search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பள்ளி மாணவி கற்பழிப்பு"

    • விக்கிரவாண்டி அருகே பள்ளி மாணவி பலாத்கார வழக்கில் 2 பேரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    • விக்கிரவாண்டி மற்றும் விழுப்புரம் மகளிர் போலீசார் 7 பிரிவில் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    விக்கிரவாண்டி:

    விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி பகுதியை சேர்ந்த 17 வயது மாணவர் அங்குள்ள அரசு பள்ளியில் பிளஸ்-2 படித்து வருகிறார். இவரும் அதே பள்ளியில் பிளஸ்-2 படித்து வரும் மாணவியும் காதலித்து வந்தனர்.

    இவர்கள் கடந்த 25-ந்தேதி மாலை கப்பியாம் புலியூர் ஏரிக்கரையில் பேசிக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த 3 பேர் திடீரென காதலனை கத்தியால் வெட்டினர்.

    இதில் அவர் மயங்கி விழுந்தார். பின்னர் கத்தி முனையில் காதலன் கண் எதிரே அந்த மாணவியை 3 பேரில் ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.

    பின்னர் 3 பேரும் மாணவன்-மாணவியிடம் இருந்த செல்போன், வெள்ளி கொலுசு, மோதிரம் ஆகியவற்றை பறித்து சென்றனர்.

    இதுகுறித்து விக்கிரவாண்டி மற்றும் விழுப்புரம் மகளிர் போலீசார் 7 பிரிவில் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இச்சம்பவம் தொடர்பாக 8 தனிப்படை அமைத்து அதில் தொடர்புடையவர்களை தேடி வந்தனர். இந்த தனிப்படை போலீசார் ஏரிக்கரையில் இருந்து சுமார் 3 கிலோ மீட்டர் தூரம் வரையில் உள்ள செல்போன் சிக்னல்களை ஆய்வு செய்தனர்.

    அதில் விக்கிரவாண்டி அருகே உள்ள மூங்கில்பட்டு கிராமத்தை சேர்ந்த வாலிபர் மீது போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதையடுத்து அந்த வாலிபரை பிடித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    அவர் கொடுத்த தகவலின் அடிப்படையில் சென்னையில் இருந்த ஒருவரையும் பிடித்து வந்து தனிப்படை போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • கல்லூரி மாணவர் ஜார்ஜ், மாணவியிடம் பாலியல் ரீதியாக அத்துமீறியதை அறிந்து மாணவியின் தாய் அதிர்ச்சி அடைந்தார்.
    • விருகம்பாக்கம் அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்யப்பட்டது.

    போரூர்:

    மதுரவாயல் சத்யமூர்த்தி நகர் பகுதியை சேர்ந்த 15வயது மாணவி அமைந்தகரையில் உள்ள அரசு பள்ளியில் 11-ம் வகுப்பு படித்து வருகிறார்.

    இவருக்கு கடந்த ஆண்டு திருவள்ளூர் குத்தம்பாக்கம் பகுதியை சேர்ந்த கல்லூரி மாணவரான ஜார்ஜ் (19) என்பவருடன் "இன்ஸ்டாகிராம்" மூலம் பழக்கம் ஏற்பட்டது. இதையடுத்து இருவரும் நெருங்கி பழகி காதலித்து வந்ததாக தெரிகிறது.

    மாணவி வீட்டில் தனியாக இருந்தபோது அவரை அடிக்கடி மிரட்டி ஜார்ஜ் பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்டுள்ளார். மேலும் அவர் மாணவியிடம் இருந்து அடிக்கடி பணம் வாங்கி ஜாலியாக செலவு செய்து வந்தார்.

    இந்த நிலையில் கல்லூரி மாணவர் ஜார்ஜ், மாணவியிடம் பாலியல் ரீதியாக அத்துமீறியதை அறிந்து மாணவியின் தாய் அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து விருகம்பாக்கம் அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்யப்பட்டது.

    இன்ஸ்பெக்டர் கண்ணகி விசாரணை நடத்தியபோது கல்லூரி மாணவர் ஜார்ஜ், மாணவியை மிரட்டி பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்டு வந்தது தெரிய வந்தது.

