search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பள்ளி தாளாளர்"

    • சந்தேகம் அடைந்த தாளாளர் செல்வராஜ், பள்ளி ஊழியர்களிடம் இத்தகவலை கூறினார்.
    • போலீசார் கனகசபையை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

    கடலூர்:

    வடலூர் வள்ளலார் குருகுலம் மேல்நிலைப் பள்ளியின் தாளாளராக செல்வராஜ் பணியாற்றி வருகிறார். விருந்தாசலம் கொட்டாரம் குருநாதன் மகன் கனகசபை (வயது 45) என்பவர் தன்னை வார பத்திரிகையின் மாவட்ட நிருபர் என்றும், மணி என்பவர் மனித உரிமை அமைப்பின் செயலாளர் எனவும், பூண்டியாங்குப்பம் நல்லி மகன் ராமலிங்கம் மாவட்ட விவசாய சங்கத்தவைவர் எனவும் கூறிக்கொண்டு செல்வராஜிடம் சென்று பள்ளியில் உள்ள சில ஆவணங்களை கேட்டுள்ளனர்.

    சந்தேகம் அடைந்த தாளாளர் செல்வராஜ், பள்ளி ஊழியர்களிடம் இத்தகவலை கூறினார்.இது குறித்து ஊழியர்கள் அவர்களிடம் விசாரித்த போது கார்த்திகேயன் என்பவரை 3 பேரும் கையால் அடித்து தாக்கியுள்ளனர். இது குறித்து வடலூர் போலிசில் பள்ளி நிர்வாகத்தால் புகார் அளிக்கப்பட்டது. இதன் மீது விசாரணை நடத்திய போலீசார் கனகசபையை கைது செய்து விசாரித்து வருகின்றனர். மேலும், தலைமறைவாகியுள்ள ராமலிங்கம், மணி ஆகியோரை தேடி வருகின்றனர்.

    • கோவாவில் தலைமறைவாக இருந்த வினோத்தை தனிப்படை போலீசார் கைது செய்தனர்.
    • பள்ளி தாளாளர் வினோத் மீது போக்சோ சட்டத்தின் கீழ் 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு.

    ஆவடியை அடுத்த திருநின்றவூரில் உள்ள தனியார் பள்ளியின் தாளாளர் வினோத் (34). இவர், அந்த பள்ளியில் 12-ம் வகுப்பு படிக்கும் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது.

    இதனால் அவர்மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி நேற்று முன்தினம் மாணவ-மாணவிகள், வகுப்புகளை புறக்கணித்து தங்களது பெற்றோருடன் பள்ளியில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இதையடுத்து, திருநின்றவூர் போலீசார், பள்ளி தாளாளர் வினோத் மீது போக்சோ சட்டத்தின் கீழ் 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்தனர். மேலும் தலைமறைவாக இருந்த அவரை தனிப்படை போலீசார் தேடி வந்தனர்.

    இதையடுத்து, பாலியல் தொல்லை புகாரில் தலைமறைவாக இருந்த பள்ளி தாளாளர் வினோத்தை போலீசார் கைது செய்தனர். கோவாவில் தலைமறைவாக இருந்த வினோத்தை தனிப்படை போலீசார் கைது செய்தனர்.

    இந்நிலையில், பாலியல் குற்றச்சாட்டில் கைதான பள்ளி தாளாளர் வினோத்துக்கு 15 நாள் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க திருவள்ளூர் மாவட்ட மகிளா நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    • வினோத்தை கைது செய்ய பட்டாபிராம் உதவி கமிஷனர் சதாசிவம் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது.
    • கோவாவில் தலைமறைவாக இருந்த வினோத்தை தனிப்படை போலீசார் கைது செய்தனர்.

    ஆவடி:

    ஆவடியை அடுத்த திருநின்றவூரில் உள்ள தனியார் பள்ளியின் தாளாளர் வினோத் (34). இவர், அந்த பள்ளியில் 12-ம் வகுப்பு படிக்கும் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. இதனால் அவர்மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி நேற்று முன்தினம் மாணவ-மாணவிகள், வகுப்புகளை புறக்கணித்து தங்களது பெற்றோருடன் பள்ளியில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இதையடுத்து, திருநின்றவூர் போலீசார், பள்ளி தாளாளர் வினோத் மீது போக்சோ சட்டத்தின் கீழ் 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்தனர். மேலும் தலைமறைவாக இருந்த அவரை தனிப்படை போலீசார் தேடி வந்தனர்.

    இந்நிலையில், பாலியல் தொல்லை புகாரில் தலைமறைவாக இருந்த பள்ளி தாளாளர் வினோத்தை போலீசார் கைது செய்துள்ளனர். கோவாவில் தலைமறைவாக இருந்த வினோத்தை தனிப்படை போலீசார் கைது செய்தனர்.

