search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஹர்திக் பட்டேல்"

    சூரத்தில் ஏற்பட்ட தீ விபத்து குறித்து நடவடிக்கை எடுக்கக் கோரி போராட்டம் நடத்த திட்டமிட்டிருந்த ஹர்திக் பட்டேல் கைது செய்யப்பட்டார்.
    சூரத்:

    குஜராத் மாநிலம் சூரத் நகரின் சர்தானா பகுதியில் உள்ள தக்சஷீலா காம்ப்ளக்ஸ் என்ற 4 மாடி கட்டிடத்தில், கடந்த வெள்ளிக்கிழமை பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதில், அங்குள்ள பயிற்சி வகுப்பில் இருந்த 22 மாணவ-மாணவிகள் உயிரிழந்தனர். தீ விபத்து குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

    இந்நிலையில், தீ விபத்து குறித்து சூரத் மேயர் மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது 12 மணி நேரத்திற்குள் நடவடிக்கை எடுக்காவிட்டால், உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபடப்போவதாக காங்கிரஸ் தலைவர் ஹர்திக் பட்டேல் எச்சரிக்கை விடுத்திருந்தார். 

    அவர் கூறியபடி, போராட்டம் நடத்துவதற்காக தீ விபத்து நடந்த இடத்திற்கு தனது ஆதரவாளர்களுடன் புறப்பட்டுச் சென்றார். ஆனால், அவரை போலீசார் தடுத்து நிறுத்தி கைது செய்து இச்சாபூர் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

    இதுபற்றி சூரத் போலீஸ் கமிஷனர் சதீஷ் சர்மா கூறியதாவது:-

    தீ விபத்து ஏற்பட்ட இடத்தின் அருகே ஹர்திக் பட்டேல் போராட்டம் நடத்துவதற்கு காங்கிரஸ் சார்பில் சர்தானா காவல்  நிலையத்தில் அனுமதி கோரப்பட்டது. ஆனால், பாதுகாப்பு கருதி போராட்டத்திற்கு அனுமதி வழங்கப்படவில்லை. ஆனால், அதையும்  மீறி ஹர்திக் பட்டேல் புறப்பட்டுச் சென்றதால் அவர் கைது செய்யப்பட்டுள்ளார். 

    தீ விபத்து நடந்த இடத்திற்கு நேற்று அவர் சென்றபோது, எதிர் தரப்பைச் சேர்ந்த ஒருவர் அவரை தாக்கியுள்ளார். இதனால் அவரது பாதுகாப்பு கேள்விக்குறியாகி உள்ளது. அதனால் அந்த பகுதிக்கு அவரை செல்ல அனுமதிக்க முடியாது.

    இவ்வாறு அவர் கூறினார்.
    குஜராத் மாநிலத்தில் போராட்டத்தின்போது வெடித்த வன்முறை தொடர்பாக விதிக்கப்பட்ட 2 ஆண்டு சிறை தண்டனையை ரத்து செய்யுமாறு ஹர்திக் பட்டேல் தொடர்ந்த வழக்கை ஐகோர்ட் தள்ளுபடி செய்தது. #HardikPatel #HardikPatel #HardikPatelconviction #HardikPatelappeal
    அகமதாபாத்:

    குஜராத் மாநிலத்தில் பட்டேல் சமூகத்தினருக்கு இடஒதுக்கீடு வழங்க வேண்டும், விவசாய கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும் என்பது உள்பட பல கோரிக்கைகளை வலியுறுத்தி பட்டிடார் அனாமத் அன்டோலன் சமிதி என்ற இயக்கத்தின் தலைவர் ஹர்திக் பட்டேல் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் தொடர்ச்சியாக 19 நாட்கள் உண்ணாவிரதம் இருந்தார்.

