிபி வேரியண்ட் ரூ.52,999க்கும் விற்பனை செய்யப்படவுள்ளது.
ரியல்மி நிறுவனத்தின் ரியல்மி ஜிடி2 ப்ரோ ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த போனில் Qualcomm Snapdragon 8 Gen 1 சிப்செட், Bio-polymer-ல் தயாரிக்கப்பட்ட பேக் பேனல், 120Hz ரெஃப்ரெஷ் ரெட்டுடன் 2கே ரெஷலியூஷன் கொண்ட டிஸ்பிளே, LTPO2 AMOLED பேனல், 1Hz ரெஃப்ரெஷ் ரேட் வரை செல்லக்கூடிஉய டிஸ்பிளே ஆகியவை தரப்பட்டுள்ளன.
கேமராவை பொறுத்தவரை இதில் IMX766 சோனி சென்சாருடன் கூடிய 50 மெகாபிக்ஸல் பிரைமரி கேமரா, 150 டிகிரி ஃபீல்ட் ஆஃப் விஷன் கொண்ட 50 மெகாபிக்ஸல் அல்ட்ரா வைட் லென்ஸ், 40X மைக்ரோ லென்ஸ் அம்சங்கள் இதில் வழங்கப்பட்டுள்ளன.
5000mAh பேட்டரி, 65W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆகிய அம்சங்கள் கொண்டுள்ள இந்த போனின் 8ஜிபி/128ஜிபி வேரியண்டின் விலை ரூ.49,999 ஆகும். 12ஜிபி/256ஜிபி வேரியண்டின் விலை ரூ.57,999-ஆகும்.
அறிமுகம் விலையாக இந்த போனின் விலையில் ரூ.5000 குறைக்கப்பட்டு 8ஜிபி/128ஜிபி வேரியண்ட் ரூ.44,999க்கும், 12ஜிபி/256ஜிபி வேரியண்ட் ரூ.52,999க்கும் கிடைக்கும்.
இந்த ஸ்மார்ட்போன் ஏப்ரல் 14ம் தேதி விற்பனைக்கு வருகிறது.
சார்ஜர் பயன்பாடு குறைந்தால் கார்பன் டை ஆக்சைடு வெளியிடப்படுவது குறையும் என்றும், சுற்றுச்சூழல் பாதுகாப்பு கருதி சார்ஜர் நிறுத்தப்படுவதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
ரியல்மி நிறுவனம் தனது நார்சோ 50A பிரைம் ஸ்மார்ட்போனுக்கு சார்ஜர் வழங்கப்படாது என அறிவித்துள்ளது. ஏற்கனவே ஆப்பிள், சாம்சங் ( சில மாடல்களுக்கு மட்டும்) நிறுவனங்கள் சார்ஜர் வழங்குவதை நிறுத்திய நிலையில் தற்போது ரியல்மியும் அறிவித்துள்ளது.
சார்ஜர் பயன்பாடு குறைந்தால் கார்பன் டை ஆக்சைடு வெளியிடப்படுவது குறையும் என்றும், சுற்றுச்சூழல் பாதுகாப்பு கருதி சார்ஜர் வழங்கப்படுவது நிறுத்தப்படுவதாக ரியல்மி நிறுவனம் தெரிவித்துள்ளது.
சார்ஜர் வழங்காதது மூலம் ஸ்மார்ட்போன்களொன் விலை மேலும் குறைக்கப்பட்டு, கூடுதல் சலுகையுடன் வழங்கப்படும் என அந்நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது. மேலும் எல்லா ரியல்மி ஸ்மார்ட்போன்களுக்கும் சார்ஜர் நிறுத்தப்படவில்லை. நார்சோ 50A ப்ரைம் ஸ்மார்ட்போன்களுக்கு மட்டுமே நிறுத்தப்பட்டுள்ளது என கூறியுள்ளது.
ரியல்மி நிறுவனம் இந்த மாடலின் விற்பனை மற்றும் பயனர்களின் தரும் ஆதரவை பொறுத்து பிற போன்களுக்கும் சார்ஜர் வழங்குவதை நிறுத்தும் என கருதப்படுகிறது.
