search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "புதிய தூய்மை திட்டம்"

    அக்டோபர் 2-ந்தேதிக்குள் திறந்தவெளி மலம் கழித்தல் இல்லாத மாநிலமாக தமிழகம் அறிவிக்கப்படும் என்று அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கூறினார். #MahatmaGandhi #SwachhataHiSeva #CleanIndia #SPVelumani
    கோவை:

    மத்திய அரசின் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் கோவை வெள்ளியங்கிரி மலை அடிவாரத்தில் உள்ள பூண்டி கோவில் முன்பாக அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, ஈஷா யோகா மைய நிறுவனர் சத்குரு ஜகி வாசுதேவ், நடிகர் விவேக், கோவை மாவட்ட கலெக்டர் ஹரிஹரன் உள்ளிட்டோர் தூய்மை பணி மேற்கொண்டனர்.

    இதில் 50-க்கும் மேற்பட்ட தன்னார்வலர்கள் மற்றும் இளைஞர்கள் இளம்பெண்கள் தூய்மைப் பணியை மேற்கொண்டனர். தூய்மை பணியை தொடங்கி வைத்த பின் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி நிருபர்களிடம் கூறியதாவது:-

    தமிழக அரசு சுகாதாரத்திற்கு அதிக முக்கியத்துவம் தருகிறது. மாநிலம் முழுவதும் உள்ள 12 ஆயிரத்து 584 ஊராட்சிகளிலும் சிறந்த முறையில் தூய்மை பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மாநிலம் முழுவதும் 65 ஆயிரம் தூய்மைப் பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். 53 லட்சம் கழிப்பிடங்கள் கட்டப்பட்டுள்ளது.

    தற்போது தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களும் திறந்தவெளி மலம் கழித்தல் இல்லாத மாவட்டங்களாக அறிவிக்கப்பட்டுள்ளது. இரண்டு ஊராட்சிகள் மட்டும் இன்னும் அறிவிக்கப்படாத நிலையில் அக்டோபர் 2-ந் தேதிக்குள் அந்த ஊராட்சிகளும் இந்த திட்டத்திற்குள் கொண்டு வரப்பட்டு திறந்த வெளி மலம் கழித்தல் இல்லாத மாநிலமாக தமிழகம் அறிவிக்கப்படும்.


    வருகிற ஜனவரி 1-ந்தேதி முதல் பிளாஸ்டிக் பயன்பாடு இல்லை என்ற தமிழக முதல்-அமைச்சரின் அறிவிப்புக்கு ஏற்ப பிளாஸ்டிக் பயன்பாட்டை முற்றிலும் ஒழிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. பிளாஸ்டிக்கிற்கு பதிலாக பனை மரத்தில் இருந்து தயாரிக்கப்படும் பொருட்களை உபயோகிக்க அனைவரும் முன்வர வேண்டும். இதற்கு தேவையான நடவடிக்கைகளை தமிழக அரசு எடுத்து வருகிறது.

    இவ்வாறு அவர் கூறினார். #MahatmaGandhi #SwachhataHiSeva #CleanIndia #SPVelumani
    தூய்மை இந்தியா திட்டத்தை செயல்படுத்துவதில் தமிழக அரசு சிறப்பாக செயல்பட்டு வருவதாக ஈஷா யோக மைய நிறுவனர் ஜகி வாசுதேவ் பாராட்டியுள்ளார். #SwachhataHiSeva #CleanIndia #JaggiVasudev #TNGovt
    கோவை:

    மகாத்மா காந்தியின் 150-வது பிறந்த நாள் அடுத்த மாதம் 2-ந்தேதி நாடு முழுவதும் கொண்டாடப்பட உள்ளது.

    இதனையொட்டி இன்று முதல் அடுத்த மாதம் 2-ந் தேதி வரை ‘தூய்மையே சேவை’ என்னும் விழிப்புணர்வு பிரசாரத்தை மத்திய அரசு மேற்கொண்டு உள்ளது.

    இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் ‘தூய்மை இந்தியா’ திட்டத்தில் இணைந்து மக்களிடம் தூய்மை குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி வரும் முக்கிய பிரமுகர்கள் மற்றும் குழுக்களுடன் பிரதமர் நரேந்திர மோடி இன்று வீடியோ கான்பரன்ஸ் மூலம் கலந்துரையாடினார்.