    இதற்கு முன்னரும் பலமுறை இதே கோரிக்கைக்காக பலமுறை போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். பட்டேல் இனத்தவர்களுக்கு இட ஒதுக்கீடு கேட்டு குஜராத் மாநிலம், மெஹ்சானா மாவட்டத்தில் உள்ள விஸ்நகர் பகுதியில் நடைபெற்ற போராட்டத்தின்போது வெடித்த கலவரம் தொடர்பான வழக்கில் ஹர்திக் பட்டேலுக்கு விசாரணை நீதிமன்றம் 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்திருந்தது. இந்த தண்டனையை எதிர்த்து குஜராத் ஐகோர்ட்டில் அவர் மேல்முறையீடு செய்துள்ளார்.

    சமீபத்தில் ஹர்திக் பட்டேலுக்கு திருமணம் நடந்தது.  குஜராத் மாநில தலைநகர் அகமதாபாத் நகரில் கடந்த 12-ம் தேதி நடைபெற்ற காங்கிரஸ் கட்சியின் காரிய கமிட்டி கூட்டத்துக்கு வந்த  ஹர்திக் பட்டேல், அக்கட்சியின் தலைவர் ராகுல் காந்தி முன்னிலையில்  காங்கிரஸ் கட்சியில் இணைந்தார்.


    பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளராக அவர் அறிவிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படும் நிலையில் விஸ்நகர் மாஜிஸ்திரேட் கோர்ட் விதித்த சிறை தண்டனையை ரத்து செய்ய வேண்டும் என குஜராத் ஐகோர்ட்டில் ஹர்திக் பட்டேல் தனியாக வழக்கு தொடர்ந்தார்.

    அவரது கோரிக்கையை அனுமதிக்க கூடாது என குஜராத் அரசின் சார்பில் எதிர்மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கில் இன்று தீர்ப்பளித்த நீதிபதி ஹர்திக் பட்டேலின் கோரிக்கை நிராகரிக்கப்படுவதாக அறிவித்தார்.

    இதைதொடர்ந்து, மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின்படி ஹர்திக் பட்டேல் இந்த தேர்தலில் போட்டியிட முடியாத நிலைமை உருவாகியுள்ளது. #HardikPatel #HardikPatel #HardikPatelconviction #HardikPatelappeal
    குஜராத் மாநிலத்தில் பட்டேல் இனத்தவர்களுக்கு கல்வி,வேலைவாய்ப்பில் ஒதுக்கீடு கேட்டு போராட்டம் நடத்தும் ஹர்திக் பட்டேல், ராகுல் காந்தி முன்னிலையில் இன்று காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். #HardikPatel #joinCongress #RahulGandhi
    அகமதாபாத்:

    குஜராத் மாநிலத்தில் பட்டேல் சமூகத்தினருக்கு இடஒதுக்கீடு வழங்க வேண்டும், விவசாய கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும் என்பது உள்பட பல கோரிக்கைகளை வலியுறுத்தி பட்டிடார் அனாமத் அன்டோலன் சமிதி என்ற இயக்கத்தின் தலைவர் ஹர்திக் பட்டேல் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் தொடர்ச்சியாக 19 நாட்கள் உண்ணாவிரதம் இருந்தார்.

    இதற்கு முன்னரும் பலமுறை இதே கோரிக்கைக்காக பலமுறை போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். சமீபத்தில் இவருக்கு திருமணம் நடந்தது.



    இந்நிலையில், குஜராத் மாநில தலைநகர் அகமதாபாத் நகரில் நடைபெறும் காங்கிரஸ் கட்சியின் காரிய கமிட்டி கூட்டத்துக்கு இன்று வந்த ஹர்திக் பட்டேல், இன்று காங்கிரசில் இணைந்தார். அவரை ராகுல் காந்தி சால்வை அணிவித்து வரவேற்றார். #HardikPatel #joinCongress #RahulGandhi
    குஜராத் மாநிலத்தில் பட்டேல் இனத்தவர்களுக்கு கல்வி,வேலைவாய்ப்பில் ஒதுக்கீடு கேட்டு போராட்டம் நடத்திவரும் ஹர்திக் பட்டேல் ராகுல் காந்தி முன்னிலையில் 12-ம் தேதி காங்கிரசில் இணைகிறார். #HardikPatel #joinCongress
    அகமதாபாத்:

