search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மின் கட்டண"

    • ஈரோடு மாவட்டத்தில் மின் கட்டண உயர்வை கண்டித்து அ.தி.மு.க. சார்பில் கோபிசெட்டிபாளையம், பவானி, ஈரோடு சூரம்பட்டி நால்ரோடு ஆகிய 3 இடங்களில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
    • நிர்வாகிகள் கலந்து கொண்டு மின் கட்டண உயர்வை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டத்தில் மின் கட்டண உயர்வை கண்டித்து அ.தி.மு.க. சார்பில் கோபிசெட்டிபாளையம், பவானி, ஈரோடு சூரம்பட்டி நால்ரோடு ஆகிய 3 இடங்களில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.

    மின் கட்டண உயர்வை கண்டித்து ஈரோடு சூரம்பட்டி நால் ரோட்டில் மாநகர் மாவட்ட அ.தி.மு.க. செயலாளரும் முன்னாள் அமைச்சருமான கே.வி.ராமலிங்கம் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.

    ஈரோடு புறநகர் மேற்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளரும் முன்னாள் அமைச்சருமான செங்கோட்டையன் தலைமையில் கோபிசெட்டிபாளையம் பஸ் நிலையத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    இதில் பவானிசாகர் எம்.எல்.ஏ. பண்ணாரி, முன்னாள் எம்.எல்.ஏ. எஸ்.எஸ்.ரமணீதரன், ஒன்றிய செயலாளர்கள் தம்பி சுப்பிரமணியம், ஈஸ்வரமூர்த்தி, கோபி நகர செயலாளர் பிரினியோ கணேஷ் உள்பட ஏராளமான பேர் கலந்து கொண்டு மின் கட்டண உயர்வுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர்.

    ஈரோடு புறநகர் கிழக்கு மாவட்ட செயலாளரும் முன்னாள் அமைச்சருமான கே.சி.கருப்பணன் தலைமையில் பவானி அந்தியூர் ேராட்டில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் பெருந்துறை ஜெயக்குமார் எம்.எல்.ஏ. பவானி நகர அதிமுக செயலாளர் சீனிவாசன்,

    முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் கே.சி.பொன்னுத்துரை, டாக்டர் பொன்னுசாமி, கே.எஸ். பழனிச்சாமி, ஈரோடு மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் கிருஷ்ணராஜ், பவானி வடக்கு ஒன்றிய செயலாளர் தங்கவேலு, தெற்கு ஒன்றிய செயலாளர் ஜெகதீஸ், பவானி ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவர் பூங்கோதை வரதராஜ்,

    அண்ணா தொழிற்சங்க ஒன்றிய செயலாளர் சோமு, எம்.ஜி.ஆர். இளைஞர் அணி இணை செயலாளர் மாதையன் என்கிற எம்.ஜி. நாத், இளைஞர் அணி செயலாளர் கரேத்தா பெரியசாமி, ஒன்றிய கவுன்சிலர் வாத்தியார் குப்புசாமி, அம்மாபேட்டை வடக்கு ஒன்றிய செயலாளர் முனியப்பன், தெற்கு ஒன்றிய செயலாளர் மேகநாதன்,

    ஐ.டி. பிரிவு பிரகாஷ் உட்பட ஈரோடு புறநகர் கிழக்கு மாவட்ட ஒன்றிய நகர பேரூர் கழக நிர்வாகிகள் 100-க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர். நிர்வாகிகள் கலந்து கொண்டு மின் கட்டண உயர்வை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர்.

    • அதன்படி அ.தி.மு.க. சார்பில் இன்று வீரப்பன் சத்திரம் பஸ் நிறுத்தம் அருகே மின் கட்டண உயர்வை கண்டித்தும், வீட்டு வரி உயர்வை கண்டித்தும், பெண்களைப் பாதுகாக்க வலியுறுத்தியும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
    • ஆர்ப்பா ட்டத்திற்கு முன்னாள் அமைச்சரும், ஈரோடு மாநகர் மாவட்ட செயலா ளருமான கே.வி.ராமலிங்கம் தலைமை தாங்கினார்.

    ஈரோடு:

    தமிழகம் முழுவதும் இன்று அ.தி.மு.க. சார்பில் மின் கட்டண உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெறும் என இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்திருந்தார்.

    அதன்படி அ.தி.மு.க. சார்பில் இன்று வீரப்பன் சத்திரம் பஸ் நிறுத்தம் அருகே மின் கட்டண உயர்வை கண்டித்தும், வீட்டு வரி உயர்வை கண்டித்தும், பெண்களைப் பாதுகாக்க வலியுறுத்தியும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பா ட்டத்திற்கு முன்னாள் அமைச்சரும், ஈரோடு மாநகர் மாவட்ட செயலா ளருமான கே.வி.ராமலிங்கம் தலைமை தாங்கினார்.

