search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ரசிகர்கள் மோதல்"

    • கொல்லத்தில் நடந்த பேரணியில் பிரேசில், அர்ஜென்டினா அணி ரசிகர்கள் இடையே மோதல் ஏற்பட்டது.
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.

    கொல்லம்:

    உலக கோப்பை கால்பந்து போட்டி கத்தாரில் கடந்த 20-ந் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் விளையாடும் அணிகளுக்கு இந்தியாவிலும் நிறைய ரசிகர்கள் இருக்கின்றனர். உலக கால்பந்து போட்டி தொடங்கிய நாளன்று தமிழ்நாடு, கேரளா, உள்ளிட்ட மாநிலங்களில் உள்ள ரசிகர்கள் தங்களுக்கு பிடித்த அணியின் டி-சர்ட்டுகளை அணிந்து கோலாகலமாக கொண்டாடினர்.

    அந்த வகையில், கேரள மாநிலம் கொல்லத்தில் பேரணி நடைபெற்றது. இந்த பேரணியில் ஏராளமான கால்பந்து ரசிகர்கள் கலந்து கொண்டனர். அப்போது திடீரென பிரேசில், அர்ஜென்டினா அணி ரசிகர்கள் இடையே பயங்கர மோதல் ஏற்பட்டது. ஒருவரையொருவர் தாக்கிக் கொண்டனர். இதில் எத்தனை பேருக்கு காயம் ஏதும் ஏற்பட்டது? என்பது குறித்த தகவல் ஏதும் வெளியாகவில்லை.

    உள்ளூர் பிரமுகர் ஒருவர் இரு அணி ரசிகர்களையும் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தி சமாதானம் செய்து அனுப்பி வைத்தார். இந்த மோதல் தொடர்பாக புகார் ஏதும் அளிக்கப்படவில்லை. எனினும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.

    இதேபோல் பாலக்காட்டிலும் ரசிகர்களிடையே மோதல் ஏற்பட்டது. இது தொடர்பாக 22 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கால்பந்து ரசிகர்கள் மோதிக் கொண்டபோது பதிவு செய்யப்பட்ட வீடியோ சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.

    • மோதலில் பாகிஸ்தான் ரசிகர்கள் சிலர் காயம் அடைந்தனர்.
    • தாக்குதலில் ஈடுபட்ட ஆப்கானிஸ்தான் ரசிகர்கள் சிலர் அடையாளம் காணப்பட்டு ஷார்ஜா போலீசாரால் கைது செய்யப்பட்டனர்.

    ஷார்ஜாவில் நடந்த போட்டிக்கு பிறகு ஆப்கானிஸ்தான்-பாகிஸ்தான் ரசிகர்கள் இடையே மோதல் ஏற்பட்டது. ஆப்கானிஸ்தான் தோற்றதால் அந்நாட்டு ரசிகர்கள் ஆத்திரத்தில் மைதானத்தில் இருந்து பொருட்களை அடித்து உடைத்து பாகிஸ்தான் ரசிகர்களை தாக்கினர்.

    இதில் பாகிஸ்தான் ரசிகர்கள் சிலர் காயம் அடைந்தனர். தொடர்ந்து இரு தரப்பினரும் மைதானத்துக்கு வெளியே சாலையில் மோதிக் கொண்டனர்.

    தாக்குதலில் ஈடுபட்ட ஆப்கானிஸ்தான் ரசிகர்கள் சிலர் அடையாளம் காணப்பட்டு ஷார்ஜா போலீசாரால் கைது செய்யப்பட்டனர்.

    ×