search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மான் வேட்டை"

    • கொத்தமங்கலம் வனப்பகுதி போலிபள்ளம் பகுதியில் வனத்துறை சார்பில் கட்டை அமைத்து தண்ணீர் தேக்கி வைக்கப்பட்டு உள்ளது.
    • வனத்துறையினர் வலைகள் மற்றும் மான் கறி ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

    சத்தியமங்கலம்:

    ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் தாளவாடி, பவாளிசாகர் உள்பட 10 வன சரகங்கள் உள்ளன. இந்த வனப்பகுதிகளில் யானை, புலி, சிறுத்தை, கடி, மான் உள்பட பல்வேறு வன விலங்குகள் உள்ளன.

    இந்த வனப்பகுதியில் ஒரு சிலர் அனுமதியின்றி நுழைந்து மான் உள்ளிட்ட வனவிலங்குகளை வேட்டையாடி வருகிறார்கள். வனத்துறை அதிகாரிகளும் அடிக்கடி ரோந்து சென்று வன விலங்குகளை வேட்டையாடும் கும்பலை பிடித்து அபராதம் விதிப்பது மற்றும் கைது உள்ளிட்ட நடவடிக்கைகள் எடுத்து வருகிறார்கள். ஆனாலும் சிலர் வனப்பகுதியில் புகுந்து மான் உள்ளிட்டவைகளை வேட்டையாடுவது தொடர்ந்து நடந்து வருகிறது. மேலும் கொத்தமங்கலம் வனப்பகுதி போலிபள்ளம் பகுதியில் வனத்துறை சார்பில் கட்டை அமைத்து தண்ணீர் தேக்கி வைக்கப்பட்டு உள்ளது. அந்த குட்டையில் மான்கள் தண்ணீர் குடித்து செல்வது வழக்கம்.

    இந்த நிலையில் பவானிசாகர் வன சரகத்துக்குட்பட்ட கொத்தமங்கலம் காப்பு காடு வனப்பகுதியில் வன சரகர் சிவகுமார், வன காப்பாளர் மற்றும் வனப்பகுதி பணியாளர்கள் ரோந்து சென்று ஆய்வு செய்தனர். அப்போது கொத்தமங்கலம் வனப்பகுதி போலி பள்ளம் பகுதியில் 4 பேர் நைலான் வலைகளுடன் சுற்றி கொண்டு இருந்தனர். இதையடுத்து வனத்துறையினர் அவர்களை பிடித்து விசாரணை நடத்தினர். இதில் அவர்கள் சத்தியமங்கலம் அடுத்த புதுப்பீர் கடவு பகுதியை சேர்ந்த சின்னசாமி (44), கார்த்திகேயன் (21), திருப்பூரை சேர்ந்த சதீஸ்குமார் (23), வெங்கடேஷ் (28) என்பதும், நைலான் வலைகள் மூலம் மான்களை வேட்டையாடியதும் தெரிய வந்தது.

    இதையடுத்து வனத்துறையினர் அவர்களிடம் இருந்து வலைகள் மற்றும் மான் கறி ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். இதையடுத்து அவர்கள் 4 பேரையும் கைது செய்தனர். இதை தொடர்ந்து அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கோபிசெட்டிபாளையம் மாவட்ட சிறையில் அடைத்தனர். 

    • 20 கிலோ இறைச்சி, துப்பாக்கி பறிமுதல்
    • சாத்தனூர் காப்பு காட்டில் துணிகரம்

    செங்கம்:

    செங்கம் அருகே உள்ள பெண்ணையாறு காப்புக்காட்டில் சாத்தனூர் வனச்சரக அலுவலர் ஸ்ரீனிவாசன் தலைமையில் வனவர் ராதா, வனக்காப்பாளர்கள் சிலம்பரசன், கார்த்திகேயன், ராஜ்குமார், வெங்கடேசன் உள்ளிட்டோர் நேற்று இரவு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.

