search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பெண் வேட்பாளர்"

    • பா.ஜ.க வேட்பாளர் மாதவி லதாவுக்கு ஒய் பிளஸ் வகை பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.
    • ஆயுதம் ஏந்திய 5 வீரர்கள் 24 மணி நேரமும் பாதுகாப்பு பணியில் இருப்பார்கள் என தெரிவித்துள்ளனர்.

    திருப்பதி:

    தெலுங்கானா மாநிலத்தில் மே மாதம் 13-ந் தேதி பாராளுமன்ற தேர்தல் நடக்கிறது. ஐதராபாத் பாராளுமன்ற தொகுதியில் ஏ.ஐ.எம்.ஐ. எம். கட்சி தலைவர் அசாதுதீன் ஒவைசியை எதிர்த்து பா.ஜ.க சார்பில் சமூக ஆர்வலர் மாதவி லதா போட்டியிடுகிறார்.

    அவருக்கு பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் இருப்பதாக புகார்கள் வந்தன. இதையடுத்து அவருக்கு ஆயுதம் ஏந்திய கமாண்டோக்களின் வி.ஐ.பி பாதுகாப்பை மத்திய அரசு வழங்கி உள்ளது.

    பா.ஜ.க வேட்பாளர் மாதவி லதாவுக்கு ஒய் பிளஸ் வகை பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவை உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது.

    அவருடன் ஆயுதம் ஏந்திய 5 வீரர்கள் 24 மணி நேரமும் பாதுகாப்பு பணியில் இருப்பார்கள் என தெரிவித்துள்ளனர்.

    • காங்கிரஸ் முன்னாள் தலைவரும் வயநாடு எம்.பி.யுமான ராகுல்காந்தி, அரசியலில் அதிக பெண்கள் பிரதிநிதித்துவம் வேண்டும் என்று கூறி வருகிறார்.
    • பெண்களுக்கு அதிக பிரதிநிதித்துவம் வழங்கவேண்டும் என்று கூறியுள்ளார்.

    திருவனந்தபுரம்:

    பாராளுமன்ற தேர்தல் விரைவில் அறிவிக்கப்பட உள்ள நிலையில் அரசியல் கட்சிகள் வேட்பாளர் பட்டியலை வெளியிட்டு வருகின்றன. காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ள பட்டியலில் கேரள மாநிலத்தில் 16 தொகுதிகளுக்கு வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். இதில் ஒருவர் பெண் வேட்பாளர்.

    51 சதவீதம் பெண்கள் கொண்ட கேரள மக்கள் தொகையில், ஒரே ஒரு பெண் வேட்பாளர் மட்டுமே அறிவிக்கப்பட்டு இருப்பது ஏமாற்றம் அளிக்கிறது என்று அகில இநதிய காங்கிரஸ் கட்சியின் தேசிய செய்தி தொடர்பாளர் ஷாமா முகமது தெரிவித்துள்ளார்.

    காங்கிரஸ் முன்னாள் தலைவரும் வயநாடு எம்.பி.யுமான ராகுல்காந்தி, அரசியலில் அதிக பெண்கள் பிரதிநிதித்துவம் வேண்டும் என்று கூறி வருகிறார். ஆனால் கேரளாவில் உள்ள கட்சித் தலைவர்கள் இதற்கு செவி சாய்க்கவில்லை என்று தெரிகிறது. பெண்களுக்கான இட ஒதுக்கீடு மசோதா அறிமுகப்படுத்தப்பட்டு, சட்டம் நிறை வேற்றப்பட்ட பிறகும், மாநிலத்தில் ஒரு பெண் வேட்பாளரை மட்டுமே கட்சி நிறுத்தியுள்ளது. அதுவும் ஆலத்தூர் தனித் தொகுதி என்பதால் மட் டுமே ரம்யா ஹரிதாசுக்கு சீட் கிடைத்துள்ளது. இல்லை யென்றால் அவரும் கைவிடப்பட்டு இருப்பார்.