    தமிழகத்தில் கோவை, சேலம் உள்ளிட்ட இடங்களில் பிரதமர் மோடி வீடியோ கான்பரன்ஸ் மூலம் கலந்துரையாடும் நிகழ்ச்சி நடைபெற்றது. கோவை வெள்ளியங்கிரியில் உள்ள ஈஷா யோகா மையத்தில் பிரதமர் மோடியின் கலந்துரையாடலுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.

    இந்த நிகழ்ச்சி வெள்ளியங்கிரி மலை அடிவாரத்தில் அமைந்துள்ள 112 அடி ஆதியோகி சிலை முன்பு நடைபெற்றது. இதில் ஈஷா யோகா மைய நிறுவனர் சத்குரு, தமிழக உள்ளாட்சி மற்றும் கிராமப்புற மேம்பாட்டுத் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, கோவை கலெக்டர் ஹரிஹரன், மத்திய நீர் மற்றும் சுகாதாரத் துறை இணை செயலாளர்அருண் பரோகா, கூடுதல் தலைமை செயலாளர் ஹன்ஸ்ராஜ் வர்மா, நடிகர் விவேக் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். மேலும், சுற்றுப்புற கிராம மக்கள், சுகாதார பணியாளர்கள் மற்றும் ஈஷா தன்னார்வலர்கள் உட்பட நூற்றுக்கணக்கானோர் பங்கேற்றனர்.

    நிகழ்ச்சிக்கு முன்னதாக சத்குரு நிருபர்களிடம் கூறியதாவது:-

    உடல், வீடு மற்றும் சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்து கொள்ள வேண்டும் என்ற பண்பு நம் பாரத கலாச்சாரத்தில் பல ஆண்டுகளுக்கு முன்பே இருந்துள்ளது. ஹரப்பா, மொகஞ்சதரோ ஆகிய இடங்களில் ஆய்வு செய்த பிரிட்ஷ் தொல்லியல் துறையினர் அங்கு டிரைனேஜ் வசதி இருந்துள்ளதை கண்டு வியந்துள்ளனர். 5000 வருடங்களுக்கு முன்பு இதுபோன்று வேறு எந்த கலாச்சாரத்திலும் இந்த டிரைனேஜ் முறை உருவாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

    இதையடுத்து பல்வேறு படையெடுப்புகள் காரணமாக நமது தேசம் 20, 30 வருடங்களுக்கு ஏழ்மை நிலையில் இருந்தது. இதனால், இந்த பண்பு மறைந்து போனது.

    தற்போதும் நம் தேசத்தில் இருப்பவர்கள் உடலை சுத்தமாக வைத்துக்கொள்வதில் போதிய கவனம் செலுத்தி வருவதை நீங்கள் கவனிக்கலாம். காலையில் குளித்து முடித்த பிறகு தான் உணவு அருந்துவதோ அல்லது வேறு பணிகளுக்கு செல்கின்றனர். ஆனால், சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்துக்கொள்ளும் பண்பு மறைந்து போயுள்ளது.


    இந்நிலையில், இந்த பண்பை மீட்டெடுக்கும் வகையில் பிரதமர் நரேந்திர மோடி தூய்மை இந்தியா திட்டத்தை அறிமுகப்படுத்தி செயல்படுத்தி வருகிறார். இந்த திட்டத்தால் கடந்த 4 ஆண்டுகளில் நாட்டில் ஏராளமான மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன.

    குறிப்பாக, தூய்மை இந்தியா திட்டத்தை செயல்படுத்துவதில் தமிழக அரசு சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இதுவரை தமிழகத்தில் 50 லட்சம் கழிப்பறைகள் கட்டப்பட்டு இருப்பதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. அதுமட்டுமின்றி, பள்ளிகளில் உள்ள கழிப்பறைகளை தூய்மையாக வைத்து கொள்ளவும் புதிய கழிப்பறைகள் கட்டவும் ரூ.60 கோடியை ஒதுக்கி உள்ளது.

    தூய்மை இந்தியா திட்டத்தின் நோக்கத்தை நிறைவேற்ற பொதுமக்களும், தன்னார்வ அமைப்புகளும் அரசுடன் இணைந்து செயலாற்ற வேண்டும். அதன்படி, தமிழகத்தில் உள்ள 12 மாநகராட்சிகளில் 37 சிறு நகரங்களில் தூய்மை இந்தியா திட்டத்தை செயல்படுத்த ஈஷா அறக்கட்டளை சார்பில் சிட்டிசன் கமிட்டிக்கள் உருவாக்கப்பட்டுள்ளன. மேலும், வார்டு வாரியாக குழுக்கள் அமைக்கும் பணிகளும் நடைபெற்று வருகின்றன. அடுத்த 10 வருடங்களில் நம் தேசத்தை தூய்மையான தேசமாக மாற்ற வேண்டும்.