    முன்னாள் எம்.எல்.ஏ.வும், மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற செயலாளருமான கே.எஸ்.தென்னரசு முன்னிலை வகித்தார். முன்னாள் அமைச்சர் ராமசாமி, முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் சிவசுப்பிரமணி, கிட்டுசாமி, பூந்துறை பாலு, முன்னாள் மேயர் மல்லிகா பரமசிவம், முன்னாள் துணை மேயர் கே.சி .பழனிச்சாமி கவுன்சிலர் சூரம்பட்டிஜெகதீஷ், மாநகராட்சி எதிர்க்கட்சித் தலைவர் தங்கமுத்து, முன்னாள் எம்.பி. செல்வகுமார சின்னையன், முன்னாள் மண்டல தலைவர் பெரியார் நகர் மனோகரன், ஜெயலலிதா பேரவை மாவட்ட இணைச்செயலாளர் வீரக்குமார், பகுதி செயலாளர்கள் கேச வமூர்த்தி, கோவிந்தராஜன், ராமசாமி, மாணவரணி மாவட்ட தலைவர் ரத்தன் பிரித்வி, மாணவர் அணி மாவட்ட இணைச்செயலாளர் யுனிவர்சல் நந்தகோபால், வீரப்பன் சத்திரம் பகுதி ஜெயலலிதா பேரவை இணைச் செயலாளர் ஜெயராமன், மாவட்ட வக்கீல் அணி தலைவர் துரை சக்திவேல், பெரியார் நகர் பகுதி அமைத்தலைவர் மீன் ராஜா, சிந்தாமணி கூட்டுறவு சங்க இயக்குனர் பொன் சேர்மன், மாணவரணி பொருளாளர் முருகானந்தம், 46 புதூர் தலைவர் பிரகாஷ், நிர்வாகி துரைசேவுகன், அண்ணா தொழிற்சங்க மாவட்ட இணைச்செயலாளர் மாதையன், மாவட்ட பிரதிநிதி கஸ்தூரி, பெரியார் நகர் பகுதி நிர்வாகி சூரியசேகர், சூரம்பட்டி தங்கவேலு, மாவட்ட செயற்குழு உறுப்பினர் தாமோதர மூர்த்தி, ஐடி விங் செயலாளர் கோபாலகிருஷ்ணன், உள்பட பலர் கலந்து கொண்டார்கள்.

    • இதையொட்டி ஈரோடு புறநகர் மேற்கு மாவட்ட அ.தி.மு.க சார்பில் கோபிசெட்டிபாளையம் பஸ் நிலையத்தில் இன்று காலை 10 மணி அளவில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
    • இதில் முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு தலைமை தாங்கி பேசினார்.

    கோபி:

    தமிழகம் முழுவதும் மின் கட்டண உயர்வு உள்பட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தி இன்று ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அ.தி.முக. இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.

    இதையொட்டி ஈரோடு புறநகர் மேற்கு மாவட்ட அ.தி.மு.க சார்பில் கோபிசெட்டிபாளையம் பஸ் நிலையத்தில் இன்று காலை 10 மணி அளவில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு தலைமை தாங்கி பேசினார்.

    இதில் மின் கட்டண உயர்வு, சொத்து வரி உயர்வு, விலைவாசி உயர்வு, ஆகியவற்றை கண்டித்தும் தி.மு.க. தேர்தல் அறிக்கைகளில் அறிவிக்கப்பட்ட குடும்ப த்தலைவிக்கானரூ.1000, சிலிண்டருக்கு மானியம், பெட்ரோல், டீசல் விலை குறைப்பு, உள்ளிட்ட பல்வேறு வாக்குறுதிகளை நிறை வேற்றாததை கண்டி த்தும் கோஷம் எழுப்ப ப்பட்டது.

    தாலிக்கு தங்கம், பெ ண்களுக்கு மானிய விலையில் ஸ்கூட்டர் போன்ற நலத்திட்டங்களை செயல்படுத்தாததை கண்டித்தும், அரசு ஊழியருக்கு கொடுத்த வாக்குறுதிகளை நிறை வேற்றாததை கண்டித்தும் இதில் கலந்து கொண்டவர்கள் கோஷம் எழுப்பி போராட்டம் நடத்தினர்.

    இதில் பவானிசாகர் பண்ணாரி எம்.எல்.ஏ, கோபி நகர அ.தி.மு.க. செய லாளர் பிரினியோ கணேஷ், நம்பியூர் ஒன்றிய செயலாளர் தம்பி சுப்பிர மணியன் மற்றும் முன்னாள் எம்.பி.க்கள், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள், மாவட்ட, நகர, ஒன்றிய, பேரூராட்சி, கிளை கழக, நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    இதையொட்டி எதிர்ப்பை தெரிவிக்கும் வகையில் கருப்பு பலூன்கள் ஆர்ப்பாட்டத்தில் பறக்க விடப்பட்டன. மேலும் அ.தி.மு.க.வினர் பதாகைகளை ஏந்தி கொண்டு மின் கட்டண உயர்வை கண்டித்து தொடர்ந்து கோஷங்கள் எழுப்பினர்.

    ×