ஏற்கனவே சாம்சங் கேலக்ஸி ஏ73, கேலக்ஸி ஏ53, கேலக்ஸி ஏ33 ஆகிய போன்களுக்கும் சில ஃபிளாக்ஷிப் போன்களுக்கும் சார்ஜரை நிறுத்தியுள்ளது. ஜியோமி நிறுவனம் எம்11 ஸ்மார்ட்போன்கள்க்கு சார்ஜர் வழங்குவதை கடந்த 2020-ம் ஆண்டு டிசம்பர் முதல் அறிவித்தது. இருப்பினும் சர்வேதச சந்தைகளில் மட்டுமே எம்.ஐ 11 போனுக்கு சார்ஜர் நிறுத்தப்பட்டுள்ளன. இந்தியாவில் தொடர்ந்து வழங்கப்பட்டு வருகிறது.
இந்த ஸ்மார்ட்போன் கடந்த மாதம் உலக சந்தையில் அறிமுகமாக நிலையில் தற்போது இந்தியாவில் வெளியாகவுள்ளது.
மோட்டோரோலா நிறுவனம் வரும் ஏப்ரல் 8ம் தேதி இந்தியாவில் மோட்டோ ஜி22 ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்யவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் கடந்த மாதம் உலக சந்தையில் அறிமுகமாக நிலையில் தற்போது இந்தியாவில் வெளியாகவுள்ளது.
இதுகுறித்து வெளியான தகவலின்படி மோட்டோ ஜி22 ஸ்மார்ட்போனில் 90Hz IPS LCD டிஸ்பிளே, சைட் மவுண்ட் ஃபிங்கர் ஸ்கேனர், MediaTek Helio G37 பிராசஸர் இடம்பெறும் என கூறப்படுகிறது.
மேலும் இதில் 4ஜிபி ரேம் மற்றும் 64 ஸ்டோரேஜ் வழங்கப்படும் என்றும், ஆண்ட்ராய்டு 12 நியர் ஸ்டாக் மொபைல் ஓஎஸ் வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கேமராவை பொறுத்தவரை 16 மெகாபிக்ஸல் செல்ஃபி கேமரா, 50 மெகாபிக்ஸல் பிரைமரி சென்சார் குவாட் பிக்ஸல் தொழில்நுட்பத்துடன் இடம்பெறவுள்ளது. இத்துடன் 8 மெகாபிக்ஸல் அல்ட்ரா வைட் லென்ஸ், டெப்த் சென்சார், மேக்ரோ விஷன் சென்சார் ஆகியவையும் இடம்பெறுகிறது.
இந்த போனின் விலை குறித்து எந்த தகவலும் வெளியாகவில்லை.
இன்று மதியம் பகல் 12 மணி முதல் ஃபிளிப்கார்ட், ரியல்மி தளங்களில் இந்த போன் விற்பனைக்கு வருகிறது.
ரியல்மி நிறுவனத்தின் புதிய ரியல்மி சி31 ஸ்மார்ட்போன் இன்று முதல் இந்தியாவில் விற்பனைக்கு வருகிறது.
இந்த போனில் ஆண்ட்ராய்டு 11-ஐ அடிப்படையாக கொண்ட UI R எடிஷன் வழங்கபப்டவுள்ளது. மேலும் 6.5 இன்ச் HD+ எல்.சிடி டிஸ்பிளே 120Hz டச் சாம்பிளிங் ரேட்டுடன் வருகிறது. மேலும் இதில் 12nm Unisoc T612 பிராசஸர் வழங்கப்பட்டுள்ளது.
கேமராவை பொறுத்தவரை இதில்f/2.2 லென்ஸ் கொண்ட 13 மெகாபிக்ஸல் பிரைமரி கேமரா, f/2.4 லென்ஸ் கொண்ட மேக்ரோ கேமரா, f/2.8 லென்ஸ் கொண்ட மோனொகுரோம் சென்சார் இடம்பெறவுள்ளன. மேலும் இதில் 5 மெகாபிக்ஸல் செல்ஃபி கேமராவும் இடம்பெற்றுள்ளது.
