search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோவையில் பழ வியாபாரியிடம் பணம் பறித்த 2 பேர் கைது
    X

    கோவையில் பழ வியாபாரியிடம் பணம் பறித்த 2 பேர் கைது

    • 7-வது வீதியில் பழங்கள் விற்பனை செய்து கொண்டு இருந்தார்.
    • 2 பேர் கண்ணனிடம் மது குடிக்க பணம் கேட்டனர். ஆனால் அவர் பணம் கொடுக்க மறுத்து விட்டார்.

    கோவை

    கோவை ரத்தினபுரி அருகே உள்ள சங்கனூர் ரோட்டை சேர்ந்தவர் கண்ணன் (வயது 49). பழ வியாபாரி. சம்பவத்தன்று இவர் 7-வது வீதியில் பழங்கள் விற்பனை செய்து கொண்டு இருந்தார். அப்போது அந்த வழியாக வந்த 2 பேர் கண்ணனிடம் மது குடிக்க பணம் கேட்டனர். ஆனால் அவர் பணம் கொடுக்க மறுத்து விட்டார்.

    இதனால் ஆத்திரம் அடைந்த அவர்கள் கத்தியை காட்டி மிரட்டி அவர் பாக்கெட்டில் வைத்து இருந்த ரூ.500 பணத்தை பறித்து தப்பிச் சென்றனர். இது குறித்து கண்ணன் ரத்தினபுரி போலீசில் புகார் செய்தார்.


    புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி பழ வியாபாரியிடம் கத்தியை காட்டி மிரட்டி பணத்தை பறித்து சென்ற கண்ணப்ப நகரை சேர்ந்த பெயிண்டர்கள் ராஜ்குமார் (39), ரமேஷ் (43) ஆகியோரை கைது செய்தனர். பின்னர் 2 பேரையும் கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.

    Next Story
    ×