    அப்போது காப்புக் காட்டில் உரிமம் இல்லாத கள்ள நாட்டு துப்பாக்கியை பயன்படுத்தி புள்ளிமானை வேட்டையாடி கூறு போட்டு கொண்டிருந்த 4 பேரை வனத்துறையினர் சுற்றி வளைத்து பிடித்தனர்.

    விசாரனையில் அவர்கள் தண்டராம்பட்டை சேர்ந்த சேகர்,

    புளியம்பட்டியை சேர்ந்த வரதன், சங்கர்,

    ஏழுமலை என்பதும் தெரியவந்தது.

    அவர்களை கைது செய்தனர். அவர்களிடமிருந்து 20 கிலோ மான் கறி, வேட்டைக்கு பயன்படுத்திய நாட்டு துப்பாக்கி மற்றும் ஒரு பைக் பறிமுதல் செய்யப்பட்டது.

    • இருசக்கர வாகனத்தினை நிறுத்தி சோதனை மேற்கொண்டதில் நாட்டுத் துப்பாக்கியுடன் மான்கறி இருப்பது தெரியவந்தது.
    • கள்ளத் துப்பாக்கி வைத்திருப்போர் தாமாக முன்வந்து காவல்துறை மற்றும் வனத்துறையுடன் ஒப்படைக்க வேண்டும்.

     ஒகேனக்கல்,

    தருமபுரி மாவட்டம், ஒகேனக்கல் வன சரக்கத்திற்கு உட்பட்ட ஒட்டப்பட்டி பிரிவு பகுதியில் ஒகேனக்கல் வனச்சரக அலுவலர்கள் ராஜ்குமார் (ஒகேனக்கல்), செந்தில்குமார் (பென்னாகரம்), ஆலயமணி (வேட்டை தடுப்பு ) மற்றும் வனப்பணியாளர்கள் கொண்ட குழுவினர் ஊட்டமலை பகுதியில் ரோந்து சென்றனர்.

    அப்போது அவ்வழியாக வந்த இருசக்கர வாகனத்தினை நிறுத்தி சோதனை மேற்கொண்டதில் நாட்டுத் துப்பாக்கியுடன் மான்கறி இருப்பது தெரியவந்தது.

    அவர் கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை அருகே சேசுராஜபுரம் பூமரத்துகுழி பகுதியை சேர்ந்த கோபால் மகன் சக்தி (வயது28) என்பதும், நாட்டுத் துப்பாக்கி கொண்டு வனப்பகு தியில் மான் வேட்டையாடியதாக ஒப்பு கொண்டார்.

    இதனை அடுத்து வனத்துறையினர் சக்தியை கைது செய்து பென்னாகரம் மாவட்ட உரிமையியல் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி தருமபுரி கிளை சிறையில் அடைத்தனர்.

    மேலும் கள்ளத் துப்பாக்கி வைத்திருத்தல், வனவிலங்குகளை வேட்டையாடுதல் போன்ற குற்றங்களில் ஈடுபடுதல், கள்ளத்துப்பாக்கி வைத்திருப்போர் தாமாக முன்வந்து காவல்துறை மற்றும் வனத்துறையுடன் ஒப்படைக்க வேண்டும்.

    வனத்துறை மூலமாக கள்ளத்துப்பாக்கி வைத்திருப்பது தெரிந்தாலோ, வன விலங்குகளை வேட்டையாடுதல் போன்ற சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டாலோ சம்பந்தப்பட்ட நபர் மீது குண்டர் சட்டம் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும்.

    வன உயிரினங்களையும், வனத்தையும் பாதுகாக்க கிராமங்கள் தோறும் வனத்துறையினர் பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி அணிவகுப்பு நடத்தி வருகிறது.

    பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிக்குள் தேவையின்றி அத்துமீறி உள்ளே நுழைந்து குற்ற செயல்களில் ஈடுபடுவோர் மீது வனஉயிரின பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு குறைந்தபட்சமாக மூன்று ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கவும் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட உள்ளது.