சைட் மவுண்டட் ஃபிங்கர் பிரிண்ட், 5000 mAh பேட்டரி, 10W சார்ஜிங் உள்ளிட்ட ஏராளமான அம்சங்கள் இந்த போனில் இடம்பெறவுள்ளன.
இந்த போனின் 3ஜிபி/32ஜிபி மாடலின் விலை ரூ.8,999-ஆகவும், 4ஜிபி/64ஜிபி வேரியண்டின் விலை ரூ.9,999-ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
இன்று மதியம் பகல் 12 மணி முதல் ஃபிளிப்கார்ட், ரியல்மி தளங்களில் இந்த போன் விற்பனைக்கு வருகிறது.
இந்த போனுடன் புல்லட்ஸ் ஒயர்லெஸ் Z2 இயர்போன்ஸ் மற்றும் பட்ஸ் ப்ரோ ரேடியண்ட் சில்வர் இரண்டும் விற்பனைக்கு வருகின்றன.
ஒன்பிளஸ் நிறுவனத்தின் ஒன்பிளஸ் 10 ப்ரோ ஸ்மார்ட்போன் இந்தியாவில் இன்று முதல் விற்பனை செய்யப்படுகிறது
இந்த ஸ்மார்போனில் 6.7 இன்ச் QHD+ AMOLED டிஸ்பிளே 1Hz முதல் 120 Hz வரையிலான டைனமிக் ரெஃப்ரெஷ் ரெட்டுடன் வழங்கப்பட்டுள்ளது. மேலும் இதில் ஸ்னேப் டிராகன் 8 ஜென் 1 SoC ப்ராசஸர் இடம்பெற்றுள்ளது.
மேலும் இதில் HASSELBLAD 48 மெகாபிக்ஸல் SONY IMX789 சென்சார் (F/1.8) ஆப்டிகள் இமேஜ் ஸ்டேபிலைஷேனனுடன் வருகிறது. அத்துடன் 50 மெகாபிக்ஸல் Samsung ISOCELL JN1 அல்ட்ரா வைட் சென்சார், 8 மெகாபிக்ஸல் டெலிபோட்டோ லென்ஸ் OIS சப்போர்ட்டுட இடம்பெறுகிறது. 32 மெகாபிக்ஸல் செல்ஃபி கேமரா இதில் தரப்பட்டுள்ளது.
5000mAh பேட்டரி, 80W ஃபிளாஷ் சார்ஜிங், 50W AirVOOC ஒயர்லெஸ் சார்ஜிங், டால்பி அட்மாஸ் ஸ்பீக்கர் ஆகிய அம்சங்களுடன் வரும் இந்த ஸ்மார்ட்போனில் 12 ஜிபி LPDDR5 ரேம், 256 ஜிபி ஸ்டோரேஜ் ஆகியவையும் இதில் வழங்கப்பட்டுள்ளன.
இந்த போனின் 8ஜிபி+128ஜிபி வேரியண்ட் விலை ரூ.66,999-ஆகவும், 12ஜிபி+256ஜிபி வேரியண்டின் விலை ரூ.71,999-ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு நவம்பர் மாதமும் இந்த போன் வெடித்து ஒருவர் படுகாயம் அடைந்த செய்தி வெளியான நிலையில், தற்போது மீண்டும் அதே மாடல் போன் வெடித்துள்ளது.
ஒன்பிளஸ் நிறுவனத்தின் ஒன்பிளஸ் நார்ட் 2 ஸ்மார்ட்போன் வெடித்து ஒருவர் படுகாயம் அடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. டெல்லியில் இந்த சம்பவம் நடந்ததாக கூறப்படுகிறது.
லக்ஷய் வெர்மா என்பவர் ட்விட்டர் பக்கத்தில், தனது சகோதரன் ஒன்பிளஸ் நார்ட் 2 ஸ்மார்ட்போனில் பேசிக்கொண்டிருந்தபோது அந்த போன் வெடித்ததாக தெரிவித்துள்ளார். இதற்காக அவர் சர்வீஸ் செண்டரில் சென்று புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என கூறியுள்ளார்.
