search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ராமஜெயம் கொலை வழக்கு"

    • பிடிபட்ட நபர்கள் மூலமாக தப்பி ஓடிய நபரையும் போலீசார் தொடர்ந்து தேடி வருகின்றனர்.
    • கொலை செய்யப்பட்ட பிரபு மீது கொலை முயற்சி, போதை பொருள் கடத்தல் உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன.

    திருச்சி:

    திருச்சி அரசு மருத்துவமனை எதிரே உள்ள மதுரா அப்பார்ட்மெண்டில் வசித்து வந்தவர் பிரபு என்கிற ஆம்புலன்ஸ் பிரபாகரன் (வயது 51). முன்னாள் மாவட்ட பா.ம.க. ஆம்புலன்ஸ் தொழிற்சங்க செயலாளரான இவர் சொந்தமாக ஆம்புலன்ஸ் மற்றும் ஹோம் கேர் நிறுவனம் நடத்தி வந்தார்.

    நேற்று இரவு 9.20 மணியளவில் புத்தூர் அரசு மருத்துவமனை எதிரே உள்ள தனது அலுவலகத்தில் தனியாக இருந்தார். அப்போது அங்கு மோட்டார் சைக்கிள்களில் வந்த முகமூடி அணிந்த 4 பேர் கும்பல் அலுவலகத்துக்குள் திபுதிபுவென புகுந்தனர்.

    பின்னர் கண் இமைக்கும் நேரத்தில் அங்கு இருந்த பிரபுவை சரமாரியாக அரிவாளால் வெட்டினர். இதில் தலை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் படுகாயம் அடைந்த அவர் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இறந்தார்.

    பிரபுவின் அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் ஓடி வந்தனர். உடனே கொலையாளிகள் அங்கிருந்து 2 மோட்டார் சைக்கிள்களில் தப்பிச் சென்றனர். தகவல் அறிந்த திருச்சி அரசு மருத்துவமனை போலீசார் சம்பவ இடம் விரைந்து சென்றனர்.

    கொலை செய்யப்பட்ட பிரபுவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது பற்றிய தகவல் அறிந்த மாநகர போலீஸ் கமிஷனர் காமினி சம்பவ இடத்தை பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.

    பின்னர் பிரபுவின் அலுவலகத்தில் இருந்த சி.சி.டி.வி. பதிவுகளை ஆய்வு செய்தனர். இதை தொடர்ந்து கொலையாளிகளை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படை போலீசார் கொலையாளிகளின் விவரங்களை சேகரித்தனர். இதை தொடர்ந்து செல்போன் டவர் மூலமாக நள்ளிரவில் போலீசார் கொலையாளிகளை தேடினர்.

    இதை தொடர்ந்து இந்த கொலை வழக்கு தொடர்பாக அரியமங்கலம் பகுதியைச் சேர்ந்த லட்சுமணன் (30), பஷீர் (29), ரியாஸ் (24) தஞ்சை மாதவரம் பகுதியைச் சேர்ந்த ராஜேஷ் ஆகிய 4 பேரை கைது செய்துள்ளதாக தெரிகிறது. மேலும் இந்தக் கொலையில் அப்பு என்கிற ஹரிஹரனை போலீசார் தேடி வருகின்றனர்.

    பின்னர் கே.கே. நகரில் ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் பிடிபட்ட நபர்கள் மூலமாக தப்பி ஓடிய நபரையும் போலீசார் தொடர்ந்து தேடி வருகின்றனர்.

    கொலை செய்யப்பட்ட பிரபு மீது கொலை முயற்சி, போதை பொருள் கடத்தல் உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. முன்விரோதம் காரணமாக அவர் கூலிப்படை மூலம் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என தெரியவந்துள்ளது.

    கொலை செய்யப்பட்ட பிரபுவை தொழிலதிபர் ராமஜெயம் கொலை வழக்கு தொடர்பாக சிறப்பு புலனாய்வு குழு அதிகாரிகள் விசாரணை நடத்தினர். மேலும் அவர்களது கண்காணிப்பு வளையத்தில் தொடர்ந்து இருந்து வந்தார். நாளை அவர் போலீசில் ஆஜராகவேண்டும் என்று சம்மன் அனுப்பப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

    கொலை செய்யப்பட்ட பிரபுவின் உடல் திருச்சி அரசு மருத்துவமனையில் இன்று பிரேத பரிசோதனை செய்யப்பட்டு உறவினர்கள் வசம் ஒப்படைக்கப்படுகிறது. இந்த சம்பவம் திருச்சியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கொலை நடந்த பகுதியில் பதட்டம் நிலவி வருவதால் அங்கு ஏராளமான போலீசார் பாதுகாப்புக்கு குவிக்கப்பட்டு உள்ளனர்.

    • சென்னையில் கடந்த 18-ந் தேதி அவர்களிடம் உண்மை கண்டறியும் சோதனை தொடங்கி நடந்து முடிந்து உள்ளது.
    • கடந்த 10 ஆண்டுகளுக்கு மேல் நீடித்து வரும் ராமஜெயம் கொலை வழக்கில் நிலவி வரும் மர்ம முடிச்சுகள் விலகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    சென்னை:

    அமைச்சர் கே.என்.நேருவின் சகோதரரும், திருச்சியை சேர்ந்த தொழில் அதிபருமான ராமஜெயம் கடந்த 2010-ம் ஆண்டு நடைபயணம் சென்றபோது மர்ம கும்பலால் கடத்தி கொலை செய்யப்பட்டார்.