    குஜராத் மாநிலத்தில் பட்டேல் சமூகத்தினருக்கு இடஒதுக்கீடு வழங்க வேண்டும், விவசாய கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும் என்பது உள்பட பல கோரிக்கைகளை வலியுறுத்தி பட்டிடார் அனாமத் அன்டோலன் சமிதி என்ற இயக்கத்தின் தலைவர் ஹர்திக் பட்டேல் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் தொடர்ச்சியாக 19 நாட்கள் உண்ணாவிரதம் இருந்தார். 

    இதற்கு முன்னரும் பலமுறை இதே கோரிக்கைக்காக பலமுறை இவர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். சமீபத்தில் இவருக்கு திருமணம் நடந்தது. 

    இந்நிலையில், ராகுல் காந்தி முன்னிலையில் வரும் 12-ம் தேதி காங்கிரஸ் கட்சியில் இணையப்போவதாக ஹர்திக் பட்டேல் இன்று தெரிவித்துள்ளார். காங்கிரஸ் தலைமை தேர்தலில் போட்டியிடுமாறு உத்தரவிட்டால் போட்டியிடுவேன் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். #HardikPatel #joinCongress 
    குஜராத் மாநிலத்தில் பட்டேல் இனத்தவர்களுக்கு இட ஒதுக்கீடு கேட்டு கைதாகி, சிறைசென்ற ஹர்திக் பட்டேல் தனது நீண்டநாள் தோழியை இன்று திருமணம் செய்து கொண்டார். #PAASleader #HardikPatel #HardikPatelmarried
    அகமதாபாத்:

    குஜராத் மாநிலத்தில் பட்டேல் இன மக்களுக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் உரிய இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என போராடிவந்த ஹர்திக் பட்டேலை கடந்த 2016-ம் ஆண்டில் கைது செய்த போலீசார், அவர்மீது பிரிவினைவாதம் மற்றும் பொதுக்கூட்டங்களில் வாளை உயர்த்திக் காட்டி பொதுமக்களிடையே வன்முறைக்கு வித்திட்டது ஆகிய குற்றச்சாட்டுகளின்கீழ் கோர்ட்டில் ஆஜர்படுத்தி, சுமார் ஒன்பது மாதங்களாக சூரத் மாவட்ட சிறையில் அடைத்து வைத்திருந்தனர்.

    தன்னை ஜாமினில் விடுதலை செய்யுமாறு அகமதாபாத் நகரில் உள்ள குஜராத் ஐகோர்ட்டில் ஹர்திக் பட்டேல் மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவின்மீது விசாரணை நடத்திய நீதிபதி 17-7-2016 அன்று அவரை ஜாமினில் விடுவித்து உத்தரவிட்டார்.

    விடுதலை ஆகும் தினத்திலிருந்து ஆறுமாத காலத்துக்கு குஜராத் மாநிலத்துக்குள் நுழையக் கூடாது என்ற நிபந்தனையுடன் ஹர்திக் பட்டேலை விடுதலை செய்வதாக தனது உத்தரவில் நீதிபதி குறிப்பிட்டிருந்தார்.

    இதையடுத்து, ராஜஸ்தான் மாநிலம், உதய்பூர் மாவட்டத்தில் அவர் தங்கி இருந்தார். இந்த தடை உத்தரவு நேற்றுடன் முடிந்ததால் கடந்த ஆறுமாத காலமாக தாய்மண்ணை விட்டு பிரிந்திருந்த ஹர்திக் பட்டேல் 17-1-2017 அன்று குஜராத் மாநிலத்துக்குள் நுழைந்தார்.