’ என் சகோதரன் அதிர்ஷ்டவசமாக யிர் தப்பியுள்ளார். இந்த சம்பவம் குறித்து ஒன்பிளஸ் நிறுவனத்திடம் பேசியும் எந்த பலனும் இல்லை. பாதிப்படைந்த ஸ்மார்ட்போனுக்கு மாற்றாக இழப்பீடு கூட தரவில்லை’ என கூறியுள்ளார்.
இந்த சம்பவம் குறித்து நுகர்வோர் நீதிமன்றத்தில் மனு அளித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
கடந்த ஆண்டு நவம்பர் மாதமும் நார்ட் 2 போன் வெடித்து ஒருவர் படுகாயம் அடைந்த செய்தி வெளியான நிலையில் தற்போது மீண்டும் அதே மாடல் போன் வெடித்துள்ளது பயனர்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.
இந்த போனை HDFC வங்கி கார்ட் கொண்டு வாங்குபவர்களுக்கு ரூ.1000 உடனடி தள்ளுபடியும் வழங்கப்படும்.
போக்கோ நிறுவனத்தின் போக்கோ எக்ஸ்4 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போன் இந்தியாவில் இன்று முதல் விற்பனைக்கு வருகிறது.
இந்த போன் ஆண்ட்ராய்டு 11 மற்றும் MIUI 13 ஆகிய இயங்குதளங்களில் இயங்கும். இதில் 6.67 இன்ச் ஃபுல் ஹெச்.டி+, சூப்பர் AMOLED டிஸ்பிளே 20:9 ஆஸ்பெக்ட் ரேஷியோ, 120Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 360Hz டச் சாம்பிளிங் ரேட்டுடன் வருகிறது.
இந்த போனில் Snapdragon 695 SoC, Adreno 619 GPU இடம்பெற்றுள்ளன.
கேமராவை பொறுத்தவரை இதில் 64 மெகாபிக்ஸல் Samsung ISOCELL GW3 பிரைமரி சென்சார் f/1.8 லென்ஸ், 8 மெகாபிக்ஸல் அல்ட்ரா வைட் ஷூட்டர் லென்ஸ், 2 மெகாபிக்ஸல் மேக்ரோ ஷூட்டர் லென்ஸ் தரப்பட்டுள்ளது.
குளோபல் வேரியண்ட் போக்கோ எக்ஸ்4 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போனில் 108 மெகாபிக்ஸல் பிரைமரி கேமரா சென்சார் தரப்பட்டுள்ளது.
செல்ஃபி கேமராவை பொறுத்தவரை 16 மெகாபிக்ஸல் செல்ஃபி கேமரா f/2.45 லென்சுடன் தரப்பட்டுள்ளது.
இதில் 5000 mAh Li-Polymer battery, 67W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆகியவையும் இடம்பெற்றுள்ளன.
இந்த போனின் 6ஜிபி ரேம்/64 ஜிபி மெமரி வேரியண்டின் விலை ரூ.18,999-ஆகவும், 6ஜிபி ரேம்/128 ஜிபி வேரியண்டின் விலை ரூ.19,999-ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த போனின் டாப் வேரியண்ட்டான 8ஜிபி ரேம்/128 ஜிபி வேரியண்டின் விலை ரூ.21,999-ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
இந்த போனை HDFC வங்கி கார்ட் கொண்டு வாங்குபவர்களுக்கு ரூ.1000 உடனடி தள்ளுபடியும் வழங்கப்படும். மேலும் போக்கோ எக்ஸ்2, போக்கோ எக்ஸ்3 மற்றும் போக்கோ எக்ஸ்3 ப்ரோ ஸ்மார்ட்போனை இக்ஸ்சேஞ்ச் செய்தால் கூடுதலாக ரூ.3000 சலுகையும் உண்டு.
இதில் தரப்பட்டுள்ள 9x ஃபோகஸ் அம்சம் துல்லியமாக ஃபோகஸ் செய்ய உதவும் என கூறப்படுகிறது.