    இந்த கொலை வழக்கு சி.பி.சி.ஐ.டிக்கு மாற்றப்பட்டது. சி.பி.சி.ஐ.டி. எஸ்.பி. ஜெயக்குமார், தலைமையில் டி.எஸ்.பி. மதன் சென்னை சி.பி.சி.டி.ஐ.யை சேர்ந்த ரவி ஆகியோர் அடங்கிய சிறப்பு புலனாய்வு பிரிவு குழுவினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்த வழக்கில் சந்தேக வளையத்துக்குள் சிக்கிய மோகன்ராம், நரைமுடி கணேசன், தினேஷ்குமார், சத்யராஜ், செந்தில், கலைவாணன், சுரேந்திரன், சாமி ரவி, மாரிமுத்து, சிவா ஆகிய 12 பேரிடம் உண்மை கண்டறியும் சோதனை நடத்த முடிவு செய்யப்பட்டது.

    அதன்படி சென்னையில் கடந்த 18-ந் தேதி அவர்களிடம் உண்மை கண்டறியும் சோதனை தொடங்கி நடந்து முடிந்து உள்ளது. அவர்களிடம் ராமஜெயம் குறித்து தடயவியல் நிபுணர்கள் கேள்வி கேட்டு பதில்கள் பெற்றனர்.

    இந்த சோதனை தொடர்பாக அனைத்து விவரங்களையும் அறிக்கையாக தயாரிக்கும் பணியில் நிபுணர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இந்த அறிக்கையை சிறப்பு புலனாய்வு குழுவினரிடம் வழங்க உள்ளனர். அவர்கள் கொடுக்கும் அறிக்கையின் அடிப்படையில் அடுத்தகட்ட நடவடிக்கையினை சிறப்பு புலனாய்வு பிரிவு போலீசார் மேற்கொள்ள உள்ளனர்.

    உண்மை கண்டறியும் சோதனை அறிக்கையை சி.பி.சி.ஐ.டி. போலீசார் 2 வாரத்தில் கோர்ட்டில் தாக்கல் செய்ய உள்ளதாக கூறப்படுகிறது.

    இதனால் கடந்த 10 ஆண்டுகளுக்கு மேல் நீடித்து வரும் ராமஜெயம் கொலை வழக்கில் நிலவி வரும் மர்ம முடிச்சுகள் விலகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    • ராமஜெயம் கொலை தொடர்பாக சென்னையில் ரவுடிகளிடம் உண்மை கண்டறியும் சோதனை நடத்தப்பட்டு வருகிறது.
    • நேற்று முன்தினம் தொடங்கிய உண்மை கண்டறியும் சோதனை இன்று 3-வது நாளாக நடைபெற்றது

    சென்னை:

    அமைச்சர் நேருவின் சகோதரர் ராமஜெயம் கொலை தொடர்பாக சென்னையில் ரவுடிகளிடம் உண்மை கண்டறியும் சோதனை நடத்தப்பட்டு வருகிறது.

    நேற்று முன்தினம் தொடங்கிய இந்த சோதனை இன்று 3-வது நாளாக நடைபெற்றது. இன்று ரவுடிகள் சாமிரவி, மாரிமுத்து, சிவா உள்ளிட்டோருக்கு உண்மை கண்டறியும் சோதனை நடைபெற்றது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • ராமஜெயம் கொலை வழக்கில் கொலையில் இதுவரையில் குற்றவாளிகள் கைது செய்யப்படவில்லை.
    • இன்று சத்தியராஜ், செந்தில், கலைவாணன், ராஜ்குமார், சுரேந்தர் ஆகிய 5 பேரிடம் விசாரணை நடக்கிறது.

    சென்னை:

    திருச்சி ராமஜெயம் கொலை வழக்கை சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரித்து வருகின்றனர். இந்த கொலையில் இதுவரையில் குற்றவாளிகள் கைது செய்யப்படவில்லை. சந்தேகத்தின் பேரில் 12 பேரிடம் உண்மை கண்டறியும் சோதனை நடந்து வருகிறது.

    சென்னை மயிலாப்பூரில் உள்ள தடயவியல் துறை அலுவலகத்தில் நேற்று கூலிப்படையை சேர்ந்த திண்டுக்கல் மோகன் ராம், நரைமுடி கணேசன், தினேஷ்குமார், சீர்காழி சத்யா ஆகிய 4 பேரிடம் உண்மை கண்டறியும் சோதனை நடத்தப்பட்டது.

    இன்று சத்தியராஜ், செந்தில், கலைவாணன், ராஜ்குமார், சுரேந்தர் ஆகிய 5 பேரிடம் விசாரணை நடக்கிறது. நாளை 3 பேரிடம் விசாரணை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. உண்மை கண்டறியும் பரிசோதனையின்போது அவர்கள் கூறும் தகவல் போலீசாரால் பதிவு செய்யப்பட்டு ரகசியமாக வைக்கப்படுகிறது.

    • மெரினா காமராஜர் சாலையில் டி.ஜி.பி. அலுவலகம் அருகில் உள்ள தடயவியல் அலுவலகத்தில் சோதனை நடைபெற்றது.
    • சோதனை நடைபெற்ற தடயவியல் துறை அலுவலகத்துக்கு போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் வந்திருந்தார்.

    சென்னை:

    அமைச்சர் நேருவின் தம்பியும் தொழில் அதிபருமான ராமஜெயம் திருச்சியில் கடந்த 2012-ம் ஆண்டு மார்ச் மாதம் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டார்.

    இது தொடர்பாக பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தியும் கொலை வழக்கில் துப்பு துலங்கவில்லை. இதனால் ராமஜெயம் கொலையில் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக மர்மம் நீடிக்கிறது.