    • மாணவிகளின் பாலியல் புகார் தொடர்பாக பள்ளி தாளாளர் வினோத் மீது 4 பிரிவின் கீழ் திருநின்றவூர் போலீசார் வழக்கு பதிவு செய்து உள்ளனர்.
    • பள்ளி தாளாளர் வினோத் கதறி அழுதபடி கொசு மருந்தை வாய்க்குள் அடித்து தற்கொலைக்கு முயன்ற வீடியோ தற்போது வெளியாகி உள்ளது.

    திருநின்றவூர்:

    ஆவடியை அடுத்த திருநின்றவூர் இ.பி. காலனியில் தனியார் மெட்ரிக்குலேசன் மேல்நிலைப்பள்ளி உள்ளது. இங்கு சுமார் 1500க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் படித்து வருகிறார்கள்.

    பள்ளியின் தாளாளராக வினோத் (வயது 34) உள்ளார். இவர் பள்ளியில் படிக்கும் பிளஸ்-2 மாணவிகளுக்கு கவுன்சிலிங் மற்றும் சிறப்பு வகுப்பு தொடர்பாக பேசுவதாக அழைத்து பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்து வந்ததாக தெரிகிறது.

    இதனால் அதிர்ச்சி அடைந்த மாணவிகள் இதுகுறித்து பெற்றோரிடம் தெரிவித்தனர். அவர்கள் பள்ளி நிர்வாகத்திடம் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. பள்ளி தாளாளர் வினோத்தின் பாலியல் தொல்லை எல்லை மீறி சென்றதாக தெரிகிறது.

    இதனால் ஆத்திரம் அடைந்த பள்ளி மாணவ-மாணவிகள் மற்றும் அவர்களது பெற்றோர் சுமார் 500க்கும் மேற்பட்டோர் நேற்று காலை பள்ளியை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் பள்ளி முன்பு மறியலிலும் ஈடுபட முயன்றனர்.

    மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த பள்ளி தாளாளர் வினோத்தை உடனே கைது செய்ய வேண்டும் என்று கூறி பள்ளியில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    அவர்களிடம் மாவட்ட கல்வி அலுவலர் (தனியார் பள்ளிகள்) ராதாகிருஷ்ணன், தாசில்தார் வெங்கடேசன் மற்றும் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். மாலை 3 மணிக்கு பின்னர் மாணவிகளும், அவர்களது பெற்றோரும் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

    பள்ளிக்கு 3 நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டது. வருகிற திங்கட்கிழமை முதல் பள்ளி செயல்படும் என்று அறிவிக்கப்பட்டது.

    மாணவிகளின் பாலியல் புகார் தொடர்பாக பள்ளி தாளாளர் வினோத் மீது 4 பிரிவின் கீழ் திருநின்றவூர் போலீசார் வழக்கு பதிவு செய்து உள்ளனர். தற்போது வினோத் தலைமறைவாக உள்ளார்.

    இதையடுத்து வினோத்தை கைது செய்ய பட்டாபிராம் உதவி கமிஷனர் சதாசிவம் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு உள்ளது.

    தற்போது வினோத் கோவாவில் பதுங்கி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. அவரை பிடிக்க தனிப்படை போலீசார் விரைந்து உள்ளனர். அவரிடம் நடத்தப்படும் விசாரணைக்கு பின்னரே பாலியல் குற்றச்சாட்டில் உண்மை நிலவரம் தெரிய வரும்.

    இதற்கிடையே தலைமறைவாக உள்ள பள்ளி தாளாளர் வினோத் கதறி அழுதபடி கொசு மருந்தை வாய்க்குள் அடித்து தற்கொலைக்கு முயன்ற வீடியோ தற்போது வெளியாகி உள்ளது.

    இந்த வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. அதில் வினோத் மனமுடைந்து பேசுகிறார்.

    மாணவ-மாணவிகள் நன்றாக வரவேண்டும் (பெயர்களை குறிப்பிட்டு பேசுகிறார்). மற்றவர்களின் பெயர்களை குறிப்பிடவில்லை என்று கவலைப்பட வேண்டாம். யாரையும் நான் தவறாக நினைத்ததில்லை. அனைவர் மீதும் அன்பு உண்டு. ஆனால் என் மீது இப்படி சொல்வீர்கள் என்று நினைக்கவில்லை. நான் அழ மாட்டேன் என்று நினைக்காதீர்கள். உடைந்து விட்டேன். நான் இன்னும் சாகவில்லை. (கதறி அழுகிறார்). அப்பா நீங்கள் தவறாக நினைக்க வேண்டாம். நான் தவறு செய்யவில்லை.