    மேலும் கள்ளத்துப்பாக்கி வைத்திருப்பது தெரிந்தாலோ வனவிலங்குகளை வேட்டையாடுதல் போன்ற குற்றச்சம்பவங்கள் நடைபெறுவதாக இருப்பின் பொதுமக்கள் தருமபுரி மாவட்ட வனத்துறை இலவச கைப்பேசி எண் 18 00 425 4586 என்ற எண்ணிற்கு தொடர்பு கொண்டு தகவல் அளிக்கலாம். தகவல் அளிப்பவரின் விபரங்கள் ரகசியம் காக்கப்படும் என மாவட்ட வனத்துறையினர் தெரிவித்தனர்.

    • போலீசாரின் ரோந்து பணியில் சிக்கினர்
    • 3 நாட்டு துப்பாக்கிகள் பறிமுதல்

    போளூர்:

    திருவண்ணாமலை மாவட்ட வன அலுவலர் அ ருண்லால் உத்தரவின் பேரில் போளூர் வனச்சரக அலுவலர் குமார் தலைமையில், வனவர்கள் சிவகுமார், சந்திர சேகரன் மற்றும் வனக்காப்பா ளர்கள் அல்லியாளமங்கலம் காப்புக்காடு, அல்லிக்கட்டை சரகத்தில் காடு ஆகிய பகுதி களில் நேற்று முன்தினம் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

    அப்போது காட்டில் பெண் புள்ளிமானை, நாட்டு துப் பாக்கி மூலம் வேட்டையாடி, அதனை இருசக்கர வாகனத்தில் கடத்தி சென்ற 3 வாலி பர்களை மடக்கி பிடித்தனர்.

    விசாரணையில் அவர்கள் ரோந்து பணி தேவிகாபுரத்தை சேர்ந்த சிவா (வயது 27), போளூரை சேர்ந்த சாம்சன் (26), கிளியனூரை சேர்ந்த அரி (25) என்பது தெரிய வந்தது.

    இதை யடுத்து 3 பேரையும் வனத்துறையினர் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து 3 நாட்டு துப்பாக்கிகள், ரவைகள் பறிமுதல் செய்யப்பட்டது.

    வேட்டையாடப்பட்ட மானை கால் நடை மருத்துவர் மூலம் பிரேத பரிசோதனை செய்து காட்டில் புதைத்தனர்.

    • குண்டுப்பட்டி பகுதியில் மான் வேட்டையாடி, இறைச்சியை சமைப்பதாக வனத்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
    • குண்டுப்பட்டி பகுதியில் ராமச்சந்திரன் என்பவர் மான் வேட்டையாடி இறைச்சியை சமைத்தது தெரியவந்தது.

    கொடைக்கானல்:

    கொடைக்கானல் அருகே குண்டுப்பட்டி பகுதியில் மான் வேட்டையாடி, இறைச்சியை சமைப்பதாக வனத்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் உதவி வனப்பாதுகாப்பு அலுவலர் கணேசன் தலைமையில் வனத்துறையினர் விரைந்து சென்று சோதனை நடத்தினர்.

    அப்போது குண்டுப்பட்டி பகுதியில் ராமச்சந்திரன் என்பவர் மான் வேட்டையாடி இறைச்சியை சமைத்தது தெரியவந்தது. இதனை தொடர்ந்து அவரை கைது செய்து கடமான் இறைச்சியை பறிமுதல் செய்தனர். அவர் வேறு ஏதேனும் விலங்குகளை வேட்டையாடி உள்ளாரா என்பது குறித்து வனத்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • அகம் புறம், தீநகர், காசேதான் கடவுளடா படங்களை இயக்கிய திருமலை தற்போது மான் வேட்டை படத்தை இயக்கியுள்ளார்.
    • மான் வேட்டை இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.