    இவ்வாறு சத்குரு கூறினார்.

    பின்னர் பிரதமர் மோடி தூய்மை இந்தியா திட்டத்தில் இணைந்துள்ள ஈஷா யோகா மைய நிறுவனர் சத்குருவுக்கு வீடியோ கான்பரன்ஸ் மூலம் வாழ்த்துக்களை தெரிவித்தார்.  #SwachhataHiSeva #CleanIndia  #JaggiVasudev #TNGovt
    மகாத்மா காந்தியின் 150-வது பிறந்தநாளை முன்னிட்டு புதிய தூய்மை திட்டத்தை பிரதமர் மோடி இன்று தொடங்கி வைக்கிறார். #PMModi #MahatmaGandhi #SwachhataHiSeva
    புதுடெல்லி:

    பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு தூய்மைக்கு மிகுந்த முக்கியத்துவம் அளித்து வருகிறது. இதற்காக கடந்த 2014-ம் ஆண்டு காந்தியடிகளின் பிறந்தநாளான அக்டோபர் 2-ம் தேதி ‘தூய்மை இந்தியா’ திட்டத்தை தொடங்கியது. இந்த திட்டத்தின் கீழ் பல்வேறு தூய்மைப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

    இதன் தொடர்ச்சியாக புதிய தூய்மை திட்டம் ஒன்றை செயல்படுத்த மத்திய அரசு திட்டமிட்டு உள்ளது. ‘தூய்மையே உண்மையான சேவை’ என பெயரிடப்பட்டு உள்ள இந்த திட்டத்தை பிரதமர் மோடி இன்று தொடங்கி வைக்கிறார்.



    இதுதொடர்பாக அவர் கூறுகையில், மகாத்மா காந்தி பிறந்த 150-வது ஆண்டை அடுத்த மாதம் (அக்டோபர்) 2-ம் தேதி நாம் தொடங்குகிறோம். பாபுவின் (காந்தியடிகள்) கனவை நிறைவேற்றும் வகையில் செயல்படுத்தப்பட்டு வரும், வரலாற்று சிறப்புமிக்க தூய்மை இந்தியா திட்டமும் அன்றைய தினத்தில் 4-வது ஆண்டை நிறைவு செய்கிறது. இந்த திட்டத்தின் கீழ் பணியாற்றி வரும் அனைவரையும் வணங்குகிறேன்.

    இதன் தொடர்ச்சியாக 15-ம் தேதி காலை 9.30 மணியளவில் தூய்மையே உண்மையான சேவை என்ற திட்டத்தை தொடங்கவுள்ளேன். அன்றைய தினம், தூய்மை இந்தியா திட்டத்தில் அயராது உழைத்து வரும் தொண்டர்களுடன் கலந்துரையாடுவதை நான் ஆவலுடன் எதிர்பார்த்து இருக்கிறேன்.

    இந்த திட்டத்தில் இணைந்து தூய்மை இந்தியா திட்டத்தை வலுப்படுத்துமாறு அனைவரையும் கேட்டுக் கொள்கிறேன். இதுவே மகாத்மா காந்திக்கு நாம் செலுத்தும் உண்மையான மரியாதை ஆகும் என தெரிவித்துள்ளார். #PMModi #MahatmaGandhi #SwachhataHiSeva 
    தூய்மை இந்தியா திட்டத்தின்கீழ் இதுவரை 8.39 கோடி வீடுகளில் கழிப்பறைகள் கட்டப்பட்டிருப்பதாக மத்திய குடிநீர் மற்றும் சுகாதார அமைச்சக செயலர் தெரிவித்துள்ளார். #SwachhBharatMission #HouseholdToilets
    புதுடெல்லி:

    மகாத்மா காந்தியின் 150-வது ஆண்டு பிறந்தநாள் கொண்டாட்டத்தையொட்டி செப்டம்பர் 29-ம் தேதி முதல் அக்டோபர் 2-ம் தேதிவரை சர்வதேச சுகாதார மாநாட்டை மத்திய அரசு நடத்த உள்ளது. இதில் 50க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த தலைவர்கள், அமைச்சர்கள் கலந்துகொள்ள உள்ளனர்.