    அவர் எதற்காக கொலை செய்யப்பட்டார்? கொலையாளிகள் யார்? என்பது தொடர்பாக எந்தவித தகவல்களும் இதுவரை வெளியாகாமலேயே உள்ளது.

    ராமஜெயம் கொலை தொடர்பாக சி.பி.ஐ. மற்றும் சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்தியும் எந்தவித முன்னேற்றமும் ஏற்படவில்லை. இதைத்தொடர்ந்து கடந்த ஆண்டு ராமஜெயத்தின் சகோதரர் ரவிச்சந்திரன் சென்னை ஐகோர்ட்டில் மனு ஒன்றை தாக்கல் செய்தார்.

    அதில் இந்த வழக்கில் எந்தவித முன்னேற்றமும் ஏற்படாத நிலையில் மாநில போலீசாரே விசாரிக்க உத்தரவிட வேண்டும் என்று கூறி இருந்தார்.

    இதையடுத்து அப்போது தூத்துக்குடி போலீஸ் சூப்பிரண்டாக இருந்த ஜெயக்குமார் தலைமையில் புதிய விசாரணை குழு ராமஜெயம் கொலை தொடர்பான வழக்கை விசாரிக்க ஐகோர்ட்டு உத்தரவிட்டது. இதில் டி.எஸ்.பி. மதன் உள்ளிட்ட காவலர்கள் இடம் பெற்றனர். ஐகோர்ட்டு உத்தரவை தொடர்ந்து போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் தலைமையிலான சிறப்பு புலனாய்வு பிரிவினர் தங்களது விசாரணையை தொடங்கினர்.

    பல்வேறு குற்ற வழக்குகளில் திறம்பட செயல்பட்டவர் என்ற முறையிலும், ரவுடிகள் ஒழிப்பு படை பிரிவில் பணியாற்றியவர் என்ற முறையிலும் சூப்பிரண்டு ஜெயக்குமார் விசாரணை அதிகாரியாக நியமிக்கப்பட்டதையடுத்து ராமஜெயம் கொலை வழக்கு விசாரணை சூடு பிடித்தது.

    தமிழகம் முழுவதும் உள்ள பிரபல ரவுடிகளின் மீது போலீசாரின் சந்தேக பார்வை விழுந்தது. காலையில் நடைபயிற்சி சென்ற போதுதான் ராமஜெயம் திட்டம் போட்டு கடத்தி கொல்லப்பட்டார்.

    இதையடுத்து அதே பாணியில் இதற்கு முன்பு நடைபெற்ற கொலை சம்பவங்கள், அதில் ஈடுபட்ட ரவுடிகள் பற்றிய பட்டியலை தயாரித்து போலீசார் விசாரணை நடத்தினர்.

    இதனை தொடர்ந்து திண்டுக்கல் ரவுடி மோகன்ராம் உள்பட 12 ரவுடிகளிடம் உண்மை கண்டறியும் சோதனை நடத்த முடிவு செய்யப்பட்டது. இந்த சோதனைக்கு கோர்ட்டில் முறைப்படி அனுமதி பெற வேண்டும் என்பதால் அதற்கான நடவடிக்கைகளில் போலீசார் ஈடுபட்டனர். இதன்படி திருச்சி மாஜிஸ்திரேட்டு அதற்கான அனுமதியை அளித்தார்.

    இதன்படி திண்டுக்கல் மோகன்ராமன், நரைமுடி கணேசன், தினேஷ், சீர்காழி சத்யா ஆகிய 4 ரவுடிகளிடம் இன்று உண்மை கண்டறியும் சோதனை நடத்தப்பட்டது.

    அவர்கள் 4 பேரும் இன்று காலை 10 மணி அளவில் தடயவியல் துறை அலுவலகத்துக்கு வக்கீல்களுடன் வந்து காரில் இறங்கினார்கள். இவர்கள் 4 பேருடன் தலா ஒரு வக்கீல் தடயவியல் துறை அலுவலகத்துக்குள் செல்ல அனுமதிக்கப்பட்டனர்.

    மெரினா காமராஜர் சாலையில் டி.ஜி.பி. அலுவலகம் அருகில் உள்ள தடயவியல் அலுவலகத்தில் சோதனை நடைபெற்றது. இதற்காக டெல்லியில் இருந்து தடயவியல் நிபுணர் மோகன் தலைமையில் 2 அதிகாரிகள் சென்னை வந்துள்ளனர்.

    இன்று முதல் வருகிற 21-ந்தேதி வரை 4 நாட்கள் உண்மை கண்டறியும் சோதனை நடைபெறுகிறது. இன்று 4 பேருக்கு சோதனை நடைபெறும் நிலையில் மற்ற 8 ரவுடிகளுக்கும் அடுத்தடுத்த நாட்களில் தடயவியல் சோதனை நடத்தப்பட உள்ளது.

    இந்த சோதனை முடிவில் ராமஜெயம் கொலை வழக்கில் இவர்கள் யாருக்காவது தொடர்பு இருந்தால் அது தெரிய வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சோதனை நடைபெற்ற தடயவியல் துறை அலுவலகத்துக்கு போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் வந்திருந்தார்.

    • போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் தலைமையில் 40 பேர் அடங்கிய போலீசார் இந்த வழக்கை மீண்டும் தூசி தட்டி விசாரித்து வருகின்றனர்.
    • சி.பி.சி.ஐ.டி. போலீசார் தயாரித்து வைத்துள்ள கேள்விகளுடன், டெல்லி அதிகாரிகளும் தனியாக கேள்வியை எழுப்பி இந்த விசாரணையை நடத்த உள்ளனர்.

