search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பழ வியாபாரி"

    • சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே நங்கவள்ளி வெள்ளகரடு பகுதியை சேர்ந்தவர் முத்து. இவர் கம்ப்ரசர் வாகனம் வைத்து தொழில் செய்து வருகிறார்.
    • ஆத்திர மடைந்த சுந்தரம் கடையில் பழம் வெட்டுவதற்காக வைத்திருந்த சூரி கத்தியால் கண்ணம்மாளை கை, மார்பு, வயிறு பகுதியில் சரமாரியாக குத்தினார்.

    மேட்டூர்:

    சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே நங்கவள்ளி வெள்ளகரடு பகுதியை சேர்ந்தவர் முத்து. இவர் கம்ப்ரசர் வாகனம் வைத்து தொழில் செய்து வருகிறார். இவரது மனைவி கண்ணம்மாள் (37). இவர் தாரமங்கலம் அருகே பவளத்தானூரில் பழக்கடை வைத்து நடத்தி வருகிறார்.

    கண்ணம்மாளின் கடைக்கு அருகே சின்னப்பம் பட்டியை சேர்ந்த சுந்தரம் என்பவரும் பழக்கடை வைத்துள்ளார். இதையடுத்து இருவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு கள்ளத்தொடர்பாக மாறியது.

    இந்த நிலையில் கண்ணம்மாளிடம் இருந்து முத்துவின் கம்ப்ரசர் வாகனத்தின் ஆர்.சி. புக்கை வாங்கிய சுந்தரம் அதை அடமானம் வைத்து பணம் வாங்கியுள்ளார். ஆனால் நீண்ட நாட்கள் ஆகியும் ஆர்.சி. புக்கை திரும்ப தராததால் கண்ணம்மாள் புக்கை திரும்ப வாங்கி தரும்படி சுந்தரத்திடம் வற்புறுத்தி வந்துள்ளார்.

    பலமுறை கேட்டும் புக்கை திருப்பு தராததால் கோபமடைந்த கண்ணம்மாள் நேற்று நங்வள்ளி பகுதிக்கு வந்த சுந்தரத்திடம் ஆர்.சி. புக்கை திரும்ப தரவில்லை என்றால் இதுகுறித்து தாரமங்கலம் போலீசில் புகார் அளிக்க போவதாக மிரட்டியுள்ளார். இதனால் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.

    அப்போது ஆத்திர மடைந்த சுந்தரம் கடையில் பழம் வெட்டுவதற்காக வைத்திருந்த சூரி கத்தியால் கண்ணம்மாளை கை, மார்பு, வயிறு பகுதியில் சரமாரியாக குத்தினார். இதில் படுகாயம் அடைந்த கண்ணம்மாள் அலறியபடி ரத்த வெள்ளத்தில் கீழே விழுந்தார். இதை கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்ததால் சுந்தரம் அங்கி ருந்து தப்பியோடிவிட்டார்.

    பின்னர் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த கண்ணம்மாளை அங்கிருந்தவர்கள் மீட்டு சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து நங்கவள்ளி போலீசாருக்கு தகவல் அளித்தனர். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து தப்பியோடிய சுந்தரத்தை தீவிரமாக தேடி வருகின்றனர்.

    • வேன்கள் நேருக்கு நேர் மோதல்; பழ வியாபாரி பரிதாபமாக இறந்தார்.
    • அபிராமம் போலீசார் வழக்குப்பதிவு செய்து வேன் டிரைவர் ஆனந்தராஜ் என்பவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கமுதி

    ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே உள்ள ஒச்சதேவன் கோட்டை கிராமத்தை சேர்ந்தவர் செந்தூர பாண்டி (வயது28). பழவியாபாரியான இவர் நேற்று இரவு மதுரையில் இருந்து பழங்களை வாங்கி கொண்டு சரக்கு வேனில் ஊருக்கு புறப்பட்டார். அவருடன் அவரது நண்பர் குமரசக்தி என்பவரும் உடன் வந்தார்.

    அபிராமம் அருகே வந்து கொண்டிருந்த போது மதுரை நோக்கி வந்து கொண்டிருந்த மற்றொரு சரக்கு வேன் பழங்கள் ஏற்றி வந்த வேன் மீது நேருக்கு நேர் மோதியது. இதில் 2 வேன்களின் முன்பகுதியும் பலத்த சேதமடைந்தது.

    இந்த விபத்தில் வேனின் முன்புறம் அமர்ந்துள்ள செந்தூர பாண்டி, குமரசக்தி ஆகியோர் படுகாய மடைந்தார். உயிருக்கு ஆபத்தான நிலையில் மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு செந்தூர பாண்டி கொண்டு செல்லப்பட்டார்.

    ஆனால் அவர் வழியிலேயே பரிதாபமாக இறந்தார். குமரசக்தி ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த விபத்து தொடர்பாக அபிராமம் போலீசார் வழக்குப்பதிவு செய்து வேன் டிரைவர் ஆனந்தராஜ் என்பவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • 7-வது வீதியில் பழங்கள் விற்பனை செய்து கொண்டு இருந்தார்.
    • 2 பேர் கண்ணனிடம் மது குடிக்க பணம் கேட்டனர். ஆனால் அவர் பணம் கொடுக்க மறுத்து விட்டார்.

    கோவை

    கோவை ரத்தினபுரி அருகே உள்ள சங்கனூர் ரோட்டை சேர்ந்தவர் கண்ணன் (வயது 49). பழ வியாபாரி. சம்பவத்தன்று இவர் 7-வது வீதியில் பழங்கள் விற்பனை செய்து கொண்டு இருந்தார். அப்போது அந்த வழியாக வந்த 2 பேர் கண்ணனிடம் மது குடிக்க பணம் கேட்டனர். ஆனால் அவர் பணம் கொடுக்க மறுத்து விட்டார்.

    இதனால் ஆத்திரம் அடைந்த அவர்கள் கத்தியை காட்டி மிரட்டி அவர் பாக்கெட்டில் வைத்து இருந்த ரூ.500 பணத்தை பறித்து தப்பிச் சென்றனர். இது குறித்து கண்ணன் ரத்தினபுரி போலீசில் புகார் செய்தார்.


    புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி பழ வியாபாரியிடம் கத்தியை காட்டி மிரட்டி பணத்தை பறித்து சென்ற கண்ணப்ப நகரை சேர்ந்த பெயிண்டர்கள் ராஜ்குமார் (39), ரமேஷ் (43) ஆகியோரை கைது செய்தனர். பின்னர் 2 பேரையும் கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர். 

    ×