    அகம் புறம், தீநகர், காசேதான் கடவுளடா படங்களை இயக்கி பிரபலமடைந்த இயக்குனர் திருமலை இயக்கத்தில் புதுமுகங்கள் நடிப்பில் உருவாகியுள்ள படம் மான் வேட்டை. விரைவில் திரைக்கு வரவுள்ள இப்படத்தை டி கிரியேஷன்ஸ் சார்பில் இயக்குனர் எம்.திருமலை இப்படத்தை தயாரித்துள்ளார். இப்படத்திற்கு ஸ்ரீகாந்த் தேவா இசையமைத்துள்ளார்.

    இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இதில் திரைப்பிரபலங்கள், படக்குழுவினர் உள்ளிட்ட பலரும் கலந்துக் கொண்டனர். இந்நிகழ்வில் தயாரிப்பாளர் கே.ராஜன் பேசியதாவது, "இயக்குனர் திருமலை அனைவருக்கும் உதவ கூடிய நல்ல உள்ளம் கொண்ட நபர். இந்தப் படத்தை சிறப்பான முறையில் எடுத்து முடித்து இருக்கிறார்கள். மான்வேட்டை படத்தை கடின உழைப்பையும், அர்பணிப்பையும் அளித்து உருவாக்கி இருக்கின்றனர். இந்த படம் வசூல்வேட்டை காண வேண்டும். இந்த படம் வெற்றி பெற்றால் பல சிறிய தயாரிப்பாளர்கள் வருவார்கள். படம் வெற்றி பெற எனது வாழ்த்துகள்" என்றார்.

    மான் வேட்டை

    மான் வேட்டை

     

    நடிகர் ரவி மரியா பேசியதாவது, "நண்பர் திருமலைக்காக மட்டுமே இந்த விழாவிற்காக வந்தேன். இந்த படம் வெற்றி பட வரிசையில் இணைய வேண்டும். திருமலை எல்லா பிரச்சனைகளுக்கும் குரல் கொடுக்க கூடிய நல்ல மனிதர். நல்ல படம் எப்பொழுதும் வெற்றி பெறும். சிறந்த படங்களுக்கு மக்கள் எப்போதும் ஆதரவு தருவார்கள். அந்த வரிசையில் இந்த மான்வேட்டை படம் மிகப்பெரிய வெற்றியடையும்" என்றார்.

    • ஓட்டலில் மான் கறி விற்பனை செய்வதாக வனத்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
    • ஓசூர் வனக்கோட்ட வனகாப்பாளர் கார்த்திகேயனி விசாரணை நடத்தினார்.

    தேன்கனிக்கோட்டை:

    கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை அருகே உள்ளது குள்ளட்டி வனப்பகுதி. இப்பகுதியை ஒட்டி தனியாருக்கு சொந்தமான ஓட்டல் ஒன்று உள்ளது.

    இந்த ஓட்டலில் கேரளாவை சேர்ந்த பிரசாந்த் (வயது 43) என்பவர் மேலாளராக பணிபுரிந்து வருகிறார். குடிசலூரை சேர்ந்த மல்லப்பா மகன் மல்லேசன் (32) மற்றும் மாதேஷ் (32) ஆகியோரும் இந்த ஓட்டலில் வேலை பார்த்து வருகின்றனர்.

    இந்நிலையில் அந்த ஓட்டலில் மான் கறி விற்பனை செய்வதாக வனத்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து ஓசூர் வனக்கோட்ட வனகாப்பாளர் கார்த்திகேயனி விசாரணை நடத்தினார்.

    அப்போது, பிரசாந்த் உள்ளிட்ட 3 பேரும் வனப்பகுதியில் மான்களை வேட்டையாடி ஓட்டலில் சமைத்து விற்பனை செய்தது தெரியவந்தது.

    இதைதொடர்ந்து தேன்கனிக்கோட்டை வனச்சரகர் முருகேஷ் மற்றும் வனத்துறையினர் அந்த தனியார் ஓட்டலுக்கு சோதனையிட சென்றனர்.