    சென்னை:

    தமிழ்நாடு அமைச்சர் கே.என்.நேருவின் சகோதரரும், திருச்சியை சேர்ந்த தொழில் அதிபருமான ராமஜெயம் கடந்த 2012-ம் ஆண்டு மார்ச் மாதம் நடைபயிற்சி சென்றபோது மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கை 10 ஆண்டுகளாக போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரித்தும் கொலையாளிகளை கண்டுபிடிக்க முடியவில்லை. எனவே இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு மாற்றம் செய்யப்பட்டது.

    போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் தலைமையில் 40 பேர் அடங்கிய போலீசார் இந்த வழக்கை மீண்டும் தூசி தட்டி விசாரித்து வருகின்றனர். ராமஜெயம் கொலை பாணியில் தமிழகத்தில் நடைபெற்ற கொலை வழக்குகளில் கைதான ரவுடிகள், ராமஜெயம் கொலையின்போது திருச்சியில் தங்கி இருந்த ரவுடிகள் பட்டியலை தயாரித்தனர். இதில் இந்த வழக்கில் 12 பேர் சந்தேக நபர்களாக சேர்க்கப்பட்டனர்.

    அவர்களிடம் சென்னை மயிலாப்பூரில் உள்ள தடயவியல் துறை அலுவலகத்தில் உண்மை கண்டறியும் பரிசோதனை நடத்துவதற்கு திருச்சி மாஜிஸ்திரேட்டிடம் சி.பி.சி.ஐ.டி. போலீசார் அனுமதி பெற்றனர். பின்னர் 12 பேருக்கும் இந்த சோதனைக்கு ஆஜராகுமாறு சம்மன் அனுப்பினர். இதையடுத்து அவர்கள் சென்னையில் சி.பி.சி.ஐ.டி. போலீசார் கட்டுப்பாட்டில் வைக்கப்பட்டனர்.

    எனவே இந்த விசாரணை 17-ந் தேதி (நேற்று) தொடங்கும் என்று தகவல் வெளியாகி இருந்தது. ஆனால் நேற்று விசாரணை நடைபெறவில்லை. உண்மை கண்டறியும் சோதனை நடத்துவதற்காக டெல்லியில் இருந்து மத்திய தடயவியல் துறை நிபுணர் மோசஸ் உள்பட 2 அதிகாரிகள் நேற்று சென்னை வந்தனர். அவர்கள் தடயவியல் துறை அலுவலகத்தை பார்வையிட்டு தாங்கள் கொண்டு வந்த உபகரணங்களை வைத்தனர்.

    உண்மை கண்டறியும் பரிசோதனை இன்று தொடங்குகிறது. காலை 10 மணிக்கு ஒருவரிடமும், மதியம் 2 மணிக்கு ஒருவரிடம் என தினமும் 2 பேரிடம் இந்த சோதனை நடைபெற உள்ளது. 6 நாட்களில் அனைவரிடமும் இந்த சோதனை நடத்தி முடிக்கப்படும்.

    சி.பி.சி.ஐ.டி. போலீசார் ஏற்கனவே தயாரித்து வைத்துள்ள கேள்விகளுடன், டெல்லி அதிகாரிகளும் தனியாக கேள்வியை எழுப்பி இந்த விசாரணையை நடத்த உள்ளனர்.

    சந்தேக நபர்கள் அளிக்கும் பதில்கள் அனைத்தும் 'வீடியோ' பதிவு செய்யப்படும். உண்மை கண்டறியும் பரிசோதனை விவரங்கள் அனைத்தும் கோர்ட்டில் சமர்ப்பிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • பரிசோதனையின் முடிவில் நிச்சயம் குற்றவாளி குறித்த அறிவியல் ரீதியான முடிவுகள் தெரியவரும்.
    • பரிசோதனை அறிக்கை இந்த மாத இறுதிக்குள் கோர்ட்டில் தாக்கல் செய்யப்படும்.

    திருச்சி:

    அமைச்சர் கே.என்.நேருவின் சகோதரரும், தொழில் அதிபருமான ராமஜெயம், 2012-ம் ஆண்டு மார்ச் மாதம் அதிகாலையில் நடைபயிற்சியின் போது கடத்தப்பட்டு மர்மநபர்களால் கொல்லப்பட்டார். இந்த வழக்கை 10 ஆண்டுகளாக பல்வேறு பிரிவு போலீசார் விசாரித்தும் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை.

    இதையடுத்து இந்த வழக்கு விசாரணை சிறப்பு புலனாய்வு பிரிவு போலீசாருக்கு மாற்றப்பட்டது. எஸ்.பி. ஜெயகுமார் தலைமையில், டி.எஸ்.பி. மதன் கண்காணிப்பில் 40 பேர் கொண்ட சிறப்பு புலனாய்வு போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ராமஜெயம் கொலை பாணியில் தமிழகத்தில் நடந்த பல்வேறு கொலை சம்பவங்களில் ஈடுபட்ட ரவுடிகள் மற்றும் ராமஜெயம் கொலை சம்பவம் நடந்த போது திருச்சியில் முகாமிட்டிருந்த ரவுடிகள் பட்டியல் தயாரிக்கப்பட்டது. அதில் திண்டுக்கல் மோகன் ராம், நரைமுடி கணேசன் உட்பட 13 பேர் இருந்தனர்.

    இந்த பட்டியலில் உள்ளவர்களிடம் உண்மையை கண்டறியும் பரிசோதனை நடத்த திருச்சி மாஜிஸ்திரேட் கடந்த மாதம் அனுமதித்தார். உண்மையை கண்டறியும் பரிசோதனை எப்போது நடத்தப்படும் என்ற கேள்வி தொடர்ந்து நீடித்துக் கொண்டே இருந்தது.