ரியல்மி நிறுவனம் புதிய ரியல்மி 9 5ஜி ஸ்மார்ட்போனை வரும் ஏப்ரல் 7ம் தேதி இந்தியாவில் அறிமுகம் செய்யவுள்ளது.
இந்த போனில் 108 மெகாபிக்ஸல் ப்ரோலைட் கேமரா இடம்பெற்றிருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இதில் ISOCELL HM6 இமேஜ் சென்சார், 6.6 இன்ச் IPS LCD டிஸ்பிளே, 144Hz ரெஃப்ரெஷ்ரேட், AMOLED டிஸ்பிளே ஆகியவை இடம்பெறும் என கூறப்படுகிறது.
இந்த போன் 5000mAh பேட்டரி, 33W சார்ஜிங் வசதியை கொண்டிருக்கும் என்றும், 6ஜிபி+128 ஜிபி மற்றும் 8ஜிபி+128 ஜிபி மாடலில் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் இதில் தரப்பட்டுள்ள 9x ஃபோகஸ் அம்சம் துல்லியமாக ஃபோகஸ் செய்ய உதவும் என கூறப்படுகிறது.
இந்த போனில் விலை இந்திய மதிப்பில் ரூ.15,000-க்கும் குறைவாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த போனை ஐசிஐசிஐ வங்கி கார்ட் கொண்டு வாங்கினால் ரூ.2000 உடனடி கேஷ்பேக், அறிமுக விலையாக ரூ.1,500 வரை தள்ளுபடி ஆகியவை வழங்கப்பட்டுள்ளன.
சாம்சங் நிறுவனம் புதிய கேலக்ஸி எம்33 5ஜி ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது.
இந்த போனில் 6.6 இன்ச் full HD+ Infinity-V டிஸ்பிளே 120Hz ரெஃப்ரெஷ் ரேட்டுடன் வழங்கப்பட்டுள்ளது. இந்த போன் ஆண்ட்ராய்டு 12, One UI 4.1-ல் இயங்குகிறது.
இதில் octa-core 5nm Exynos processor வழங்கப்பட்டுள்ளது. கேமராவை பொறுத்தவரை இந்த போனில் f/1.8 அப்பெர்ச்சர் கொண்ட 50 மெகாபிக்ஸல் பிரைமரி சென்சார், 5 மெகாபிக்ஸல் அல்ட்ரா வைட் சென்சார் (120 டிகிரி ஃபீல்ட் ஆஃப் வீவ், f/2.4 அப்பேர்ச்சருடன்) f/2.2 அப்பெர்ச்சர் கொண்ட 2 மெகாபிக்ஸல் மேக்ரோ ஷூட்டர், f/2.2 அப்பெர்ச்சர் கொண்ட 2 மெகாபிக்ஸல் டெப்த் கேமரா இடம்பெற்றுள்ளது.
இதில் வழங்கப்பட்டுள்ள கேமராக்கள் போக்கே எஃபெக்ட், சிங்கிள் டே, ஆப்ஜெக்ட் எரேசர், வீடியோ டி.என்.ஆர் போன்ற வசதிகளை கொண்டுள்ளது. இத்துடன் 8 மெகாபிக்ஸல் செல்ஃபி ஷூட்டர் கேமராவும் இதில் தரப்பட்டுள்ளது.
மேலும் இந்த போனில் 6000mAh பேட்டரி, 25W ஃபாஸ்ட் சார்ஜிங் வழங்கப்பட்டுள்ளன.
இந்த போனின் 6ஜிபி+128 ஜிபி வேரியண்டின் விலை ரூ.18,999-ஆகும். 8ஜிபி+128ஜிபி வேரியண்டின் விலை ரூ.20,499-ஆகும். இந்த இரு போன்களையும் அறிமுகம் விலையாக ரூ.17,999 மற்றும் ரூ.19,999-க்கு சாம்சங் வழங்குகிறது.
மேலும் இந்த போனை ஐசிஐசிஐ வங்கி கார்ட் கொண்டு வாங்கினால் ரூ.2000 உடனடி கேஷ்பேக்கும் வழங்கப்படும்.