    இந்த மாநாடு தொடர்பான விளக்கக் கூட்டம் டெல்லியில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பேசிய மத்திய குடிநீர் மற்றும் சுகாதார அமைச்சக செயலாளர் பரமேஸ்வரன் ஐயர், கிராமப்புற சுகாதார மேம்பாடு மற்றும் தூய்மை இந்தியா திட்டத்தின் பயன்கள் குறித்து விளக்கினார்.

    ‘தூய்மை இந்தியா திட்டத்தின்கீழ் 8.39 கோடிக்கும் அதிகமான வீடுகளில் கழிப்பறைகள் கட்டப்பட்டுள்ளன. இதன் காரணமாக, சுமார் 4.4 லட்சம் கிராமங்கள் திறந்தவெளி கழிப்பிடம் இல்லா கிராமங்களாக அறிவித்துள்ளன. தூய்மை இந்தியா திட்டம் தொடங்கியதில் இருந்து கிராமப்புற சுகாதார மேம்பாடு அதிகரித்துள்ளது. 2014ல் 550 மில்லியன் மக்கள் திறந்தவெளி கழிப்பிடத்தை பயன்படுத்திய நிலை இருந்தது. தற்போது அது 150 மில்லியனுக்கும் குறைவாக உள்ளது’ என்றார் பரமேஸ்வர ஐயர். #SwachhBharatMission #HouseholdToilets
    மகாத்மா காந்தியின் 150-வது பிறந்தநாளை முன்னிட்டு 15-ந் தேதி (சனிக்கிழமை) புதிய தூய்மை திட்டம் தொடங்க இருப்பதாக பிரதமர் மோடி கூறியுள்ளார். #PMModi #MahatmaGandhi #SwachhataHiSeva
    புதுடெல்லி

    பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு தூய்மைக்கு மிகுந்த முக்கியத்துவம் அளித்து வருகிறது. இதற்காக கடந்த 2014-ம் ஆண்டு காந்தியடிகளின் பிறந்தநாளான அக்டோபர் 2-ந் தேதி ‘தூய்மை இந்தியா’ திட்டத்தை தொடங்கியது. இந்த திட்டத்தின் கீழ் பல்வேறு தூய்மைப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.



    இதன் தொடர்ச்சியாக புதிய தூய்மை திட்டம் ஒன்றை செயல்படுத்த மத்திய அரசு திட்டமிட்டு உள்ளது. ‘தூய்மையே உண்மையான சேவை’ என பெயரிடப்பட்டு உள்ள இந்த திட்டத்தை பிரதமர் மோடி வருகிற 15-ந் தேதி (சனிக்கிழமை) தொடங்கிவைக்கிறார்.

    இது தொடர்பாக தனது டுவிட்டர் தளத்தில் அவர் கூறியிருப்பதாவது:-

    மகாத்மா காந்தி பிறந்த 150-வது ஆண்டை அடுத்த மாதம் (அக்டோபர்) 2-ந் தேதி நாம் தொடங்குகிறோம். பாபுவின் (காந்தியடிகள்) கனவை நிறைவேற்றும் வகையில் செயல்படுத்தப்பட்டு வரும், வரலாற்று சிறப்பு மிக்க தூய்மை இந்தியா திட்டமும் அன்றைய தினத்தில் 4-வது ஆண்டை நிறைவு செய்கிறது. இந்த திட்டத்தின் கீழ் பணியாற்றி வரும் அனைவரையும் நான் வணங்குகிறேன்.

    இதன் தொடர்ச்சியாக வருகிற 15-ந் தேதி காலை 9.30 மணியளவில் தூய்மையே உண்மையான சேவை என்ற திட்டத்தை நாம் தொடங்குகிறோம். அன்றைய தினம், தூய்மை இந்தியா திட்டத்தில் அயராது உழைத்து வரும் தொண்டர்களுடன் கலந்துரையாடுவதை நான் ஆவலுடன் எதிர்பார்த்து இருக்கிறேன்.

    இந்த திட்டத்தில் இணைந்து தூய்மை இந்தியா திட்டத்தை வலுப்படுத்துமாறு அனைவரையும் கேட்டுக்கொள்கிறேன். இதுவே மகாத்மா காந்திக்கு நாம் செலுத்தும் உண்மையான மரியாதை ஆகும்.

    இவ்வாறு பிரதமர் மோடி கூறியுள்ளார்.  #PMModi #MahatmaGandhi #SwachhataHiSeva 
    ×