    இந்தநிலையில் 13 பேரிடமும் நாளை (17-ந்தேதி) முதல் 22-ந்தேதி வரை சென்னையில் உள்ள தடயவியல் துறை அலுவலகத்தில் அரசு நிபுணர்களின் முன்னிலையில் உண்மையை கண்டறியும் பரிசோதனை நடத்தப்போவதாக சம்பந்தப்பட்ட அனைவருக்கும் சிறப்பு புலனாய்வு பிரிவு போலீசார் சம்மன் அனுப்பியுள்ளனர்.

    இது குறித்து போலீஸ் வட்டாரங்கள் கூறுகையில், 13 பேருக்கும் தனித்தனியாக சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. பரிசோதனையின் முடிவில் நிச்சயம் குற்றவாளி குறித்த அறிவியல் ரீதியான முடிவுகள் தெரியவரும்.

    பரிசோதனை அறிக்கை இந்த மாத இறுதிக்குள் கோர்ட்டில் தாக்கல் செய்யப்படும். இதன் அடிப்படையில் விசாரணையில் அடுத்தகட்ட நகர்வு சிறப்பாக இருக்கும் என்றனர்.

    • ராமஜெயம் கொலை செய்யப்பட்ட நாளுக்கு முந்தைய தினம் திருச்சி தில்லை நகர் பகுதியில் மேற்கண்ட 13 பேரில் 5 பேரின் செல்போன் பயன்பாடு இருந்தது கண்டறியப்பட்டுள்ளது.
    • 13 பேரில் சண்முகம் என்பவர் மட்டும் உண்மை கண்டறியும் சோதனைக்கு மறுப்பு தெரிவித்துள்ளார்.

    திருச்சி:

    தி.மு.க. முதன்மை செயலாளரும் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அமைச்சருமான கே.என்.நேருவின் தம்பியும் தொழிலதிபருமான கே.என்.ராமஜெயம் கடந்த 2012-ம் ஆண்டு மார்ச் மாதம் 29-ந்தேதி அதிகாலை வழக்கம்போல் நடைபயிற்சி சென்றார்.

    அப்போது அவர் மர்ம நபர்களால் கடத்தி கொலை செய்யப்பட்டார். அவரது உடல் கை கால்கள் கட்டப்பட்ட நிலையில் கல்லணை ரோடு திருவளர்ச்சோலை பகுதியில் கண்டெடுக்கப்பட்டது.

    இது தொடர்பாக முதலில் உள்ளூர் போலீசார் விசாரணை நடத்தினர். பின்னர் சி.பி.ஐ., சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை மேற்கொண்டனர். ஆனால் எந்தவித துப்பும் துலங்கவில்லை. இந்த நிலையில் தற்போது சி.பி.சி.ஐ.டி.யின் சிறப்பு புலனாய்வு குழுவினர் கடந்த 6 மாதமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    இந்த வழக்கில் இதுவரை 700 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது. இதில் சந்தேகப்படும்படியான 13 பேரை அடையாளம் கண்டு அவர்களுக்கு உண்மை கண்டறியும் சோதனை நடத்த முடிவு செய்துள்ளனர். இதற்கு வலுவான ஆதாரங்கள் இருப்பதாக சிறப்பு புலனாய்வு குழு அதிகாரிகள் உறுதிபட தெரிவித்துள்ளனர்.

    இதுதொடர்பாக அவர்கள் கூறும்போது, ராமஜெயம் கொலை செய்யப்பட்ட நாளுக்கு முந்தைய தினம் திருச்சி தில்லை நகர் பகுதியில் மேற்கண்ட 13 பேரில் 5 பேரின் செல்போன் பயன்பாடு இருந்தது கண்டறியப்பட்டுள்ளது.

    அது மட்டும் அல்லாமல் கொலை நடப்பதற்கு மூன்று தினங்களுக்கு முன்பு காரைக்காலில் அவர்கள் சந்தித்து பேசிய ஆதாரங்களும் கிடைத்திருக்கின்றன.

    இந்த நபர்களுக்கு ஜாபர் என்பவரது கொலை வழக்கிலும் தொடர்புள்ளது. எனவேதான் ராமஜெயம் கொலை வழக்கிலும் இவர்களுக்கு தொடர்பு இருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் விசாரணையை தீவிரப்படுத்தி இருக்கின்றோம். மேலும் இந்த 5 பேருடன் மற்ற 8 பேருக்கும் தொடர்பு இருக்கின்றது. அந்த அடிப்படையில் தான் 13 பேருக்கும் உண்மை கண்டறியும் சோதனை நடத்த முடிவு செய்துள்ளோம். இதில் கண்டிப்பாக துப்பு துலங்கும் என எதிர்பார்க்கிறோம் என்றனர்.

    இந்த 13 பேரில் சண்முகம் என்பவர் மட்டும் உண்மை கண்டறியும் சோதனைக்கு மறுப்பு தெரிவித்துள்ளார். ஆகவே வேறு வகையில் அவரிடம் விசாரணை நடத்த சிறப்பு புலனாய்வு குழு அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். உண்மை கண்டறியும் சோதனைக்கு உட்படுத்தப்படும் 12 பேருக்கும் முழு உடல் தகுதி மருத்துவ பரிசோதனை நடத்தி முடிக்கப்பட்டுள்ளது.