    இந்நிலையில், தனது நீண்டநாள் தோழியான சட்டக்கல்லூரி மாணவி கின்ஜல் பரேக் என்பவருக்கும் ஹர்திக் பட்டேலுக்கும் சமீபத்தில் நிச்சயதார்த்தம் நடைபெற்றது.

    இதைத்தொடர்ந்து, குஜராத் மாநிலம், சுரேந்திராநகர் மாவட்டம், திக்சார் கிராமத்தில் உள்ள கோவிலில் கின்ஜல் பரேக் - ஹர்திக் பட்டேல் திருமணம் இன்று நடந்து முடிந்தது.

    முன்னதாக, இதே மாநிலத்தில் உள்ள மெஹ்சானா மாவட்டம், உஞ்சா பகுதியில் உள்ள கடவா பட்டேல் இனத்தவர்களின் சிறப்புக்குரிய வழிப்பாட்டுத்தலத்தில் இந்த திருமணம் நடைபெற ஹர்திக் குடும்பத்தினர் ஏற்பாடு செய்திருந்தனர்.

    ஆனால், மெஹ்சானா மாவட்டத்துக்குள் ஹர்திக் பட்டேல் நுழைவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதால் , திக்சார் கிராமத்தில் உள்ள கோவிலில் நடைபெற்ற இந்த திருமண விழாவில் உறவினர்கள் நண்பர்கள் மட்டுமே கலந்துகொண்டனர். அரசியல் பிரமுகர்கள் யாருக்கும் அழைப்பிதழ் அனுப்பப்படவில்லை.  #PAASleader #HardikPatel #HardikPatelmarried
    குஜராத் மாநிலத்தில் பட்டேல் சமூகத்தினருக்கு இட ஒதுக்கீடு வழங்க வலியுறுத்தி போராட்டம் நடத்திய ஹர்திக் பட்டேல் தனது காதலியை திருமணம் செய்கிறார். #HardikPatel #Kinjal
    ஆமதாபாத்:

    குஜராத் மாநிலத்தில் பட்டேல் சமூகத்தினருக்கு இட ஒதுக்கீடு வழங்க வலியுறுத்தி போராட்டம் நடத்தி பிரபலமானவர் ஹர்திக் பட்டேல் (வயது 25). இவர் ‘பட்டிதார் அனாமத் அந்தோலன் சமிதி’ என்ற இயக்கத்தின் தலைவராகவும் உள்ளார்.

    ஹர்திக் பட்டேலுக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது. இவர் தனது காதலி கிஞ்சாலை திருமணம் செய்து கொள்கிறார்.

    இவர்களது காதல் திருமணம் வைதீக முறைப்படி அங்குள்ள சுரேந்திராநகர் மாவட்டம், திக்சார் கிராமத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடக்கிறது.

    எளிய முறையில் நடக்கிற மண விழாவில் குடும்பத்தினரும், நெருங்கிய உறவினர்களும் மட்டுமே கலந்து கொள்வார்கள் என தகவல்கள் கூறுகின்றன.  #HardikPatel #Kinjal
    பட்டேல் இனத்தவருக்கு கல்வி, வேலைவாய்ப்பில் உரிய ஒதுக்கீடு கேட்டு தொடர் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டிருந்த ஹர்திக் பட்டேல் இன்று தனது உண்ணாவிரதத்தை முடித்து கொண்டார். #HardikPatel #19days
    அகமதாபாத்:

    குஜராத் மாநிலத்தில் பட்டேல் சமூகத்தினருக்கு இடஒதுக்கீடு வழங்க வேண்டும், விவசாய கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும் என்பது உள்பட பல கோரிக்கைகளை வலியுறுத்தி பட்டிடார் அனாமத் அன்டோலன் சமிதி என்ற இயக்கத்தின் தலைவர் ஹர்திக் பட்டேல் கடந்த மாதம் 25-ம் தேதியில் இருந்து தொடர்ச்சியாக உண்ணாவிரதம் இருந்து வந்தார்.