ஜியோமி நிறுவனம் புதிய டீசரின் மூலம் ஜியோமி 12 ப்ரோ ஸ்மார்ட் அறிமுகத்தை உறுதி செய்துள்ளது.
ஜியோமி நிறுவனம் ஜியோமி 12 ப்ரோ ஸ்மார்ட்போனை விரைவில் அறிமுகம் செய்யவுள்ளதாக தகவல் கசிந்துள்ளது.
இந்த ஸ்மார்ட்போனில் 6.73-inch WQHD+ (1,440x3,200 pixels) E5 AMOLED டிஸ்பிளே, 1500 nits பிரைட்னஸ், 480Hz டச் சாம்பிளிங் ரேட், 120 Hz டைனமிக் ரெஃப்ரெஷ் ரேட்டுடன் இடம்பெறும் என கூறப்படுகிறது.
மேலும் இதன் டிஸ்பிளே குறைந்த வெப்பம் கொண்ட polycrystalline oxide backplane தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்டிருக்கும் என கூறப்படுகிறது.
மேலும் இந்த போனில் Snapdragon 8 Gen 1 SoC, 12ஜிபி LPDDR5 ரேம், Sony IMX707 சென்சார் கொண்ட 50 மெகாபிக்ஸல் பிரைமரி கேமரா (OIS சப்போர்ட்டுடன்), 50 மெகாபிக்ஸல் போட்ரெய்ட் சென்சார், 50 மெகாபிக்ஸல் அல்ட்ரா வைட் சென்சார், 32 மெகாபிக்ஸல் செல்ஃபி கேமரா சென்சார் ஆகியவை இடம்பெறும் என கூறப்படுகிறது.
4,600mAh பேட்டரி, 120W அதிவேக சார்ஜிங் ஆகிய அம்சங்கள் கொண்ட இந்த ஸ்மார்ட்போனின் 8ஜிபி/128ஜிபி வேரியண்டின் விலை ரூ.55,100-ஆகவும், 8ஜிபி/256ஜிபி வேரியண்டின் விலை ரூ.58,600-ஆகவும், 12ஜிபி/256ஜிபி வேரியண்டின் விலை ரூ.63,300-ஆகவும் இந்திய மதிப்பில் விலை நிர்ணயம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஜியோமி நிறுவனம் புதிய டீசரின் மூலம் ஜியோமி 12 ப்ரோ ஸ்மார்ட் அறிமுகத்தை உறுதி செய்துள்ளது.
இந்த போன் வரும் ஏப்ரல் 6-ம் தேதி பகல் 12 மணி முதல் ஃபிளிப்கார்ட், ரியல்மி தளங்களில் விற்பனைக்கு வருகிறது.
ரியல்மி நிறுவனம் புதிய ரியல்மி சி31 ஸ்மார்ட்போனை இந்தியாவில் இன்று அறிமுகம் செய்துள்ளது.
இந்த போனில் ஆண்ட்ராய்டு 11-ஐ அடிப்படையாக கொண்ட UI R எடிஷன் வழங்கபப்டவுள்ளது. மேலும் 6.5 இன்ச் HD+ எல்.சிடி டிஸ்பிளே 120Hz டச் சாம்பிளிங் ரேட்டுடன் வருகிறது. மேலும் இதில் 12nm Unisoc T612 பிராசஸர் வழங்கப்பட்டுள்ளது.
கேமராவை பொறுத்தவரை இதில்f/2.2 லென்ஸ் கொண்ட 13 மெகாபிக்ஸல் பிரைமரி கேமரா, f/2.4 லென்ஸ் கொண்ட மேக்ரோ கேமரா, f/2.8 லென்ஸ் கொண்ட மோனொகுரோம் சென்சார் இடம்பெறவுள்ளன. மேலும் இதில் 5 மெகாபிக்ஸல் செல்ஃபி கேமராவும் இடம்பெற்றுள்ளது.
சைட் மவுண்டட் ஃபிங்கர் பிரிண்ட், 5000 mAh பேட்டரி, 10W சார்ஜிங் உள்ளிட்ட ஏராளமான அம்சங்கள் இந்த போனில் இடம்பெறவுள்ளன.