    அதைத்தொடர்ந்து நாளை (திங்கட்கிழமை) மருத்துவ அறிக்கையுடன் திருச்சி குற்றவியல் நீதிமன்றம் எண் 6-ல் ஆஜர்படுத்துகிறார்கள். நீதிபதி உண்மை கண்டறியும் சோதனைக்கு அனுமதி அளித்து தீர்ப்பு கூறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

    • கடலூர் ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ள செந்தில் என்பவருக்கு கடலூர் அரசு ஆஸ்பத்திரியில் மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்டது.
    • நரைமுடி கணேசன், மோகன்ராம், கலைவாணன், தினேஷ், மாரிமுத்து ஆகிய 5 பேருக்கும் இன்று திருச்சி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் மருத்துவ பரிசோதனை நடைபெற்றது.

    திருச்சி:

    தி.மு.க. முதன்மை செயலாளரும், நகர்ப்புற வளர்ச்சி துறை அமைச்சருமான கே.என்.நேருவின் தம்பி கே.என்.ராமஜெயம் கொலை வழக்கை தற்போது சிறப்பு புலனாய்வு குழுவினர் கடந்த 6 மாதமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதில் சந்தேக நபர்களான 13 பேரிடம் உண்மை கண்டறியும் பரிசோதனை நடத்த அந்த குழு முடிவு செய்தது.

    இதற்காக அந்த 13 பேரையும் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். அப்போது சாமி ரவி, திலீப் என்கிற லட்சுமி நாராயணன், சிவா, ராஜ்குமார், சத்யராஜ், சுரேந்தர், நரைமுடி கணேசன், மோகன்ராம், கலைவாணன், தினேஷ், மாரிமுத்து, செந்தில் ஆகிய 12 பேர் உண்மை கண்டறியும் சோதனைக்கு சம்மதம் தெரிவித்தனர்.

    அவர்களுக்கு முழு உடல் தகுதி மருத்துவ பரிசோதனை மேற்கொண்டு அந்த அறிக்கையுடன் வருகிற 21-ந்தேதி நீதிமன்றத்தில் ஆஜராக நீதிபதி உத்தரவிட்டார். அதன்படி நேற்றைய தினம் 6 பேருக்கு இதய நோய் நிபுணர், அறுவை சிகிச்சை நிபுணர், மனநல மருத்துவர், பொது மருத்துவர் உட்பட 5 டாக்டர்கள் பரிசோதனை மேற்கொண்டனர்.

    மேலும் நேற்றைய தினம் கடலூர் ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ள செந்தில் என்பவருக்கு கடலூர் அரசு ஆஸ்பத்திரியில் மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்டது. மீதம் இருந்த நரைமுடி கணேசன், மோகன்ராம், கலைவாணன், தினேஷ், மாரிமுத்து ஆகிய 5 பேருக்கும் திருச்சி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் மருத்துவ பரிசோதனை இன்று காலை தொடங்கியது.

    இந்த பரிசோதனை அறிக்கை உடனடியாக வழங்கப்பட உள்ளது. இந்த அறிக்கையின் அடிப்படையில் வருகிற 21-ந்தேதி நீதிபதி உண்மை கண்டறியும் சோதனை தொடர்பான முடிவினை அறிவிப்பார் என சிறப்பு புலனாய்வு குழு அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • மீதமுள்ள 5 பேருக்கும் நாளை பரிசோதனை நடத்தப்படும் என சிறப்பு புலனாய்வு குழு அதிகாரிகள் தெரிவித்தனர்.
    • ண்மை கண்டறியும் சோதனைக்கு ஒரு ரவுடி மட்டும் சம்மதம் தெரிவிக்கவில்லை.

    திருச்சி:

    தி.மு.க. முதன்மைச்செயலாளரும், நகர்ப்புற வளர்ச்சி துறை அமைச்சருமான கே.என்.நேருவின் தம்பி ராமஜெயம் கொலை வழக்கினை சிறப்பு புலனாய்வு குழு விசாரித்து வருகிறது.

    அதைத்தொடர்ந்து 13 ரவுடிகளை கண்டறிந்து அவர்களுக்கு உண்மை கண்டறியும் பரிசோதனை நடத்த குழு முடிவு செய்தது.

    இதுதொடர்பாக திருச்சி நீதிமன்றத்தில் உண்மை கண்டறியும் சோதனைக்கு அனுமதி அளிக்குமாறு மனு தாக்கல் செய்யப்பட்டது. இதில் 12 ரவுடிகள் உண்மை கண்டறியும் சோதனைக்கு சம்மதம் தெரிவித்தனர். உண்மை கண்டறியும் சோதனைக்கு சம்மதம் தெரிவித்த 12 பேரும் திருச்சி அரசு தலைமை மருத்துவமனையில் மருத்துவ பரிசோதனை மேற்கொண்டு மருத்துவ அறிக்கையுடன் வருகிற 21-ந்தேதி குற்றவியல் நீதிமன்றம் எண் 6-ல் ஆஜராக நீதிபதி சிவகுமார் உத்தரவிட்டிருந்தார்.

    இந்தநிலையில், அந்த 12 பேரில், சாமி ரவி, திலீப், சிவா ராஜ்குமார், சத்யராஜ், சுரேந்தர் ஆகிய 6 பேரும் இன்று காலை திருச்சி அரசு தலைமை மருத்துவமனைக்கு வந்தனர். அவர்களுக்கு திருச்சி அரசு தலைமை மருத்துவமனையில் பணியாற்றும் இதய நோய் நிபுணர், அறுவை சிகிச்சை நிபுணர், மனநல மருத்துவர், பொது மருத்துவர் என ஐந்து டாக்டர்கள் கொண்ட குழுவினர் பரிசோதனை மேற்கொண்டு வருகிறார்கள்.