    கடந்த சில நாட்களுக்கு முன்பு ஜார்ஜ், கல்லூரி கட்டணம் செலுத்த வேண்டும் என்று மாணவியிடம் கூறி ரூ.15ஆயிரம் பணம் கேட்டுள்ளார். இதையடுத்து மாணவி தனது தாயிடம் பணம் கேட்டு தொல்லை கொடுத்தபோது தான் கல்லூரி மாணவர் ஜார்ஜ்வுடன் மகளுக்கு பழக்கம் ஏற்பட்டதும் இதை பயன்படுத்தி அடிக்கடி வீட்டுக்கு வந்து அவர் மகளை மிரட்டி பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதும் தெரியவந்தது.

    இதன் உச்சகட்டமாக கடந்த 2 நாட்களுக்கு முன்பு மாணவியின் வீட்டிற்கு வந்த ஜார்ஜ், மாணவியிடம் அவரது தாயின் கண் முன்னே தகாத முறையில் நடந்துள்ளார். இதை தட்டிக் கேட்ட மாணவியின் தாய்க்கு அவர் மிரட்டல் விடுத்து தப்பி சென்றதும் விசாரணையில் தெரியவந்தது.

    இதையடுத்து போக்சோ மற்றும் மிரட்டல் ஆகிய பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப் பதிவு செய்து கல்லூரி மாணவர் ஜார்ஜை கைது செய்தனர். பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    • பிரசவ வலி ஏற்பட்டு மாணவி ஆஸ்பத்திரிக்கு சென்ற போதுதான் அவரது நிலை வெளியில் தெரிந்தது.
    • மாணவியின் சொந்த ஊர் கடலூர் ஆகும். அவரது பெற்றோர் கூலித்தொழிலாளர்கள்.

    திருவொற்றியூர்:

    திருவொற்றியூர், ராமகிருஷ்ணா நகர், காந்தி தெருவை சேர்ந்த 15 வயது சிறுமி வண்ணாரப்பேட்டை எம்.சி.ரோட்டில் உள்ள தனியார் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வருகிறார்.

    நேற்றுமாலை மாணவிக்கு திடீரென வயிறு வலி ஏற்பட்டது. இதையடுத்து அவரை ராயபுரம் ஆர்.எஸ்.ஆர்.எம். அரசு ஆஸ்பத்திரிக்கு பரிசோதனைக்காக தாய் அழைத்துச் சென்றார்.

    அப்போது மாணவி 10 மாதம் கர்ப்பமாக இருப்பதை கண்டு டாக்டர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து மாணவியின் பெற்றோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதற்குள் மாணவிக்கு பிரசவ வலி ஏற்பட்டது.

    உடனடியாக அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. சிறிது நேரத்தில் மாணவிக்கு ஆண் குழந்தை பிறந்தது. மகள் இதுநாள் வரை கர்ப்பமாக இருப்பது தெரியாமல் இருந்த தாய் அதிர்ச்சியில் உறைந்து கதறி துடித்தார்.

    இதுகுறித்து திருவொற்றியூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் விரைந்து வந்து மாணவியிடம் விசாரணை நடத்தினர்.

    அப்போது கடந்த பத்து மாதங்களுக்கு முன்பு வீட்டுக்கு வந்த சித்தியின் மகன் முகேஷ் என்பவர் முறைதவறி மாணவியுடன் தகாத முறையில் நடந்து உள்ளார். இதில் கர்ப்பமான மாணவி இதுபற்றி பெற்றோருக்கு தெரியாமல் மறைத்து வந்துள்ளார்.

    மேலும் பள்ளிக்கும் வழக்கம்போல் சென்று வந்தார். இதனால் அவர் மீது பள்ளியிலும் மற்றும் பெற்றோருக்கும் சந்தேகம் ஏற்படவில்லை.

    இந்த நிலையில் பிரசவ வலி ஏற்பட்டு மாணவி ஆஸ்பத்திரிக்கு சென்ற போதுதான் அவரது நிலை வெளியில் தெரிந்தது. மாணவியின் சொந்த ஊர் கடலூர் ஆகும். அவரது பெற்றோர் கூலித்தொழிலாளர்கள்.

    அவர்கள் திருவொற்றியூரில் தங்கி வேலைக்கு சென்று வருகிறார்கள். மாணவி அவர்களுக்கு ஒரே மகள் ஆவார். மகளின் நிலையால் பெற்றோர் துடித்து போய் உள்ளனர்.

    இந்தநிலையில் மாணவியை கர்ப்பமாக்கிய கடலூர் மாவட்டத்தை சேர்ந்த உறவினரான முகேஷ் என்பவர் மீது போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து உள்ளனர். தலைமறைவாக உள்ள முகேசை போலீசார் தேடி வருகின்றனர்.

