என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "மருத்துவமனைகள்"
- தி.மு.க. ஆட்சியில் புதிதாக 25 அரசு தலைமை மருத்துவமனைகள் உருவாக்கப்பட்டுள்ளது.
- அரசு மருத்துவமனை புதிய கட்டிட அடிக்கல் நாட்டுவிழாவில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேசினார்.
ராஜபாளையம்
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அரசு மருத்துவமனையில் ரூ.40 கோடி மதிப்பில் 227 படுக்கைகள் கொண்ட நவீன வசதிகளுடன் கூடிய புதிய கட்டிடம் கட்டப்பட உள்ளது. இதற்கான அடிக்கல் நாட்டுவிழா நடந்தது. அமைச்சர்கள் சாத்தூர் ராமச்சந்திரன், சுப்பிரமணியன் ஆகியோர் புதிய கட்டிடத்திற்கு அடிக்கல் நாட்டினர்.
விழாவில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேசியதாவது:-
விருதுநகர் மாவட்டத்தில் 90 சதவீதத்திற்கும் அதிக மான மக்கள் தொழிலாளர்க ளாக உள்ளனர். அதனால் தான் பிற இடங்களில் மாவட்டத்திற்கு ஒரு தலைமை மருத்துவமனை உள்ள நிலையில் விருதுநகர் மாவட்டத்தில் அருப்புக் கோட்டை தலைமை மருத்துவமனையாகவும், ராஜபாளையம் அதற்கு இணையான மருத்துவ மனையாகவும் தரம் உயர்த்தப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கடந்த காலத்தில் 18 மாவட்ட தலைமை மருத்துவ மனைகளே இருந்தன. தி.மு.க. அரசு பொறுப்பேற்ற 22 மாதத்தில் ரூ.1,038 கோடி மதிப்பில் புதிதாக 25 அரசு தலைமை மருத்துவ மனைகள் உருவாக்க் பட்டுள்ளது. கலைஞர் ஆட்சியில் உருவாக்கப்பட்ட மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் இந்தியாவிலேயே அதிக பயனாளிகளை கொண்டு தமிழகம் முதல் இடத்தில் உள்ளது.
இவ்வாறு அவர் பேசினார்.
இந்த நிகழ்ச்சியில் ராஜபாளையம் தொகுதி எம்.எல்.ஏ. தங்கபாண்டியன், தனுஷ்குமார் எம்.பி., சுகாதார பணிகள் இணை இயக்குநர் முருகவேல், நகராட்சி தலைவர் பவித்ரா ஷியாம், ஒன்றிய தலைவர் சிங்கராஜ், மாவட்ட விளையாட்டு மேம்பட்டு பிரிவு அமைப்பாளர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ஆர். ரமேஷ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
எம்.எல்.ஏ. தங்கபாண்டி யன் தேர்தல் நேரத்தின்போது ராஜபாளையம் அரசு மருத்துவமனை தரம் உயர்த்தப்படும் என வாக்கு றுதி அளித்திருந்தார். அதன் அடிப்படையில் தற்போது ரூ.40 கோடி மதிப்பில் புதிய கட்டிடம் கட்டுவதற்கான பணி நடந்தது. எம்.எல்.ஏ.வின் நடவடிக்கைக்கு தொகுதிமக்கள் பாராட்டு தெரிவித்தனர்.
- பதிவு உரிமம் பெறாமல் செயல்படும் மருத்துவமனைகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.
- மருத்துவ கல்வி இயக்ககத்தின் விதிமுறைகளை பின்பற்றவில்லை என்றால், உரிமம் ரத்து செய்யப்படும்.
திருப்பூர்:
மருத்துவமனைகள், கிளினிக்குகள் தங்கள் உரிமத்தை ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை புதுப்பிக்க வேண்டும். அவ்வாறு உரிமம் புதுப்பிக்காத மருத்துவமனைகள் மீது நடவடிக்கை எடுக்க பரிந்துரைக்கப்படுகிறது. கடந்த 2 ஆண்டுகளில் கொரோனா தொற்று காலத்தில் புதிதாக மருத்துவமனைகள், கிளினிக்குகள் உருவாகின.மருத்துவ கல்வி இயக்ககம் 'ஒவ்வொரு மருத்துவமனைகளிலும் படுக்கை வசதிக்கேற்ப ஆக்சிஜன் கட்டமைப்பு, தேவையான 'வென்டிலேட்டர்' வசதி ஏற்படுத்த வேண்டும். அவசர கால பயன்பாட்டுக்கு சாய்வுதளம் அல்லது லிப்ட்வசதி இருத்தல் வேண்டும். இத்தகைய வசதியுள்ள மருத்துவமனைக்கு மட்டும்பதிவு உரிமம் வழங்கப்படும்.
பதிவு உரிமம் பெறாமல் செயல்படும் மருத்துவமனைகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்என அறிவித்தது.உரிமம் புதுப்பிக்க திருப்பூர் மாவட்டத்தில் நடப்பாண்டில் 1,310 விண்ணப்பங்கள் மருத்துவத்துறைக்கு வந்துள்ளது. இவற்றில் 1,192 மருத்துவமனை, கிளினிக் உரிமம் புதுப்பித்து சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. ஆய்வு நடத்தி, 118 மருத்துவமனை, கிளினிக் ஆகியவற்றின் நிலையை ஆராய வேண்டியுள்ளது. இவற்றில் மருத்துவ கல்வி இயக்ககத்தின் விதிமுறைகளை பின்பற்றவில்லை என்றால், உரிமம் ரத்து செய்யப்படும். தொடர்ந்து மருத்துவமனை செயல்பட அனுமதி மறுக்கப்பட உள்ளதாக மருத்துவ சுகாதார பணிகள் துறையினர் தெரிவித்தனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்