search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மாநில தலைவர்"

    • முன்னாள் முதல்வர் எடியூரப்பாவின் மகன் பிஒய் விஜயேந்திர எடியூரப்பா நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
    • கடந்த 6 மாதங்களாக கர்நாடகா மாநில புதிய பாஜக தலைவர் நியமனம் செய்யப்படாமல் இருந்தது.

    கர்நாடக சட்டசபை தேர்தலில் பாஜக படுதோல்வியை சந்தித்ததை அடுத்து அம்மாநில பாஜக தலைவர் பதவியில் இருந்து நளின் குமார் கட்டீல் ராஜினாமா செய்தார்.

    இதைதொடர்ந்து, கடந்த 6 மாதங்களாக கர்நாடகா மாநில புதிய பாஜக தலைவர் நியமனம் செய்யப்படாமல் இருந்தது.

    இதேபோல், கர்நாடக மாநில சட்டசபை எதிர்க்கட்சித் தலைவரையும் பாஜக நியமிக்கப்படாமல் இருந்தது.

    இந்நிலையில், கர்நாடக மாநில பாஜக புதிய தலைவராக முன்னாள் முதல்வர் எடியூரப்பாவின் மகன் பிஒய் விஜயேந்திர எடியூரப்பா நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

    நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் தந்தையின் சிகாரிபுரா தொகுதியில் போட்டியிட்டு சட்டமன்ற உறுப்பினராக தேர்வானார்.

    கர்நாடக தேர்தலில் பாஜக தோல்வியடைந்த நிலையில், புதிய தலைவர் நியமனம் செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • லட்சக்கணக்கான பொதுமக்கள் கலந்துகொள்ள ஏற்பாடு
    • அண்ணாமலை 18-ந்தேதி காலை நாகர்கோவிலில் தனது பாதயாத்திரையை தொடங்குகிறார்.

    நாகர்கோவில் :

    தமிழக பாரதிய ஜனதா தலைவர் அண்ணாமலை என் மண் என் மக்கள் என்ற பாதயாத்திரை மேற்கொண்டு உள்ளார். ராமேஸ்வரத்தில் பாதயாத்திரை தொடங்கிய அண்ணாமலை ஒவ்வொரு தொகுதி வாரியாக சென்று மக்களை சந்தித்து வருகிறார்.

    அதன்படி குமரி மாவட்டத்தில் உள்ள 6 சட்டமன்ற தொகுதிகளிலும் பாதயாத்திரை மேற் கொள்வதற்காக வருகிற 15-ந்தேதி குமரி மாவட்டம் வருகிறார். அன்று விளவங்கோடு, கிள்ளியூர் தொகுதிகளில் அண்ணாமலை பாதயாத்திரை மேற்கொள்கிறார். அங்கு மீனவ பிரதிநிதிகள், பொதுமக்கள் உட்பட பலரை சந்தித்து பேசுகிறார்.

    17-ந்தேதி குளச்சல் பத்ம நாபபுரம் தொகுதிகளில் பாதயாத்திரை மேற் கொள்ளும் அண்ணாமலை 18-ந்தேதி காலை நாகர்கோவிலில் தனது பாதயாத்திரையை தொடங்குகிறார்.

    நாகர்கோவில் மாநகர பகுதியில் பாதயாத்திரை மேற்கொள்ளும் அவர் மாலை கன்னியாகுமரி தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் பாதயாத்திரை மேற்கொள்கிறார்.

    பாதயாத்திரை நிகழ்ச்சியில் லட்சக்கணக்கான தொண்டர்கள் கலந்து கொள்ளும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. பாதயாத்திரை முன்னேற்பாடுகள் குறித்து பாரதிய ஜனதா மூத்த நிர்வாகிகள் ஆலோசனை மேற்கொண்டு வரு கிறார்கள். பாதயாத்திரை தொடர்பாக பா.ஜ.க. நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நாகர்கோவிலில் நடந்தது.

    மாவட்ட பொதுச் செயலாளர் ஜெகநாதன் தலைமை தாங்கினார்.

    மாவட்ட தலைவர் தர்மராஜ், எம்.ஆர்.காந்தி எம்.எல்.ஏ. ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில செயலாளர் மீனாதேவ், மாவட்ட பொருளாளர் முத்துராமன் உட்பட நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.

    • இளைஞர் பேரவை ஆர்ப்பாட்டம் நடந்தது.
    • மாநிலத் தலைவர் ராஜபாண்டியன் தலைமை தாங்கினார்.

    உசிலம்பட்டி

    மதுரை, தேனி, திண்டுக்கல் மாவட்டத்தில் இயங்கி வரும் அரசு கள்ளர் மாணவ-மாணவிகள் விடுதிகளை மிகவும் சிறுபான்மை பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்ப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழக அரசின் அரசு ஆணை எண் 40-யை ரத்து செய்யக்கோரி தமிழ் மாநில பிரமலைக்கள்ளர் முற்போக்கு இளைஞர் பேரவையினர் உசிலம்பட்டியில் ஆர்ப்பாட்டம் நடத்தினர். மாநிலத் தலைவர் ராஜபாண்டியன் தலைமை தாங்கினார்.

    மாநில இணைச் செயலாளர் சவுந்தரபாண்டியன், மாவட்ட தலைவர் பாண்டி, மாவட்ட செயலாளர் அசோக், செல்லம்பட்டி ஒன்றிய தலைவர் மலைச்சாமி, மாணவரணி தினேஷ், நிர்வாகிகள் ஆண்டித்தேவர், சோலை ராஜ், பழனி, கண்ணன் முன்னிலை வகித்தனர்.

    ×