    அவரது போராட்டம் 13-வது நாளை நெருங்கிய நிலையில் அவரது உடல்நிலை மிகவும் மோசமடைந்ததால் அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

    காந்திநகர் பகுதியில் உள்ள எஸ்.ஜி.வி.பி. தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள ஹர்திக் பட்டேல் அங்கும் தனது உண்ணாவிரதத்தை தொடர்ந்து வந்தார். மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆன பின்னரும் தொடர்ந்து உண்ணாவிரதம் மேற்கொண்டிருந்த அவர் இன்று இளநீர் அருந்தி தனது உண்ணாவிரதத்தை முடித்து கொண்டார்.



    இட ஒதுக்கீடு போராட்டத்தை வென்றெடுக்க நீங்கள் உயிருடன் வாழ வேண்டும் என்று அவரது நண்பர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வந்ததால் சாகும்வரை உண்ணாவிரதம் என்ற முடிவை ஹர்திக் மாற்றிகொண்டதாக அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவித்தன. #HardikPatel #19days
    குஜராத்தில் 13 நாட்களாக உண்ணாவிரதம் இருந்து வரும் ஹர்திக் பட்டேல் உடல்நிலை மிகவும் மோசமடைந்ததையடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். #HardikPatel #Gujarat
    அகமதாபாத்:

    பட்டேல் சமூகத்தினருக்கு இடஒதுக்கீடு வழங்க வேண்டும், விவசாய கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும் என்பது உள்பட பல கோரிக்கைகளை வலியுறுத்தி ஹர்திக் பட்டேல் தொடர் உண்ணாவிரதம் இருந்து வருகிறார். அவரது போராட்டத்துக்கு பல்வேறு தரப்பினரும் ஆதரவு தெரிவித்து வருகிறார்கள்.

    அவரது போராட்டம் இன்று 13-வது நாளாக நீடித்தது. இத்தனை நாளும் சாப்பிடாததால் அவரது உடல்நிலை மிகவும் மோசமடைந்தது. இதனால் அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

    ஹர்திக் பட்டேல் உடல்நிலை நேற்றே மோசமடைந்தது. இதனால் அரசு அவசர ஆலோசனை நடத்தியது. இதில் பட்டேல் சமூக மந்திரிகள் மற்றும் சமூக தலைவர்களும் கலந்து கொண்டனர். அவர்கள் அரசு ஹர்திக் பட்டேலுடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று வலியுறுத்தினார்கள். எனவே, அவருடன் அரசு சார்பில் விரைவில் பேச்சுவார்த்தை நடத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.


    25 வயதே ஆன ஹர்திக் பட்டேல் குஜராத்தில் பட்டேல் சமூகத்தினரின் மத்தியில் புகழ் பெற்ற தலைவராக திகழ்கிறார். இவர், பதிதார் அனாமத் அன்டோலன் சமிதி என்ற இயக்கத்தை தொடங்கி அதன் மூலம் போராட்டங்களை நடத்தி வருகிறார். பட்டேல் சமூகத்தினருக்கு இடஒதுக்கீடு கேட்டு அவர் நடத்திய போராட்டம் குஜராத்தை கிடுகிடுக்க வைத்தது குறிப்பிடத்தக்கது. #HardikPatel #Gujarat
    குஜராத்தில் ஹர்திக் பட்டேல் உண்ணாவிரதத்தால் பதட்டம் ஏற்பட்டுள்ளது. இதுதொடர்பாக சமூக தலைவர்களுடன் அரசு அவசர ஆலோசனை நடத்தியது. #HardikPatel
    அகமதாபாத்:

    குஜராத்தில் பட்டேல் சமூகத்தினரின் மத்தியில் புகழ் பெற்ற தலைவராக 25 வயதே ஆன ஹர்திக் பட்டேல் திகழ்கிறார். இவர், பதிதார் அனாமத் அன்டோலன் சமிதி என்ற இயக்கத்தை தொடங்கி அதன் மூலம் போராட்டங்களை நடத்தி வருகிறார்.

