search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்"

    • அமைச்சர் ராஜ்நாத் சிங், ஹெலிகாப்டரில் பாதிப்புகளை பார்வையிட உள்ளார்.
    • மழை வெள்ள பாதிப்புகளை பார்வையிட்ட பிறகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்திக்கிறார்.

    மிக்சாங் புயல் எதிரொலியால் சென்னையில் மழை வெளுத்து வாங்கியது. இதனால், பல்வேறு இடங்களில் மழை நீர் சூழ்ந்து வீடுகளுக்குள்ளும் புகுந்தது.

    குறிப்பாக ஞாயிற்றுக்கிழமை இரவும் திங்கட்கிழமையும் இடைவிடாமல் 30 மணி நேரத்துக்கு மேல் அடைமழை பெய்ததால் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.

    புயலுக்கு பிறகு தமிழக அரசு தரப்பில் மீட்பு பணிகள் ஒரு புறம் துரிதமாக நடைபெற்று வந்தாலும், இன்னும் பல இடங்களில் தண்ணீர் தேங்கி இருக்கிறது.

    மின் வெட்டு, உணவு கிடைக்காமலும் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

    இந்நிலையில், சென்னை மழை வெள்ள பாதிப்பு குறித்து ஆய்வு செய்ய மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் நாளை சென்னை வருகிறார்.

    மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்குடன், அமைச்சர் தங்கம் தென்னரசு மற்றும் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் ஹெலிகாப்டரில் பாதிப்புகளை பார்வையிடுகின்றனர்.

    மழை வெள்ள பாதிப்புகளை பார்வையிட்ட பிறகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை ராஜ்நாத் சிங் சந்திக்க உள்ளார்.

    ×