    ஆசிரியர்கள், கணித ஆசிரியர் (பெயர்கள் குறிப்பிட்டு) நீங்கள் கிடைத்தது வரம். எல்லோரும் முக்கிய மாணவர்கள். எதுவும் ஆகாது. எனது மாணவர்களை நான் நம்புகிறேன். அதற்கு பிறகு என்னேவோ...

    உங்களுக்காகதான் நான் உள்ளேயே வந்தேன். நீங்கள் அனைவரும் நல்ல மாணவர்கள். யாரோ ஒருவர் கைப்பாவைக்காக உங்களது வாழ்க்கையை கெடுத்து கொள்ளாதீர்கள். வாழ்க்கை போனால் வராது தம்பி. இதை புரிந்து கொள்ளுங்கள். கூட இருப்பவர்கள் பேசுவார்கள். ஆசிரியர்கள் தூண்டி விடுவார்கள். இது நமக்கு வேண்டாம். தாய், தந்தை தான் முக்கியம். அவர்கள் தான் கடைசி வரை வருவார்கள். அவர்கள் சொல்வதை கேளுங்கள்.

    வேறு எதுவும் பேசுவதற்கு இல்லை. (அப்போது கொசு மருந்து ஸ்பிரேவை வாய்க்குள் அடிக்கிறார்) நான் போகிறேன். கண்டிப்பாக பிழைக்க மாட்டேன். அனுதாபம் எல்லாம் கிடையாது. நான் நிறைய பேச வேண்டும் என்று நினைப்பவன். அடுத்த தலைமுறைக்கு சொல்லிக்கொண்டே இருக்க வேண்டும். நாம் வாழும் பூமியில் சக மனிதனை மனிதாக நேசிக்க வேண்டும். அவர்களுக்கு காசு, கார் வாங்கி கொடுக்க போகிறோமோ? நேசித்து தான் போவோமே... அவர்கள் சொல்வது எல்லாம் நம்பும்படி இல்லை. நான் தவறு செய்யவில்லை. எனக்கும் தெரியும். என்னுடைய குழந்தைக்கும் தெரியும்.

    இவ்வாறு அவர் பேசுகிறார்.

    இந்த வீடியோ பதிவை வினோத் தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவேற்றியுள்ளார். இதனை வைத்தும் போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

    வினோத் மீது பாலியல் குற்றச்சாட்டு கூறிய பெண்ணிடம் போலீசார் தனியாக விசாரித்து வருகிறார்கள்.

    இச்சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.

    • திருச்சி அருகே தனியார் பள்ளியில் தாளாளர் அறையில் உள்ளே புகுந்த மர்ம நபர் அங்கிருந்த நகை, பணத்தை திருடி சென்றுவிட்டார்
    • உறவினர் இல்ல திருமண விழாவிற்கு சென்றதால் பாதுகாப்பு கருதி வீட்டில் இருந்த நகை மற்றும் பணம் ஆகியவற்றை பள்ளிக்கூடத்தில் உள்ள தனது அறையில் பீரோவில் வைத்துவிட்டு புறப்பட்டார்

    திருச்சி:

    திருச்சி மாவட்டம் லால்குடி அருேக உள்ள சிறுமையன்குடி காளியம்மன் கோவில் தெரு பகுதியைச் சேர்ந்தவர் ஆனந்த். இவரது மனைவி சாவித்திரி (வயது 52).

    இவர் லால்குடி சாந்தி நகர் பகுதியில் தனியார் தொடக்கப்பள்ளி ஒன்றை நடத்தி வருகிறார். இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு சாவித்ரி தனது உறவினர் இல்ல திருமண விழாவிற்கு சென்றார்.

    முன்னதாக பாதுகாப்பு கருதி வீட்டில் இருந்த 2¾ பவுன் நகை மற்றும் ரூ.30,000 ரொக்கப் பணம் ஆகியவற்றை பள்ளிக்கூடத்தில் உள்ள தனது அறையில் பீரோவில் வைத்துவிட்டு புறப்பட்டார்.

    இந்த நிலையில் மர்ம நபர்கள் அறை பூட்டை உடைத்து உள்ளே சென்று பீரோவில் இருந்த மேற்கண்ட நகை, பணத்தை திருடிக் கொண்டு சென்றனர்.

    இது பற்றி பள்ளி ஆசிரியர்கள் தாளாளர் சாவித்திரிக்கு தகவல் தெரிவித்தனர்.

    பின்னர் இதுபற்றி சாவித்ரி லால்குடி போலீசில் புகார் செய்தார். சப்-இன்ஸ்பெக்டர் ரமேஷ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    ×