    பட்டேல் சமூகத்தினருக்கு இடஒதுக்கீடு கேட்டு அவர் நடத்திய போராட்டம் குஜராத்தை கிடுகிடுக்க வைத்தது.

    இப்போது அவர் பட்டேல் சமூகத்தினருக்கு இடஒதுக்கீடு வழங்க வேண்டும், விவசாய கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும் என்பது உள்பட பல கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர் உண்ணாவிரதம் இருந்து வருகிறார்.

    இன்று 12-வது நாளாக உண்ணாவிரதம் நடந்து வருகிறது. இத்தனை நாளும் அவர் சாப்பிடாததால் அவர் மிகவும் சோர்வாக இருக்கிறார். அவரது உடல் எடை 20 கிலோ வரை குறைந்துள்ளது.

    கடந்த 2 நாட்களாக தண்ணீரும் குடிக்கவில்லை. இதனால் உடலில் நீர்சத்து குறைந்து உடல் அவையங்கள் பாதிக்க தொடங்கி உள்ளன. இதனால் அவரது உடல்நிலைக்கு கடும் ஆபத்து ஏற்படலாம் என்ற நிலை நிலவுகிறது.

    அவரது போராட்டத்துக்கு பல்வேறு தரப்பினரும் ஆதரவு தெரிவித்து வருகிறார்கள். தொடர்ந்து ஆதரவு பெருகி வருகிறது.

    அதே நேரத்தில் அவரது உடல்நிலை பாதிக்கப்பட்டு வருவதால் குஜராத்தில் பதட்டம் ஏற்பட்டுள்ளது.

    இதையடுத்து நேற்று அரசு அவசர ஆலோசனை நடத்தியது. இதில் பட்டேல் சமூக மந்திரிகள் மற்றும் சமூக தலைவர்களும் கலந்து கொண்டனர். அவர்கள் அரசு ஹர்திக் பட்டேலுடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று வற்புறுத்தினார்கள்.

    ஏற்கனவே ஹர்திக் பட்டேலை குஜராத் முன்னாள் முதல்-மந்திரி சுரேஷ் மேத்தா, திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் தினேஷ் திரிவேதி, தேசியவாத காங்கிரஸ் தலைவர் பிரபுல் பட்டேல், பீகார் முன்னாள் முதல்-மந்திரி ஜிதன்ராம் மாஞ்சி மற்றும் காங்கிரஸ் தலைவர்கள் சந்தித்து ஆதரவு தெரிவித்தனர்.

    நேற்று பா.ஜனதா மூத்த தலைவர்களான யஷ்வந்த்சின்கா, நடிகர் சத்ருகன்சின்கா ஆகியோர் ஹர்திக் பட்டேலை சந்தித்து பேசினார்கள்.

    இதுபற்றி யஷ்வந்த்சின்கா கூறும்போது, நாங்களும் விவசாயிகளுக்காக போராடி வருகிறோம். இப்போது இந்த பிரச்சினையை தேசிய அளவில் கொண்டு சென்று போராடுவோம்.

    விவசாயிகள் கடனை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று ஹர்திக் போராடுவது நியாயமானது. அவரிடம் அரசு பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று கூறினார். #HardikPatel


    பட்டேல் இடஒதுக்கீடு போராட்டத்தின் போது, எம்.எல்.ஏ அலுவலகத்தை சூறையாடியதாக தொடரப்பட்ட வழக்கில், ஹர்திக் படேல் உள்ளிட்ட மூவருக்கு இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை அறிவிக்கப்பட்டுள்ளது. #HardikPatel
    அகமதாபாத்:

    கடந்த 2015-ம் ஆண்டில் குஜராத் மாநிலத்தில் படேல் சமூகத்தினருக்கு இடஒதுக்கீடு கோரி மிகப்பெரிய அளவில் போராட்டம் நடைபெற்றது. அந்தப் போராட்டத்தை ஹர்திக் பட்டேல் முன்னின்று நடத்தினார். இந்தப் போராட்டத்தின் போது, மேஹ்சனா மாவட்டத்தின் விஸ்நகரில் உள்ள பாஜக எம்.எல்.ஏ ரிஷிகேஷ் பட்டேலின் அலுவலகம் அடித்து நொறுக்கப்பட்டது. 

