ஆம்ஸ்டர்டாமில் பரபரப்பு: கால்பந்து போட்டியை பார்க்க சென்ற இஸ்ரேல் ரசிகர்கள் மீது தாக்குதல்

தோல்வி அடைந்த இஸ்ரேல் ரசிகர்கள்மீது மர்ம நபர்கள் தாக்குதல் நடத்தினர்.கலவரத்தில் ஈடுபட்ட பலரை போலீசார் கைது செய்துள்ளனர்.
ஆம்ஸ்டர்டாமில் பரபரப்பு: கால்பந்து போட்டியை பார்க்க சென்ற இஸ்ரேல் ரசிகர்கள் மீது தாக்குதல்
Published on

ஆம்ஸ்டர்டாம்:

நெதர்லாந்து தலைநகர் ஆம்ஸ்டர்டாமில் உள்ளூர் கால்பந்து அணியான அஜாக்சுக்கும், இஸ்ரேல் கால்பந்து அணிக்கும் இடையிலான போட்டி நடந்தது. இதில் இஸ்ரேல் அணி தோல்வி அடைந்தது. அதனால் இஸ்ரேல் ரசிகர்கள் கோஷமெழுப்பினர்.

போட்டி முடிந்து ஆம்ஸ்டர்டாம் நகரின் தெருக்களில் சென்ற இஸ்ரேல் ரசிகர்கள் மீது மர்ம நபர்கள் தாக்கினர். அவர்களில் சிலர் பாலஸ்தீன கொடிகளை ஏந்தியபடி கோஷமெழுப்பினர்.

கலவரத்தில் ஈடுபட்ட நெதர்லாந்தை சேர்ந்த பலர் கைதுசெய்யப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.

இதற்கிடையே, நெதர்லாந்தில் உள்ள இஸ்ரேல் தூதரகம் வெளியிட்ட அறிவிப்பில், நெதர்லாந்தில் இருக்கும் இஸ்ரேல் மக்கள் பாதுகாப்பான இடங்கள் இருக்க வேண்டும் என தெரிவித்துள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com