    இதில் 5 பேருக்கும், ரத்தப் பரிசோதனை, இ.சி.ஜி., எக்ஸ்ரே இதய பரிசோதனை மேற்கொள்ளப்படும் எனவும், அவர்கள் மனதளவில் சீராக உள்ளனரா என்பது கண்டறியப்படுகிறது. மருத்துவ பரிசோதனையானது சுமார் 2 மணி நேரம் நீடிக்கும் என மருத்துவர்கள் தகவல் தெரிவித்துள்ளனர்.

    மீதமுள்ள 5 பேருக்கும் நாளை பரிசோதனை நடத்தப்படும் என சிறப்பு புலனாய்வு குழு அதிகாரிகள் தெரிவித்தனர். கடலூர் ரவுடிக்கு கடலூர் அரசு ஆஸ்பத்திரியில் பரிசோதனை நடத்தப்பட உள்ளது. இந்த உண்மை கண்டறியும் சோதனைக்கு ஒரு ரவுடி மட்டும் சம்மதம் தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

    • சிறப்பு புலனாய்வு குழு எஸ்.பி.ஜெயக்குமார், ரவுடிகளிடம் உண்மை கண்டறியும் சோதனை நடத்த அனுமதி அளிக்குமாறு மனுதாக்கல் செய்தார்.
    • ஆஜரான 13 பேரின் வழக்கறிஞர்கள் சிறப்பு புலனாய்வு குழுவினர் உண்மை கண்டறியும் சோதனை தொடர்பாக எந்த ஒரு முறையான அறிக்கையையும் பிரமாண பத்திரத்தில் தாக்கல் செய்யவில்லை.

    திருச்சி:

    தி.மு.க. முதன்மைச்செயலாளரும், நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சருமான கே.என்.நேருவின் தம்பி ராமஜெயம் கொலை வழக்கு தொடர்பாக சிறப்பு புலனாய்வு குழுவினர் விசாரணை செய்து வருகிறார்கள்.

    இதில் பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய தமிழகத்தின் பிரபல ரவுடிகள் 13 பேரிடம் உண்மை கண்டறியும் சோதனை செய்ய முடிவெடுத்தனர். அது தொடர்பாக உரிய அனுமதி கேட்டு புலனாய்வுக்குழுவினர் திருச்சி கோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர்.

    இதில் மோகன்ராம், தினேஷ், நரைமுடி கணேசன், சத்யராஜ், கலைவாணன், மாரிமுத்து, தீலீப் என்கிற லட்சுமி நாராயணன், ராஜ்குமார், சுரேந்தர், சண்முகம், சிவா என்ற குணசேகரன் ஆகியோரும், கடலூர் சிறையிலிருந்த செந்தில் ஆகிய 13 பேரும் கடந்த 1-ந்தேதி திருச்சி குற்றவியல் நீதிமன்றம் எண் 6-ல் நீதிபதி சிவக்குமார் முன்னிலையில் ஆஜராகினர்.

    பின்னர் வழக்கு 7-ந்தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. அதனை தொடர்ந்து அன்றைய தினம் சிறப்பு புலனாய்வு குழு எஸ்.பி.ஜெயக்குமார், ரவுடிகளிடம் உண்மை கண்டறியும் சோதனை நடத்த அனுமதி அளிக்குமாறு மனுதாக்கல் செய்தார். அதில் ஆஜரான 13 பேரின் வழக்கறிஞர்கள் சிறப்பு புலனாய்வு குழுவினர் உண்மை கண்டறியும் சோதனை தொடர்பாக எந்த ஒரு முறையான அறிக்கையையும் பிரமாண பத்திரத்தில் தாக்கல் செய்யவில்லை.

    எனவே இது முறையாக பின்பற்றப்பட வாய்ப்பில்லை. என்னென்ன நடைமுறைகள் பின்பற்றப்படுகிறது என்பது தொடர்பாக அவர்கள் விளக்கம் அளிக்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர். அதனையடுத்து அந்த வழக்கை 14-ந்தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி சிவக்குமார் உத்தரவிட்டார்.

    பின்னர் கடந்த 14-ந் தேதி சத்யராஜ், லெட்சுமி நாரயணன், சாமி ரவி, ராஜ்குமார், சிவா என்ற குணசேகரன், சுரேந்தர், கலைவாணன், மாரிமுத்து ஆகிய 8 பேர் திருச்சி குற்றவியல் நீதிமன்றம் எண் 6-ல் நீதிபதி சிவக்குமார் முன்பு ஆஜராகி உண்மை கண்டறியும் சோதனைக்கு ஒப்புக்கொண்டனர்.

    தென்கோவன் என்ற சண்முகம் என்பவர் மட்டும் இந்த சோதனைக்கு சம்மதம் தெரிவிக்கவில்லை. இந்த வழக்கில் மோகன்ராம், நரைமுடி கணேசன், தினேஷ், செந்தில் ஆகியோர் நேரில் ஆஜராகாத நிலையில் அவர்கள் இன்று (17-ந்தேதி) நேரில் ஆஜராக வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டு இருந்தார்.

    அதன்படி இன்று அந்த நான்கு பேரும் திருச்சி 6-வது குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜராகி உண்மை கண்டறியும் சோதனைக்கு சம்மதம் தெரிவித்தனர். இதையடுத்து உண்மை கண்டறியும் சோதனைக்கு அனுமதி அளிப்பது தொடர்பான முடிவை வருகிற 21-ந்தேதி அளிப்பதாக நீதிபதி சிவக்குமார் தெரிவித்தார். தொடர்ந்து வழக்கு வருகிற 21-ந்தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

    அன்றைய தினம் சம்மதம் தெரிவித்துள்ள 12 பேருக்கும் மருத்துவ பரிசோதனை செய்து அறிக்கை தாக்கல் செய்து ஆஜர்படுத்துமாறு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

    அவ்வாறு அனுமதி அளித்தவுடன் டெல்லியில் சிறப்பு அனுமதி பெறப்பட்டு விரைவில் இந்த 12 பேருக்கும் சென்னையில் உண்மை கண்டறியும் சோதனை நடத்துவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று சிறப்பு புலனாய்வுக்குழுவினர் தெரிவித்தனர்.