    • கற்பழிப்பு சம்பவம் குறித்து மாணவியோ, அவரது பெற்றோரோ தங்களிடம் தெரிவிக்கவில்லை என பள்ளி நிர்வாகிகள் தெரிவித்தனர்.
    • சம்பவம் ஜூலை மாதம் நடந்திருக்கலாம் எனவும் கூறினர்.

    புதுடெல்லி:

    டெல்லி போலீஸ் நிலையத்தில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு 11 வயது பள்ளி மாணவி பெற்றோருடன் சென்று ஒரு புகார் கொடுத்தார்.

    அதில் பள்ளி கழிவறையில் மூத்த மாணவர்கள் 2 பேர் தன்னை கற்பழித்ததாகவும், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கூறியிருந்தார்.

    இப்புகார் பற்றி டெல்லி போலீசார் வழக்கு பதிவு செய்தனர். மேலும் சம்பவம் நடந்த பள்ளிக்கு சென்றும் விசாரணை மேற்கொண்டனர்.

    இதில் கற்பழிப்பு சம்பவம் குறித்து மாணவியோ, அவரது பெற்றோரோ தங்களிடம் தெரிவிக்கவில்லை என பள்ளி நிர்வாகிகள் தெரிவித்தனர். மேலும் இந்த சம்பவம் ஜூலை மாதம் நடந்திருக்கலாம் எனவும் கூறினர்.

    இந்த தகவல் வெளியானதும் டெல்லி மகளிர் ஆணையம் கடும் கண்டனம் தெரிவித்தது.

    மகளிர் ஆணைய தலைவி சுவாதி மாலிவால் கூறும்போது, இந்த சம்பவத்தை மூடி மறைக்க பள்ளி நிர்வாகம் முயற்சித்து உள்ளது. பாதிக்கப்பட்ட மாணவி, தனது வகுப்பு ஆசிரியையிடம் கூறியுள்ளார்.

    ஆனால் அவர்கள் இதனை போலீசாருக்கு தெரிவிக்காமல் மறைத்து உள்ளனர். எனவே இதுபற்றி முழுமையாக விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும், மகளிர் ஆணையத்திற்கு விசாரணை அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் எனக்கூறினார். இச்சம்பவம் டெல்லியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • சம்பவத்தன்று நைசாக மாணவியிடம் பேசி மோட்டார் சைக்கிளில் தனுஷ் தனது வீட்டுக்கு அழைத்து சென்றார். அங்கு அடைத்து வைத்து பாலியல் பலாத்காரம் செய்தார்.
    • இது குறித்து வெளியே கூறினால், உன்னையும், உன் குடும்பத்தினரையும் கொன்று விடுவதாக மிரட்டியுள்ளார்.

    பண்ருட்டி:

    கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே பொதியடிக்குப்பத்தை சேர்ந்தவர் தனுஷ் (வயது 21). இவர் பண்ருட்டி பஸ் நிலையம் பகுதியில் பூக்கடையில் வேலை பார்த்து வருகிறார்.

    இவருக்கும், அரசடிக்குப்பம் கிராமத்தை சேர்ந்த பிளஸ்-2 மாணவிக்கும் பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் அவர்களுக்குள் காதலாக மாறியது. அடிக்கடி தனுஷ், அந்த மாணவியிடம் ஆசைவார்த்தை கூறி பழகி வந்துள்ளார்.

    சம்பவத்தன்று நைசாக மாணவியிடம் பேசி மோட்டார் சைக்கிளில் தனுஷ் தனது வீட்டுக்கு அழைத்து சென்றார். அங்கு அடைத்து வைத்து பாலியல் பலாத்காரம் செய்தார். இது குறித்து வெளியே கூறினால், உன்னையும், உன் குடும்பத்தினரையும் கொன்று விடுவதாக மிரட்டியுள்ளார்.

    நடந்த சம்பவம் குறித்து மாணவி தனது தாயிடம் கூறி அழுதுள்ளார். இது குறித்து மாணவியின் தாய் பண்ருட்டி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தார். புகார் மனுவில், தனது மகளை கடத்தி சென்று பாலியல் பலாத்காரம் செய்த தனுசை கைது செய்ய வேண்டும் என்று கூறியுள்ளார்.

    அதன்பேரில் போலீசார் தனுஷ் மீது போக்சோ பிரிவில் வழக்குப்பதிவு செய்து தேடிவருகிறார்கள்.

