search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மானை வேட்டையாடி இறைச்சி விற்பனை
    X

    பறிமுதல் செய்யப்பட்ட மான் இறைச்சி, வேட்டையாட பயன்படுத்திய கருவிகள். 

    மானை வேட்டையாடி இறைச்சி விற்பனை

    • 25 கிலோ பறிமுதல்
    • ஒருவர் கைது

    குடியாத்தம்:

    வேலூர் மாவட்டம் குடியாத்தம் வனப்பகுதியில் பல பகுதிகளில் ஏராளமான புள்ளி மான்கள் உள்ளன இந்த புள்ளிமான்களை வனப்பகுதியை ஒட்டியபடியுள்ள கிராமங்களைச் சேர்ந்த சிலர் வேட்டையாடி மான் இறைச்சியை விற்பனை செய்வதாக தொடர் புகார்கள் வந்த வண்ணம் உள்ளன.

    இந்நிலையில் வேலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ் கண்ணன் உத்தரவின் பேரில் குடியாத்தம் துணை போலீஸ் சூப்பிரண்டு ராம மூர்த்தி மேற்பார்வையில் பழைய குற்றவாளிகளை கைது செய்ய குடியாத்தம் தாலுக்கா போலீஸ் இன்ஸ்பெக்டர் கணபதி தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் சரவணன், ஏட்டு சத்தியமூர்த்தி உள்ளிட்ட போலீசார் இன்று அதிகாலை சூராளூர் அடுத்த மலையடிவாரம் அருகே தேடப்படும் ஒருவர் பதுங்கி இருப்பதாக கிடைத்த தகவலின் பேரில் விரைந்து சென்றனர்.

    போலீசாரை கண்டதும் 2 பேர் மோட்டார் சைக்கிள்களில் தப்பி ஓடினர். அங்கு இருந்த ஒரு நபரை போலீசார் சுற்றி வளைத்து பிடித்தனர்.

    அந்த நபரை தீவிர விசாரணை செய்த போது ஒடுகத்தூர் அடுத்த தீர்த்தம் பகுதியைச் சேர்ந்த பாபு (வயது 30) என்பது தெரியவந்தது. சிலருடன் சேர்ந்து பெரிய புள்ளி மானை வேட்டையாடி இறைச்சியை துண்டுகளாகிய விற்பனைக்கு கொண்டு செல்லும்போது பிடிப்பட்டது தெரியவந்தது.

    இதனையடுத்து போலீசார் பாபுவிடமிருந்து மோட்டார் சைக்கிள் 25 கிலோ மான் இறைச்சி வேட்டையாட பயன்படுத்தும் கருவிகள் கத்தி, எடை மெஷின் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

    இதனையடுத்து காவல்துறை உயர் அதிகாரிகளின் உத்தரவின் பேரில் பிடிப்பட்ட பாபு மற்றும் மான் இறைச்சி உள்ளிட்டவைகளை குடியாத்தம் வனத்துறை யினரிடம் போலீசார் ஒப்படைத்தனர்.

    குடியாத்தம் வனப்பகுதியில் புள்ளி மான்களை வேட்டையாடி இறைச்சி விற்கும் சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது ரோந்து செல்லாத வனத்துறையினரையும் சம்பவத்தை கண்டுக்காமல் மெத்தனமாக உள்ள வனத்துறையினர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்களும், வனவிலங்கு ஆர்வலர்களும் மாவட்ட நிர்வாகத்தை வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

    Next Story
    ×