    ராமஜெயம் கொலை வழக்கில் உள்ளூர் போலீசார், சி.பி.சி.ஐ.டி., சி.பி.ஐ. விசாரணையில் இதுவரை துப்பு துலங்காத நிலையில், சிறப்பு புலனாய்வுக்குழு மூலம் கொலை குற்றவாளிகள் அடையாளம் காணப்பட்டு கைது செய்யப்படுவார்கள் என்ற நம்பிக்கையுடன் வழக்கு மீண்டும் வேகமெடுக்க தொடங்கியுள்ளது.

    • 13 பேரின் வழக்கறிஞர்கள் சிறப்பு புலனாய்வு குழுவினர் உண்மை கண்டறியும் சோதனை தொடர்பாக எந்த ஒரு முறையான அறிக்கையையும் பிரமாண பத்திரத்தில் தாக்கல் செய்யவில்லை.
    • வழக்கில் மோகன் ராம், நரைமுடி கணேசன், திணேஷ், செந்தில் ஆகியோர் நேரில் ஆஜராகாத நிலையில் அவர்களை வரும் 17-ந்தேதி நேரில் ஆஜராக வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டார்.

    திருச்சி:

    தமிழக நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அமைச்சர் கே.என்.நேருவின் சகோதரரும், தொழிலதிபருமான கே.என்.ராமஜெயம் 2012 மார்ச் 29 ஆம் தேதி கொலை செய்யப்பட்டார்.

    அவரது உடல் கல்லணை செல்லும் சாலையில் வீசப்பட்டு கிடந்தது. இது தொடர்பாக உள்ளூர் போலீசார் சி.பி.ஐ. மற்றும் சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

    இதில் எந்த துப்பும் துலங்காத நிலையில் சென்னை ஐகோர்ட் உத்தரவின்படி சிறப்பு புலனாய்வு குழு விசாரித்து வருகிறது. அதன் பின்னர் தமிழகத்தில் பிரபல ரவுடிகள் 13 பேரிடம் உண்மை கண்டறியும் சோதனை செய்ய முடிவெடுத்தனர். இது தொடர்பாக நீதிமன்றத்தின் அனுமதியை நாடி சிறப்பு புலனாய்வு குழு தரப்பில் திருச்சி மாவட்ட நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

    மோகன்ராம், தினேஷ், நரைமுடி கணேசன், சத்யராஜ், கலைவாணன், மாரிமுத்து, தீலீப் என்கிற லட்சுமி நாராயணன், ராஜ்குமார், சுரேந்தர், சண்முகம், சிவா (எ) குணசேகரன் ஆகியோரும் கடலூர் சிறையிலிருந்த செந்தில் ஆகிய 13 பேரும் கடந்த 1-ந்தேதி திருச்சி குற்றவியல் நீதிமன்றம் எண் 6-ல் நீதிபதி சிவக்குமார் முன்னிலையில் ஆஜராகினர்.

    அது தொடர்பாக சிறப்பு புலனாய்வு குழுவின் எஸ்.பி தான் மனு தாக்கல் செய்ய முடியும் என எதிர்தரப்பு வழக்கறிஞர்கள் கோரிக்கை வைத்த நிலையில் அந்த வழக்கை நவம்பர் 7-ந் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டார். அதனை தொடர்ந்து சிறப்பு புலனாய்வு குழு எஸ்.பி. மனு தாக்கல் செய்தார். வழக்கின் விசாரணை 7-ந்தேதி அன்று நடைபெற்றது.

    அதில் ஆஜரான 13 பேரின் வழக்கறிஞர்கள் சிறப்பு புலனாய்வு குழுவினர் உண்மை கண்டறியும் சோதனை தொடர்பாக எந்த ஒரு முறையான அறிக்கையையும் பிரமாண பத்திரத்தில் தாக்கல் செய்யவில்லை. எனவே இது முறையாக பின்பற்றப்பட வாய்ப்பில்லை. என்னென்ன நடைமுறைகள் பின்பற்றப்படுகிறது என்பது தொடர்பாக அவர்கள் விளக்கம் அளிக்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.

    அதனையடுத்து அந்த வழக்கை 14-ந்தேதிக்கு ஒத்தி வைத்து நீதிபதி சிவக்குமார் உத்தரவிட்டார். அதன்படி இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அதில் உண்மை கண்டறியும் சோதனைக்கு சத்யராஜ், லெட்சுமி நாரயணன், சாமி ரவி, ராஜ் குமார், சிவா (எ) குணசேகரன், சுரேந்தர், கலைவாணன், மாரிமுத்து ஆகியோர் இன்று திருச்சி குற்றவியல் நீதிமன்றம் எண் 6 நீதிபதி சிவக்குமார் முன்பு ஆஜராகி உண்மை கண்டறியும் சோதனைக்கு ஒப்புக்கொண்டனர்.

    தென்கோவன் (எ) சண்முகம் சோதனைக்கு சம்மதம் தெரிவிக்கவில்லை. இந்த வழக்கில் மோகன் ராம், நரைமுடி கணேசன், திணேஷ், செந்தில் ஆகியோர் நேரில் ஆஜராகாத நிலையில் அவர்களை வரும் 17-ந்தேதி நேரில் ஆஜராக வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டார்.

    ×