    • மாணவியை பின் தொடர்ந்து சென்ற பள்ளி காவலாளி திடீரென அவள் கண்ணையும், வாயையும் பொத்தி கழிவறைக்கு தூக்கி சென்றார்.
    • சம்பவம் குறித்து மாணவி அளித்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி காவலாளியை கைது செய்தனர்.

    போபால்:

    மத்திய பிரதேச மாநிலம் போபால் அருகே கோபிஷா என்ற இடத்தில் உள்ள பள்ளியில் 4-ஆம் வகுப்பு படித்து வரும் மாணவி சம்பவத்தன்று மதிய உணவு இடைவெளியில் கழிவறைக்கு சென்றாள். அப்போது பின் தொடர்ந்து சென்ற பள்ளி காவலாளி லட்சுமி நாராயணன் திடீரென அவள் கண்ணையும், வாயையும் பொத்தி கழிவறைக்கு தூக்கி சென்றார்.

    பின்னர் அவர் மாணவியை பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் பற்றி அந்த மாணவி தனது ஆசிரியையிடம் கண்ணீர் மல்க கூறினாள். தன்னை மஞ்சள் சட்டை அணிந்த ஒருவர் தான் சீரழித்தாக தெரிவித்தாள்.

    இதுதொடர்பாக போலீசுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் அங்கு வந்து பள்ளியில் சம்பவம் நடந்த அன்று மஞ்சள் சட்டை அணிந்தவர் குறித்து விசாரித்தனர். அப்போது பள்ளி காவலாளி லட்சுமி நாராயணன் அந்த நிற சட்டை அணிந்தது தெரியவந்தது.

    இதையடுத்து போலீசார் அவரை பிடித்து விசாரித்தனர். விசாரணையில் அவர் மாணவியை பாலியல் பலாத்காரம் செய்ததை ஒப்புக்கொண்டார். போலீசார் அவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • சம்பவத்தில் தொடர்புடைய மாணவி மற்றும் மாணவர்கள் வெவ்வேறு சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால், அப்பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
    • பள்ளி வளாகத்திற்குள் மாணவியை மிரட்டிய வாலிபர்கள் யார்? அவருக்கு வீடியோவை அனுப்பியது யார்? என்பது குறித்துபோலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

    திட்டக்குடி:

    கடலுார் மாவட்டம் திட்டக்குடி பகுதியைச் சேர்ந்த 10-ம் வகுப்பு படிக்கும் 15 வயது மாணவியை, அவருடன் படிக்கும் 3 சக மாணவர்கள் கூட்டுபலாத்காரம் செய்தனர். அதை வீடியோ எடுத்து சிலருக்கு அனுப்பினர்.

    இதுகுறித்து மாணவியின் தாய் அளித்த புகாரின் பேரில் 4 சிறுவர்களை போக்சோ சட்டத்தின் கீழ் ஆவினங்குடி போலீசார் கைது செய்தனர்.

    கடந்த 6-ந் தேதி பள்ளியில் இருந்த மாணவியிடம், 2 வாலிபர்கள் மாணவியின் ஆபாச வீடியோவை காட்டி மிரட்டினர். இதனால் அந்த மாணவிக்கும், அந்த வாலிபர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டது.

    இதனை பார்த்த பள்ளி மாணவர்கள் மற்றும் கிராம பொதுமக்கள் சிலர் பார்த்து போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் வருவதற்குள்அந்த வாலிபர்கள் தப்பி ஓடிவிட்டனர்.

    இதையடுத்து பள்ளி ஆசிரியர்களுக்கும், பெற்றோர்களுக்கும் வீடியோ விவகாரம் தெரிந்ததால், போலீசில் புகார் அளிக்கப்பட்டது. போலீசார் துரிதமாக செயல்பட்டு சம்பவத்தில் தொடர்புடைய 4 சிறுவர்களை கைது செய்தனர்.

    எனினும் பள்ளி வளாகத்திற்குள் வந்து மாணவியை மிரட்டிய வாலிபர்கள் யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர்கள்? என விசாரித்து அவர்களையும் கைது செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இச்சம்பவத்தால் அந்த பள்ளிக்கு விடுமுறை அளிக்கப்பட்டது.

    சம்பவத்தில் தொடர்புடைய மாணவி மற்றும் மாணவர்கள் வெவ்வேறு சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால், அப்பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. பள்ளி வளாகத்திற்குள் மாணவியை மிரட்டிய வாலிபர்கள் யார்? அவருக்கு வீடியோவை அனுப்பியது யார்? என்பது குறித்துபோலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

    ×