இந்த போனின் 3ஜிபி/32ஜிபி மாடலின் விலை ரூ.8,999-ஆகவும், 4ஜிபி/64ஜிபி வேரியண்டின் விலை ரூ.9,999-ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
வரும் ஏப்ரல் 6-ம் தேதி பகல் 12 மணி முதல் ஃபிளிப்கார்ட், ரியல்மி தளங்களில் இந்த போன் விற்பனைக்கு வருகிறது.
ரியல்மி 8 பயனர்கள் புதிய அப்டேட்டை பெற தங்களது ஸ்மார்ட்போனை RMX3085_11.A.24 அல்லது RMX3085_11.A.26 அப்டேட்டில் வைத்திருக்க வேண்டும்.
ரியல்மி நிறுவனம் ரியல்மி 8 ஸ்மார்ட்போன்களுக்கு ஆண்ட்ராய்டை அடிப்படியாக கொண்ட ரியல்மி யூ.ஐ 3.0 அப்டேட் வெளியாகியுள்ளது. இந்த புதிய அப்டேட் RMX3085_11.C.06 யூ.ஐ வெர்ஷனுடன் வருகிறது. மேலும் இதில் ஏராளமான அம்சங்கள் இடம்பெற்றுள்ளன.
இந்த புதிய அப்டேட்டில் மறு டிசைன் செய்யப்பட்ட ஐகான்களுடன் ஹோம் ஸ்க்ரீன் லேஅவுட் கொடுக்கப்பட்டுள்ளது. அது குவாண்டம் அனிமேஷன் இன்ஜின் 3.0-வை பயன்படுத்தியுள்ளது. இதன்மூலம் 300-க்கும் அதிகமான அனிமேஷன்கள் வழங்கப்பட்டுள்ளன. மேலும் இந்த புதிய அப்டேட்டில் பேக்ரவுண்ட் ஸ்ட்ரீம் மோட் தரப்பட்டுள்ளது. இதன்மூலம் போன் லாக் ஆகி இருந்தாலும் ஆடியோ அல்லது வீடியோவை பேக்ரவுண்டில் பிளே செய்ய முடியும். மேலும் ரியல்மி புக் மற்றும் ரியல்மி ஸ்மார்ட்போன்களுக்கு இடையே பயனர்கள் எளிதாக மாறும் வகையில் இந்த அப்டேட் கொடுக்கப்பட்டுள்ளது.
ஃபிளெக்ஸிபிள் விண்டோஸ் என்ற அம்சமும் இதில் இடம்பெற்றுள்ளது. இதன்மூலம் பயனர்கள் மை ஃபைல்களில் இருந்து ஃபைலை இழுத்து ஃப்ளோட்டிங் விண்டோவிற்கு கொண்டு வர முடியும். அதேபோல போட்டோ செயலிகளில் இருந்து போட்டோக்களையும் கொண்டு வர ஃப்லோட்டிங் விண்டோவிற்கு கொண்டு வர முடியும்.
இந்த புதிய படேட்டில் குயிக் லாஞ்ச் என்ற அம்சமும் இடம்பெற்றுள்ளது. இதன்மூலம் நமது ஸ்மார்ட்போன் நாம் அதிகம் பயன்படுத்தும் ஆப்களை அடையாளம் கண்டு ஓபன் செய்ய உதவுகிறது. இத்துடன் கேமராவில் உள்ள கஸ்டமிஷேஷன் ஆப்ஷன், புதிய ஜூம் ஸ்லைடர் ஆகிய பல அம்சங்கள் இதில் இடம்பெற்றுள்ளன.
ரியல்மி 8 பயனர்கள் புதிய அப்டேட்டை பெற தங்களது ஸ்மார்ட்போனை RMX3085_11.A.24 அல்லது RMX3085_11.A.26 அப்டேட்டில் வைத்திருக்க வேண்டும். இந்த புதிய அப்டேட் வெர்ஷன் RMX3085_11.C.06 என்ற பெயரை கொண்டுள்ளது. மேலும் இது ஒவ்வொரு பயனர்களுக்காக வழங்கப்பட்டு வருகிறது.