    வேட்பாளர்களை இறுதி செய்யும்போது தலைவர்கள், பெண்களுக்கு உரிய முக்கியத்துவத்தை அளித்திருக்க வேண்டும். வெற்றி வாய்ப்பு அதிகம் உள்ள இடங்களில் பெண்களை நிறுத்தியிருக்க வேண்டும். கடந்த தேர்தலில் 2 பெண்கள் போட்டியிட்டனர். ஆனால் பெண்கள் இடஒதுக்கீடு மசோதா நிறைவேற்றப்பட்ட பிறகு இந்த முறை ஒருவர் மட்டுமே களத்தில் இருப்பது எனக்கு மிகப்பெரிய ஏமாற்றமாக உள்ளது. கேரளாவில் போட்டியிடும் 12 வேட்பாளர்கள் கொண்ட பாரதிய ஜனதாவின் ஆரம்ப பட்டியலில் 3 பெண் வேட்பாளர்களும், எல்.டி.எப். அறிவித்த 20 வேட்பாளர்களின் பட்டியலில் 2 பெண்களும் இடம் பெற்றுள்ளனர்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    கடந்த சில நாட்களுக்கு முன்பு கேரள முன்னாள் முதல்-மந்திரி கருணாகரனின் மகள் பத்மாஜா வேணுகோபால், தான் புறக்கணிக்கப்படுவதாக கூறி காங்கிரசில் இருந்து விலகி, பா.ஜனதாவில் இணைந்த நிலையில், ஷாமாவின் கருத்து தற்போது முக்கியத்துவம் பெற்றுள்ளது.

    இது தொடர்பாக காங் கிரஸ் கட்சியின் தேசிய நிர்வாகி ஓருவர் கூறுகையில், ஷாமா புகார் அளிக்கவில்லை. பெண்களுக்கு அதிக பிரதிநிதித்துவம் வழங்கவேண்டும் என்று கூறியுள்ளார். மேலும் பெண்களின் வாக்குகள் மற்ற கட்சிகளுக்குச் செல்கிறது என்றும், அவர்களை திரும்ப பெற கட்சிக்கு அதிக பெண் வேட்பாளர்கள் தேவை என்றும் தெரிவித்துள்ளார் என்றார்.

    • தேர்தல் பிரசாரத்தில் சரிகா பன்சால் மீது இனவெறி வெறுப்பு பிரசாரம் பரப்பப்பட்டுள்ளது.
    • சரிகா பன்சாலின் பிரசார அடையாளங்கள் சிதைக்கப்பட்டன.

    நியூயார்க்:

    அமெரிக்காவின் வடக்கு கரோலினா மாகாணத்தில் உள்ள கேரி டவுன் கவுன்சிலுக்கு (நகரசபை) தேர்தல் வருகிற அக்டோபர் 10-ந் தேதி நடைபெற உள்ளது.

    இதில் இந்திய வம்சாவளியை சேர்ந்த பெண்ணான சரிகா பன்சால் போட்டியிடுகிறார். இதற்காக அவர் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.

    இந்த நிலையில் தேர்தல் பிரசாரத்தில் சரிகா பன்சால் மீது இனவெறி வெறுப்பு பிரசாரம் பரப்பப்பட்டுள்ளது. சரிகா பன்சாலின் பிரசார பதாகையில் அவரது முகத்தில் ஒரு கறுப்பின நபரின் முகத்தின் புகைப்படத்தை வைத்துள்ளனர்.

    இந்த சம்பவம் அவர் போட்டியிடும் வெஸ்ட் கேரி தொகுதியில் உள்ள ஹைகி ராப்ட் கிராமத்தில் நடந்துள்ளது. அங்கு சரிகா பன்சாலின் பிரசார அடையாளங்கள் சிதைக்கப்பட்டன. இந்த இனவெறி பிரசாரம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

    இது தொடர்பாக சரிகா பன்சால் கூறும்போது, இனவெறி பிரசார சம்பவம் அதிர்ச்சி அளிக்கிறது. எனது பிரசாரத்துக்கு எதிராக இனவெறிச் செயலால் உண்மையிலேயே வருத்தம் அடைந்தேன். நமது நகரத்தில் ஒற்றுமையை கட்டியெழுப்புவதற்கான வழிமுறையாக நாம் பன்முகத்தன்மையை ஏற்று கொள்ள வேண்டும்.

    கேரி நகரில் பழுப்பு அல்லது கறுப்பு நிற மக்களுக்கு எதிரான மத வெறி அல்லது இன வெறிக்கு இடமில்லை என்றார்.

    மேயர் ஹரோல்ட் கூறும் போது, இந்த இனவெறி வெறுக்கத்தக்க செயல். கேரி நகரில் நாம் விரும்பும் மதிப்புகளுக்கு முற்றிலும் எதிரானது. இது எங்கள் சமூகத்தை நெருக்கமாக கொண்டுவர மட்டுமே உத வும் என்றார்.

    ×