    இந்த சம்பவம் தொடர்பாக ஹர்திக் பட்டேல், அவரது ஆதரவாளர்கள் லால்ஜி பட்டேல் உள்ளிட்ட 17 பேர் மீது வழக்கு பதிவு விஸ்நகரில் உள்ள செஷன்ஸ் கோர்ட்டில் இந்த வழக்கு நடைபெற்று வந்தது.

    இந்நிலையில், இந்த வழக்கில் விசாரணை முடிவடைந்து இன்று தீர்ப்பு அறிவிக்கப்பட்டது. ஹர்திக் பட்டேல் உள்ளிட்ட இரண்டு பேர் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டதாகவும், மீதம் உள்ளவர்கள் மீது போதுமான ஆதாரம் இல்லாததால் அவர்கள் விடுவிக்கப்படுவதாகவும் நீதிபதி வி.பி.அகர்வால் தீர்ப்பு கூறினார்.

    ஹர்திக் பட்டேல், லால்ஜி பட்டேல் மற்றும் சர்தார் பட்டேல் அமைப்பின் தலைவர் ஆகியோருக்கு இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் தலா 50,000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.

    3 ஆண்டுகளுக்கு குறைவான தண்டனை காலம் விதிக்கப்பட்டுள்ளதால், ஹர்திக் பட்டேலால் ஜாமீன் பெற முடியும் என்பதால் அவரின் வழக்கறிஞர் ஜாமீன் மனுவை உடனடியாக தாக்கல் செய்தார்.
    மத்திய பிரதேச மாநிலத்தில் ஹர்திக் பட்டேல் கார் மீது அடையாளம் தெரியாத நபர்கள் முட்டைகளையும், காலணிகளையும் வீசினர். #HardikPatel
    ஜபல்பூர்:

    குஜராத் மாநிலத்தில் பெரும்பான்மையினராக உள்ள பட்டேல் இனத்தவரை ‘ஓ.பி.சி.’ என்னும் இதர பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்த்து கல்வி, வேலை வாய்ப்பில் இட ஒதுக்கீடு பெறுவதற்கான போராட்டத்தை கையில் எடுத்து நடத்தியவர் ஹர்திக் பட்டேல் (வயது 25).

    இவர் விரைவில் சட்டசபை தேர்தல் நடக்க உள்ள மத்திய பிரதேச மாநிலத்தில், பனகர் என்ற இடத்தில் விவசாயிகள் கூட்டத்தில் பங்கேற்க நேற்று காரில் சென்று கொண்டு இருந்தார். அங்கு ரானிடால் பகுதியில் பாரதீய ஜனதா கட்சி அலுவலகம் அருகே அவரது கார் சென்ற போது அடையாளம் தெரியாத நபர்கள் முட்டைகளையும், காலணிகளையும் வீசினர். இந்த தகவலை காங்கிரஸ் தலைவர் சஞ்சய் யாதவ் தெரிவித்தார்.

    ஹர்திக் பட்டேல் கார் மீது முட்டைகளையும், காலணிகளையும் வீசிய நபர்களில் சிலர் கைகளில் துப்பாக்கிகளும் இருந்ததாக சஞ்சய் யாதவ் கூறினார்.

    இந்த சம்பவத்துக்கு அந்த மாநில முதல்-மந்திரி சிவராஜ் சிங் சவுகானின் ஆதரவாளர்கள்தான் காரணம் என ஹர்திக் பட்டேல் குற்றம் சாட்டினார்.  #HardikPatel  #tamilnews 
    ×