    அப்போது வனத்துறையினரை கண்டதும் மேலாளர் உள்பட 3 பேரும் மான் இறைச்சியை அவசர, அவசரமாக மண்ணில் குழி தோண்டி புதைத்துள்ளனர்.

    உடனே வனத்துறையினர் பிரசாந்த் உள்பட 3 பேரையும் கைது செய்தனர். குழி தோண்டி புதைக்கப்பட்ட மான் இறைச்சியை பரிசோதனைக்காக எடுத்து சென்றனர்.

    கைதான 3 பேருக்கும் தலா ரூ.40 ஆயிரம் வீதம் மொத்தம் ரூ.1 லட்சத்து 20 ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டது.

    • 25 கிலோ பறிமுதல்
    • ஒருவர் கைது

    குடியாத்தம்:

    வேலூர் மாவட்டம் குடியாத்தம் வனப்பகுதியில் பல பகுதிகளில் ஏராளமான புள்ளி மான்கள் உள்ளன இந்த புள்ளிமான்களை வனப்பகுதியை ஒட்டியபடியுள்ள கிராமங்களைச் சேர்ந்த சிலர் வேட்டையாடி மான் இறைச்சியை விற்பனை செய்வதாக தொடர் புகார்கள் வந்த வண்ணம் உள்ளன.

    இந்நிலையில் வேலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ் கண்ணன் உத்தரவின் பேரில் குடியாத்தம் துணை போலீஸ் சூப்பிரண்டு ராம மூர்த்தி மேற்பார்வையில் பழைய குற்றவாளிகளை கைது செய்ய குடியாத்தம் தாலுக்கா போலீஸ் இன்ஸ்பெக்டர் கணபதி தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் சரவணன், ஏட்டு சத்தியமூர்த்தி உள்ளிட்ட போலீசார் இன்று அதிகாலை சூராளூர் அடுத்த மலையடிவாரம் அருகே தேடப்படும் ஒருவர் பதுங்கி இருப்பதாக கிடைத்த தகவலின் பேரில் விரைந்து சென்றனர்.

    போலீசாரை கண்டதும் 2 பேர் மோட்டார் சைக்கிள்களில் தப்பி ஓடினர். அங்கு இருந்த ஒரு நபரை போலீசார் சுற்றி வளைத்து பிடித்தனர்.

    அந்த நபரை தீவிர விசாரணை செய்த போது ஒடுகத்தூர் அடுத்த தீர்த்தம் பகுதியைச் சேர்ந்த பாபு (வயது 30) என்பது தெரியவந்தது. சிலருடன் சேர்ந்து பெரிய புள்ளி மானை வேட்டையாடி இறைச்சியை துண்டுகளாகிய விற்பனைக்கு கொண்டு செல்லும்போது பிடிப்பட்டது தெரியவந்தது.

    இதனையடுத்து போலீசார் பாபுவிடமிருந்து மோட்டார் சைக்கிள் 25 கிலோ மான் இறைச்சி வேட்டையாட பயன்படுத்தும் கருவிகள் கத்தி, எடை மெஷின் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

    இதனையடுத்து காவல்துறை உயர் அதிகாரிகளின் உத்தரவின் பேரில் பிடிப்பட்ட பாபு மற்றும் மான் இறைச்சி உள்ளிட்டவைகளை குடியாத்தம் வனத்துறை யினரிடம் போலீசார் ஒப்படைத்தனர்.

    குடியாத்தம் வனப்பகுதியில் புள்ளி மான்களை வேட்டையாடி இறைச்சி விற்கும் சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது ரோந்து செல்லாத வனத்துறையினரையும் சம்பவத்தை கண்டுக்காமல் மெத்தனமாக உள்ள வனத்துறையினர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்களும், வனவிலங்கு ஆர்வலர்களும் மாவட்ட நிர்வாகத்தை வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

    ×